Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 28 பிப்ரவரி, 2013

ரயில்வே பட்ஜட் : மக்களின் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்


மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ். சந்திரமொய்லி :
தத்கல், முன்பதிவு, அதிவிரைவு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு இல்லை என்று தெரிவித்துவிட்டு இவ்வாறு மறைமுகமாக 5 சதவிகித  கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். திருநெல்வேலி வழியாக நாகர்கோவில்-  பெங்களூர் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குறித்து கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது அக் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இதுபோல் திருச்செந்தூர்- பழனி இடையே பயணிகள் ரயில் இயக்குவதும்,  கன்னியாகுமரி- புதுச்சேரி இடையே ரயில் இயக்குவதும் வரவேற்கத்தக்கது.

திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் குணசிங் செல்லத்துரை:
திருநெல்வேலி- தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்படவில்லை. இலங்கையில்  கடற்கரை வழித்தடத்தில் ரயில்பாதைகள் அதிகமுள்ளன. அதுபோல் தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம் குறித்து பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில்  இல்லை. திண்டுக்கல்- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும்  திட்டம் குறித்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டிலும்  செய்யப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.

திருநெல்வேலி- நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எம்.விர்ஜின் ராஜ்:
நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே பகல் நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்க விடுத்து வருகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் மனுக்களை அளித்திருக்கிறோம். ஆனால் பட்ஜெட்டில் அது குறித்த  அறிவிப்புகள் இல்லை. திருநெல்வேலியிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, காலை 8.45 மணிக்கு பயணிகள் ரயில் சென்று சேருகிறது. பின்னர் மாலையில் 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்தப் பயணிகள் ரயில் இரவு 9 மணிக்கு  திருநெல்வேலியை அடைகிறது. பகல் நேரத்தில் இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. பகல் நேரத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கினால் அது பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். மேலும் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், ரயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் போதிய அறிவிப்புகள் செய்யப்படவில்லை. இதை திருப்திகரமான பட்ஜெட் என்று கூறுவதற்கில்லை என்றார் அவர்.

திருநெல்வேலி ரயில் நிலைய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சோனா. வெங்கடாசலம்:
வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கையான நாகர்கோவில்- பெங்களூர் தினசரி ரயில்  அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அறிவிப்புடன் நின்றுவிடாமல் இந்த ரயில் சேவையை விரைவாகத் தொடங்க வேண்டும். கட்டண உயர்வு இல்லாதது  வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில் தக்கல் கட்டண உயர்வு, அதிவிரைவு ரயில்  கட்டண உயர்வு, முன்பதிவு கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் குறைத்திருக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் ஜி.எஸ். ஜனார்த்தனன்:
கணினி மூலம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் 2 ஆயிரம் பேர் மட்டுமே டிக்கெட் பெறமுடியும் என்ற நிலையை மாற்றி, ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் டிக்கெட்  பெறும் வசதியை உருவாக்குவது வரவேற்கத்தக்கது. மேலும் ரயில்வே பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தும் திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட ரயில்கள் எப்போது வரும் என்று தெரியவில்லை. இந்த ரயில்களை அடுத்த சில மாதங்களிலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் 82வது பொது நிதிநிலை அறிக்கை: சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த ரூ.3,511 கோடி ஒதுக்கீடு, பழங்குடினியினர் நலனுக்கு ரூ.24,598 கோடி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோர் நல திட்டங்களுக்கு ரூ.41,561 கோடி ஒதுக்கீடு


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்தியாவின் 82வது பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய சிதம்பரம், சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிவு நிலையில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியில் கொண்டு வருவதே மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைவது தற்போது கடினமான பணியாக உள்ளது என்று கூறினார்.

பட்ஜட் விவரங்கள் :
• மத்திய விற்பனை வரி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வழஙகப்படும்.

• எலக்ட்ரானிக்ஸ் சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு சுங்க வரி விலக்கு.

• 2025ஆம் ஆண்டு இந்தியா ரூ.250 கோடி பொருளாதார நாடாக உருவாகும்.

• 2017ஆம் ஆண்டு இந்தியா உலகளவில் 7வது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்.

வேளாண் விவசாய நிலங்கள் விற்பனையில் வரி விலக்கு.

பயணிகள் எடுத்துச் செல்லும் தங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிச் சலுகை ஆண்களுக்கு ரூ.50 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ரூ.18,000 கோடிக்கு புதிய வரிகள்
• 800 சிசி திறனுக்கு மேல் உள்ள வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரி அதிகரிப்பு

• வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரி விதிப்பு 75%ல் இருந்து 100% ஆக உயர்வு.

• திரைப்படத் துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு

• குளிர் சாதன வசதியுடன் கூடிய உணவகங்களுக்கு சேவை வரி

• நேரடி வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.13,300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• மறைமுக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.4,700 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• இதன் மூலம் ரூ.18,000 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

செல்போன் வரி உயர்வு
• ஆடம்பர வாகன இறக்குமதி வரி உயர்வு

• சிகரெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி உயர்வு

• கப்பல் கட்டும் தொழிலுக்கு உற்பத்தி வரி விலக்கு

• எஸ்யுவி வகை கார்களுக்கு உற்பத்தி வரி அதிகரிப்பு

• வெள்ளி உற்பத்திக்கு 4% உற்பத்தி வரி

• செல்போன்களுக்கான உற்பத்தி வரியில் மாற்றமில்லை.

• ரூ.2000க்கு கீழ் உள்ள செல்போன்களுக்கு வரியில் மாற்றமில்லை.

• ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள மொபைல்போன்களுக்கு 6% வரி

 • வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாகவே நீடிக்கிறது.

• ரூ.1 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரியும் விதிக்கப்படும்.

• வரி ஏய்வு தடுப்புச் சட்டம் ஏப்ரல் 2016 முதல் அமலுக்கு வரும்.

• விவசாயப் பொருட்களுக்கு பண்டக சாலையில் வைப்பதற்கான வரி விலக்கு

• இறக்குமதி செய்யப்பட்ட செட்-டாப் பாக்ஸ்களுக்கு வரி 5% முதல் 10% ஆக உயர்வு

• 50 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள் விற்பனையில் 1% வரி பிடித்தம்

• கலால், சுங்க வரிகளில் மாற்றமில்லை.

• தோல் தொழில் நிறுவன இயந்திரங்களுக்கு வரி குறைப்பு.

ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு
• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான 10% கூடுதல் வரி வசூல் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.

• பணக்காரர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம்

• ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெருவோரின் வரியில் ரூ.2000 வரை விலக்கு அளிக்கப்படும்.

• காப்பீட்டுக்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
• குழந்தைகளுக்கான தேசிய நல நிதி உருவாக்கப்படும்.

• உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

• வரிக் கொள்கையை மறு ஆய்வு செய்ய புதிய ஆணையம்.

• தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி

• வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 3.4-3.8 சதவீதம்.

• நேரடி வரிகளிலும் மாற்றமில்லை.

•  கல்விக்கான கூடுதல் வரி விதிப்பு தொடரும்.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அணுமின் சக்தி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு கூடுதல் நிதி.

• இயற்கை எரிவாயு விலை நிர்ணயிப்பில் புதிய கொள்கை.

• எப்எம் ரேடியோ சேவைக்கு 839 உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படும்.

•அஞ்சல் துறை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

• அஞ்சல் துறை திட்டத்துக்கு கூடுதலாக ரூ.530 கோடி ஒதுக்கீடு.

• கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

• இடிஎப் திட்டங்களில் ஓய்வூதியை நிதியை முதலீடு செய்ய அனுமதி

• 10 லட்சம் மக்கள் வசதிக்கும் நகரங்களில் எல்ஐசி அலுவலகம்.

• வங்கிகள் தரும் விண்ணப்பங்களே எல்ஐசிக்கும் பொருந்தும்.

• செபிக்கு கூடுதல் அதிகாரம்.

• அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏடிஎம் வசதி. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும்.

• நுண் கடன் திட்டங்களை விநியோகிக்க வங்கி தொடர்பாளர்களுக்கு அனுமதி

• பாறை எரிவாயு அகழ்வாய்வுக்கு புதிய கொள்கை.

• கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் வரும் நிதியாண்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

•. கல்வித் துறை மேம்பாட்டுக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

பெண்களுக்கு என  தனி வங்கி
• பெண்களுக்கென முதல் தனி வங்கி. அந்த வங்கியில் முதற் கட்டமாக ரூ.1000 கோடி முதலீடு

வரும் அக்டோபர் மாதத்துக்குள் பெண்களுக்கான தனி வங்கி துவக்கப்படும்.

• ஊரக தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

• உணவுப் பாதுகாப்புத் திட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

• குடிநீரை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு
நிலக்கரி இறக்குமதி செய்வது இந்தியாவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

• நிலக்கரி இறக்குமரி கவலை அளித்து வருகிறது.

• ஜவுளித் துறைக்கு ரூ.2400 கோடி ஒதுக்கீடு.

• ஜவுளி மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு

• ராஞ்சியில் இந்திய உயிரி தொழில்நுட்ப மையம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.

• பொது வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்
தூத்துக்குடியில் புதிய துறைமுகம் உருவாக்கப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• குஜராத், மகாராஷ்டிராவில் இரு தொழில் நகரங்கள் அமைக்கப்படும்.

• ரூ.1650 கோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும்.

• பயோடெக்னாலஜி கூடங்கள் சட்டீஸ்கரில் அமைக்கப்படும்.

• 6 மருத்துவக் கல்லூரிகள் துவங்க ரூ.1650 கோடி ஒதுக்கீடு

• ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு ஒரு லட்சம் வரிச் சலுகை

• தூத்துக்குடியில் புதிய துறைமுகம். துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.7500 கோடி ஒதுக்கீடு

• விலைவாசி உயர்வுக்கு ஏற்ப லாபம் தரும் கடன் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவில் கல்வித் துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

• வரும் ஆண்டில் கல்விக்காக ரூ.65,867 கோடி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 17% அதிகமாகும்.

• பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.13,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அனைவருக்கும் கல்வி திட்டத்தை திறம்பட செயல்படுத்த ரூ.27,258 கோடி ஒதுக்கீடு.

சித்தா, ஆயுர்வேதத்துக்கு ரூ.1,069 கோடி ஒதுக்கீடு

தேசிய சுகாதார இயக்கத்தில் ஆயுர்வேதம், சித்தாவை செயல்படுத்த ரூ.1,069 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• சுகாதாரத் துறைக்கு ரூ.37,330 கோடி ஒதுக்கீடு.

• ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு ரூ.80,200 கோடி ஒதுக்கீடு.

• குறுகிய கால பயிர் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடரும்.

•  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பது முக்கிய குறிக்கோளாக எடுத்து செயல்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், குழந்தைகள் நலனுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• மனித வள மேம்பாடுக்காக ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த ரூ.3,511 கோடி ஒதுக்கீடு

•. பழங்குடினியினர் நலனுக்கு ரூ.24,598 கோடி ஒதுக்கீடு.

• தாழ்த்தப்பட்டோர் நல திட்டங்களுக்கு ரூ.41,561 கோடி ஒதுக்கீடு

•. குழந்தைகள் நலனை மேம்படுத்த ரூ.97,134 கோடி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

• இந்தியாவின் உணவு பொருள் பணவீக்கம் கவலை அளிப்பதாக உள்ளது.

•வெளிநாட்டில் இருந்து வரும் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிப்பால், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது.

•பொருளாதாரம் தொடர்ந்து சவாலானப் பணியாகவே உள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்.

•இந்தியாவை விட சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகள் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன.

• 2012-13ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

பிளஸ்–2 தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது 8½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்: சிறுபான்மை மொழிகளிலும் வினாத்தாள்கள்


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 8½ லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

8½ லட்சம் பேர்
பிளஸ்–2 தேர்வு  (வெள்ளிக்கிழமை) தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5,769 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் மாணவிகள். அதாவது மாணவர்களை விட 56 ஆயிரத்து 958 மாணவிகள் கூடுதலாக தேர்வில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக 2020 தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை மாநகரில் 406 பள்ளிகளில் இருந்து 51 ஆயிரத்து 531 பேர் 140 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 23 ஆயிரத்து 717 பேர். மாணவிகள் 27 ஆயிரத்து 814 பேர் ஆவர். புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 919 மாணவிகள் உள்பட 12 ஆயிரத்து 611 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். பள்ளி மாணவர்களைத்தவிர, தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை
கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் உள்பட இதர மாற்றுத்திறனாளிகளுக்கான சொல்வதை எழுதுபவர் ஆகியோருக்கு தேர்வில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேர்வுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும் ஒரு மொழிப்பாடம் கிடையாது.

தேர்வுக்கான வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ளதா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து அமைக்கப்பட்டு இருக்கின்றன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வினாத்தாள் காப்பு மையங்களிலும் கூடுதல் கண்காணிப்புக்கு இரவு காவலர்கள் பணியாற்றுவார்கள். ஆய்வு அதிகாரிகள் அடிக்கடி மையங்களுக்கு சென்று கண்காணிப்பார்கள்.

மின்வெட்டை சமாளிக்க ஜெனரேட்டர் வசதி
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும் முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் நல்ல முறையில் செய்யவும் பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் போலீஸ் எஸ்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி, சப்–கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். தேர்வுக்குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடுகள், எதுவும் நடைபெறா வண்ணம் கண்காணிப்பார்கள்.

பறக்கும் படைகள்
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்களும் மாவட்டங்களில் தேர்வு நாட்களில் கண்காணிப்பு குழுக்களுடன் தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவார்கள். தேர்வு மையங்களை பார்வையிட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். ஒருசில மையங்களில் கண்காணிப்புக்குழுவினர் தேர்வு தொடங்கி முடியும் வரை அங்கேயே தங்கி தேர்வு பணிகளை பார்வையிடுவார்கள்.

தொழிற்படிப்பு சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 6 பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. அந்த தேர்வுகளின்போது, அனைத்து தேர்வு மையங்களிலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவார்கள். மேலும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு பார்வையாளர்களாக தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள்.

காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை
எக்காரணம் கொண்டும் தேர்வு நேரத்தின்போது அந்த பள்ளியைச்சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது. தேர்வின்போது காப்பி அடித்தல், பிட் அடித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்தகொள்ளல், விடைத்தாள் மாற்றல் செய்தல், ஆள்மாறாட்டம் செய்வது ஆகிய செயல்பாடுகள் ஒழுங்கீனமாக கருதப்பட்டு, அத்தகை செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமுறைகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையம் ரத்துசெய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வர்களின் போட்டோக்கள் பெயர் பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் அச்சிடப்பட்டு உள்ளது.

சிறுபான்மை மொழிகளில் வினாத்தாள்
தமிழ்வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 5 லட்சத்து 59 ஆயிரத்து 964 மாணவ–மாணவிகள் தமிழ்வழியில் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் பகுதி–3–ல் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களையும் தமிழ்வழியோடு ஆங்கிலவழி வினாக்களும் ஒரே வினாத்தாளில் இடம்பெறும் வண்ணம் இருமொழி வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படும். அந்த வினாத்தாள்களில் ஆங்கிலவழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

40 கைதிகள்
ஜெயில் கைதிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிடும் வகையில் ஜெயிலிலே கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வுக்கு சென்னை புழல் ஜெயிலில் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு அங்கு 40 கைதிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்.


புதன், 27 பிப்ரவரி, 2013

உத்தர பிரதேசத்தில் இறைச்சி ஏற்றுமதி ஆலையில் தீ விபத்து:ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் இறைச்சியை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அலானா குரூப் ஆலையில் நேற்று இரவு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ, இறைச்சி பதனிடும் அறைகள் மற்றும் குளிர்சாதன அறைகள் என முக்கியமான பகுதிகளுக்குப் பரவியது. பின்னர் பதப்படுத்துவதற்கான ரசாயனப் பொருட்கள் மற்றும் எரிபொருள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கும் பரவியது. இதனால் யாரும் நெருங்க முடியாத படி தீ கொளுந்துவிட்டு எரிந்தது.இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

பேரழிவை ஏற்படுத்திய இந்த தீ விபத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என தெரிகிறது.

டிரான்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் & மேனேஜ்மென்ட் படிப்பு


ரயில்வே அமைச்சகம் மற்றும் தொலைதூரக் கல்விக் கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற புதுதில்லியில் உள்ள Institute of Rail Transport-ல் நடைபெறும் 1 வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்பு: Diploma (Transport Economics and Management)

தகுதி: Transport. Transport Research and Logitics Management பிரிவுகளில் பணிபுரிய, சம்பந்தப்பட்ட பிரிவில் ஏதாவதொரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மத்திய/மாநில அரசு ஊழியர்கள், தற்போது பணி புரியும்/ஓய்வு பெற்ற ராணுவத்தினர் போன்றோர் +2 தேர்ச்சியுடன், மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிய இணையதளத்தை அணுகலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழு விவரங்களுக்கு www.irt-india.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

பிரதமர் மன்மோன் சிங், அடுத்த மாதம்(மார்ச் ), ஐக்கிய அரபு எமிரேடிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

 30 ஆண்டுகளுக்குப் பின், இந்தியப் பிரதமர்களில் ஒருவர், அந்த நாட்டிற்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகள் பங்கேற்கும், "பிரிக்ஸ்' மாநாடு, அடுத்த மாதம், 26 மற்றும் 27ம் தேதிகளில், தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க, டர்பன் செல்லும் வழியில், ஐக்கிய அரபு எமிரேடிற்கு செல்ல, பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டு உள்ளார்.

இருப்பினும், இது குறித்து, இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திரா பிரதமராக இருந்தபோது, 1981ல் ஐக்கிய அரபு  எமிரேடு சென்றார். அதன்பின், இந்திய பிரதமர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம் ( IIPMB )


பிளான்டேஷன் துறையை, மேலாண்மைக் கல்வி மற்றும் பயிற்சியின் மூலமாக, நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான், பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்.

ஒரு தீவிரமான கல்வி நிறுவன - தொழிற்கூட ஒத்துழைப்பு மாதிரி அடிப்படையிலான, ஆசிய அளவில், ஒரு பிரத்யேக மேலாண்மை கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது.

கடந்த 1993ம் ஆண்டு ஒரு சுயாட்சி கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது.

நிறுவியதன் நோக்கம்
இக்கல்வி நிறுவனம், கீழ்கண்ட 5 நோக்கங்களுக்காக நிறுவப்பட்டது.

* திட்டமிட்டு செயல்படக்கூடிய பொதுநல மன்றம்

* சிறந்த தலைவர்களை உருவாக்கல்

* சிறந்த மேலாளர்களின் தொடர்ச்சியான மேம்பாடு

* செயல்பாட்டு அடிப்படையிலான ஆராய்ச்சி

* அறிவார்ந்த சுயசார்பு மற்றும் அறிவுசார் முதலீட்டை அதிகரித்தல்.

இதன் செயல்பாடுகள்
* எதிர்கால அறிவுத் தேவைகளை நிறைவுசெய்ய, வேளாண்-வணிகம் மற்றும் பிளான்டேஷன் மேலாண்மை என்ற பெயரில், முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

* பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகம் தொடர்பான வொர்க்ஷாப்கள் மற்றும் செமினார்களை நடத்துகிறது.

* தொழில்ரீதியிலான முதலாளிகள், மேலாளர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் ஆகியோர் பயனடையும் பொருட்டு, குறுகியகால எக்ஸிகியூடிவ் படிப்புகளை வழங்குகிறது.

* செயல் அடிப்படையிலான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நிபுணர்களை பரிமாறிக்கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, போஸ்ட் டாக்டோரல் ஆராய்ச்சிகளுக்கும் உதவி புரிகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்
140க்கும் மேற்பட்ட ஜர்னல்கள், 8,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட இன்னபிற சிறப்பான வசதிகளைக் கொண்ட நூலகமும், 30க்கும் மேற்பட்ட அதிவேக ப்ராசஸர்கள் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட கணினி ஆய்வகமும், பல்வேறான சிறப்பு உபகரணங்களைக் கொண்ட ஆய்வகமும் இக்கல்வி நிறுவனத்தில் உள்ளன.

ஆராய்ச்சி நடவடிக்கைகள்
கொள்கை, மேலாண்மை மற்றும் இயங்குதல் விஷயங்களில், ஆழமான ஆராய்ச்சி திட்டத்தை இக்கல்வி நிறுவனம் கொண்டுள்ளது. தொழில்துறை, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சித் திட்டங்களை இக்கல்வி நிறுவனம் மேற்கொள்கிறது. இக்கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி பேப்பர்கள், கீழ்காணும் பிரிவுகளில் விரிந்துள்ளன. அவை,

Policy and managerial issues related to specific commodity.
Functional area specific (Marketing, Finance, HRD, Strategic Management,
Operations Management, Economics, Extension Management, etc)
Management Thought, Management Theory and Social Discourse.

மேலும், இந்நிறுவனத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளின் பரந்த நிலைகள் மற்றும் கருத்தாக்கங்களை பின்வரும் தலைப்புகளின் மூலம் அறியலாம். அவை,

Global Competitiveness of the Plantation Industry
Productivity & Quality
Market Structure, Market Intelligence and Market Information
Brand Building and New Product Innovation
E-Commerce, National Commodity Information Grid
Improving Competitiveness of Micro Enterprises
Sustainable Plantation Management
Estate Performance Agreement Systems
Commodity Futures
Extension Management and Grassroots Institution building
Agri-business Development
Social Development Contribution of Indian Plantation Industry
HRD and Work Culture Development
Social Concerns of Plantation Industry: Absenteeism, Alcoholism, etc.
Knowledge Management in Plantation Industry
Risk Management
Cost Competitiveness

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளின் விபரங்கள்
PGP - ABPM எனப்படும், முதுநிலை டிப்ளமோ படிப்பானது, பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகத் துறையில் நுழைபவர்களுக்கான ஒரு மேலாண்மைப் படிப்பாக வழங்கப்படுகிறது. மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நவீன ஐடியாக்கள் மற்றும் நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவதே இப்படிப்பின் நோக்கம். இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது தொழில்துறையில் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

காலஅளவு - இப்படிப்பின் காலஅளவு 24 மாதங்கள். இது ரெசிடென்ஷியல் படிப்பாகும். இப்படிப்பு AICTE அங்கீகாரம் பெற்றது மற்றும் எம்பிஏ படிப்பிற்கு நிகரானது.

மாணவர் சேர்க்கை நடைமுறைகள்
இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, பொது சேர்க்கை முறை மற்றும் Sponsored சேர்க்கை முறை ஆகிய 2 முறைகளில் நடத்தப்படுகிறது. இளநிலைப் பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்(SC/ST 45%) பெற வேண்டும். NRI/PIO மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

CAT/MAT/ATMA/CMAT ஆகிய தேர்வுகளில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களே விண்ணப்பிக்கலாம். உங்களின் கல்வி செயல்பாடுகள், தேர்வு மதிப்பெண்கள், எழுத்துத் திறன், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இடஒதுக்கீட்டு முறை உண்டு. மேலும், உதவித்தொகை திட்டங்களும் உண்டு.

கல்விக் கட்டணம்
2 ஆண்டுகளுக்கான கல்வி நிறுவனக் கட்டணம் மட்டும் ரூ.3.5 லட்சங்கள். இதை 2 தவணைகளாக கட்டலாம். வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் NRI/PIO Sponsored மாணவர்களுக்கான கட்டணம் 10,500 அமெரிக்க டாலர்கள். இக்கட்டணங்களில், உணவு, இருப்பிடம், மின்சாரம், கணினி, புத்தகங்கள், கள ஆய்வு மற்றும் இதர செலவினங்கள் அடங்காது.

விரிவான விபரங்களுக்கு: http://www.iipmb.edu.in/index.php?option=com_content&view=article&id=62&Itemid=173


நான் சொன்னது கொஞ்சமோ கொஞ்சம்.....!


பேராசிரியர் K.M.காதர் மைதீன் அவர்களை பற்றிய ஒரு படமும் செய்தியும் சில நாட்களாக முக நூலில் பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறது.. சந்தோசத்துக்குரிய செய்தி அது.. நானும் கொஞ்சம்... சொல்ல ஆசைப் படுகிறேன்.

அவரோடு 2004ல் தான் எனக்கு முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மயிலாடுதுறையில் நடந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். உணவு இடைவேளையில் சற்று ஓய்வாக இருந்தவரை சுற்றிலும் கட்சி பெரியவர்கள். சற்றே தயங்கித் தயங்கி அவர் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு நமது முற்றம் இதழுக்காக ஒரு பேட்டி தர முடியுமா என்று கேட்டேன்..சில இதழ்களையும் கொடுத்தேன். பார்த்துவிட்டு, ஒப்புக் கொண்டார். எவ்வளவு பெரிய தலைவர்..உடனே ஒப்புக் கொண்டாரே என்று எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை . எனக்கு உதவியாக இருந்தவர் அன்புத் தம்பி அப்துல் அஜீஸ் தாயிப் .அவர்தான் போட்டோவெல்லாம் எடுத்தார். அரை மணி நேரம் அவரது ஓய்வைக் கெடுத்த புண்ணியத்தை நான் கட்டிக் கொண்டேன். அதன் பிறகு எங்கள் தொடர்பும் நட்பும் வளர்ந்தது.அடிக்கடி சந்தித்தோம். தலைவரை பலமுறை பேட்டி எடுத்து நமது முற்றத்தில் போட்டிருக்கிறேன். அதன் பிறகு பேராசிரியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் இருப்பார். அப்போது நான் போன் செய்தால் எடுக்க மாட்டார். ஆனால் வெளியே வந்தவுடன் போன் செய்து விவரம் கேட்பார். அத்தனை பணிவு. 2007ல் சென்னையில் ஒரு மாநாடு. தலைவர் மேடையில் அமராமல் கீழே முன் வரிசையில் உட்கார்ந்து அமைச்சர் மற்றும் பிரமுகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். நான் நிகழ்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கண்டதும் உடனே எழுந்து வந்த தலைவர் என் தோளில் உரிமையோடு கை போட்டு " அபு ஹாஷிமா .. நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார் ....அவரை பேச அழைக்கும் வரை. "ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு தலைவர் இப்படியும் மரியாதை கொடுப்பாரா?"

அந்த " மனிதர்" போகும் பாதையை அதிசயமாக பார்த்து நான் ஸ்தம்பித்து நின்றேன்.

மற்றொரு முறை " நபிகள் நாயகக் காப்பியம் " எழுதியதற்காக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் சென்னையில் வைத்து

எங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அந்த விழாவுக்கு வருகை தந்த தலைவர் எல்லோரும் அழைத்த பிறகும் மேடையில் ஏறாமல் முன் வரிசையில் அமர்ந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் பேசுவதை குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அவரது வாழ்த்து எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எங்கேயும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அவரது உயர்ந்த குணத்திற்கு பல சான்றுகளை நான் அவரிடம் நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் நலனுக்காக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டி இடுவதையே தவிர்த்த தானைத் தலைவர்அவர். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோருக்கும் தான் சொந்தமானவன் என்று பெருமிதமாகச் சொல்லும் பண்புள்ளவர்.

எல்லா செல்வமும் செல்வாக்கும் நிறைந்த ஒரு மனிதர் ஒரு தலையணையை வைத்துக் கொண்டு கிடைத்த இடத்தில் உறங்குகிறார் என்றால் அவர் மனது சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அச்சமில்லை என்பது அதன் விளக்கம்.

இப்படிப்பட்ட குண நலன்கள் உள்ள "மனிதர்"களைத்தான் உலகம் " மாமனிதர் " என்று அழைக்கிறது..மரியாதை செய்கிறது.

பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் "பெரிய மனிதர்" என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் சமுதாயத்துக்காக பணியாற்றும் வலிமையையும் நமது பேராசிரியர் அவர்களுக்கு தந்து அல்லாஹ் அருள் புரிவானாக..ஆமீன்.

 நான் சொன்னது கொஞ்சமோ கொஞ்சம்......!

-----------அபு ஹாசிமா வாவர்

17 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் மந்திரி ரயில்வே பட்ஜட் தாக்கல் :தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள்


 17 ஆண்டுகளுக்குப் பின்  காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவர் ரயில்வே துறை அமைச்சராகி இன்று முதல் பட்ஜட் தாக்கல் செய்யப்பட்டது  .2013 - 2014 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்து  உரையாற்ற துவங்கியதும், ரயில்வே துறை இந்த நாட்டின் முக்கிய பணியை செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பது ரயில்வே துறை எனறார்.

அமைச்சர்  பன்சால் உரையில் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

* ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே துறையில் 22 ஆயிரத்து 500 கோடி இழப்பு

* பட்ஜெட் : ரயில்வே பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்

* ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது; பன்சால்

* 17 ஆண்டுக்கு பின் காங்., தாக்கல் செய்யும் பட்ஜெட்

* யானைகள் பலியை தடுக்க முழுக்கவனம்

* புதியபாதைகள் - மின்வசதி பெருக்கப்படும்

*10 ஆயிரத்து 700 ஆள் இல்ல லெவல் கிராசிங்குகளை நீக்க முடிவு

* கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இழப்பை ஈடுகட்ட முடியும்

* சமீப காலங்களில் ரயில்வே விபத்துக்கள் குறைந்துள்ன

* ரிசர்வேஷன் அலர்ட் எஸ்.எம்.எஸ் திட்டம் விரிவுப்படுத்தப்படும்

*மாறறுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணியிடம்

*தரமான உணவு வழங்கிட விலை உயர்த்த திட்டம்

* இ டிக்கெட் பணிகள் டிசம்பருக்குள் முடிவைடயும்


* ரயில் நீர் உற்பத்தி நிலையம் 6 இடங்களில் அமைப்பு

*ஆசாதி ரயில் சேவை இயக்க திட்டம்

* ரயில்வே உணவு தரத்தை பரிசோதிக்க கூடுதல் கவனம்

* உ பி,யில் ரயில் வார்ப்பட தொழிற்சாலை

* துறைமுகம்- ரயில்வேஇணைக்க 3ஆயிரத்து 800 கோடியில் திட்டம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்கலேட்டர்

* இணையதள முன்பதிவு இரவு 11. 30 வரை நீடிப்பு


ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு புதிய ரயில்கள்

தஞ்சாவூர்- புதுக்கோட்டைக்கு புதிய ரயில்பாதை

67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில் 26 புதிய பாசஞ்சர் ரயில்

ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே பட்ஜெட் திட்ட மதிப்பீடு 63 ஆயிரத்து 363 கோடி

* ரயில்வே கட்டணம் மூலம் 42 ஆயிரத்து 210 கோடி திரட்ட முடிவு

* டீசல் மூலம் வரும் ஆண்டில் 5 ஆயிரத்து 100 கோடி இழப்பு வரும்

*சரக்கு ரயில் கட்டணம் மூலம் 93 ஆயிரத்து 554 கோடி திரட்ட முடிவு

* விளையாட்டு வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை

*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* 1. 5 2 லட்சம் பணியிடங்கள் நிரப்ப இலக்கு

* ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க ரூ . 300 கோடி

*ரயில் கட்டமைப்பில் புதிதாக அருணால் சேர்ப்பு

* துறைமுகம்- ரயில்வே ஸ்டேஷன் இணைக்க ரூ 3, 800 கோடி

* ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்த ஆயிரம் கோடி

* செகந்திராபாத்தில் ரயில்வே நிதி நிர்வாகவியல் கல்லூரி

* சூரிய மின்சக்தி மூலம் ஆயிரம் ரயில்வே கேட் செயல்படுத்த திட்டம்


*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* கோவை - மன்னார் குடிக்கு புதிய ரயில்

*சென்னை- ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில்

*தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை

* தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள்

தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவைகள்... சென்னை பீகானுருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை காரைக்குடி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் வாராந்திர ரயில் , சென்னையிலிருந்து சேலம் வழியாக பழநிக்கு தினசரி ரயில், கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து வேளாங்கன்னிக்கு புதிய ரயில், சென்னை- தஞ்சை இடையே தினசரி ரயில், சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் , நாகையிலிருந்து-பெங்களூருக்கு மதுரை திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளார்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!


இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!
பண்ணை முதலாளிகளுக்குத்தான் 
பட்டு மெத்தையின் அவசியம்!
பாமரர்களின் ஊழியர் இவர்.
பாயே இவருக்குப் போதுமானது!

இதில் அதிசயம் எதுவுமில்லை!
தலைக்கனம் இருந்தால்தானே 
இறக்கிவைக்க தலையணை தேவை?

நீண்ட துயில் கொள்ள நேரமுமில்லை!
தூங்கும் சமுதாயத்தை 
தட்டியெழுப்பும் கடமை 
இவருக்கு இருப்பதால் !

சட்டை கசங்குமே எனும் சங்கடமில்லை!
சமூகம் கசங்காமல் இருந்தால் சரிதானே!

பாதுகாப்பு குறித்த கவலையில்லை!
படைத்தவன் கிருபையை 
பற்றி நடப்பதால்!

இவரைப்போல் எவருமில்லை!
இதயம் முழுதும் ஈரம் இருப்பதால்!

அன்புடன் 
கவிமகன் காதர் 
காயிதே மில்லத் பேரவை 
கத்தர்.

தலைவிரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை மேட்டூர் அணை கரையோர மக்கள் அவதி


சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அடிவாரத்தில் உள்ள காவிரியாற்றில் இருந்து தான் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு தினமும், 15.5 கோடி லிட்டர் குடிநீர் எடுப்பதற்கான தனிகுடிநீர் திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

தவிர, வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நாள்தோறும், 21.5 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, மேட்டூர் தொட்டில்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. மேட்டூர் அணை நீர் பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்கும் நிலையில், அணை கரையோர கிராமங்களில் மட்டும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது.

மேட்டூர் அணை கரையோரம் உள்ள கொளத்தூர் ஒன்றியத்தில், 14 பஞ்சாயத்து உள்ளது. காவிரி கரையோரம் உள்ள நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி தவிர, 12 பஞ்சாயத்துகளிலும் வறட்சி நீடிக்கிறது. இந்த பஞ்சாயத்து மக்களின் குடிநீர் தேவையை போக்க, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நாள் ஒன்றுக்கு, 18 லட்சம் முதல், 22 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், கொளத்தூர் பேரூராட்சிக்கு, எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த குடிநீர் கிராம மக்களுக்கு போதுமானதாக இல்லை. சுழற்சி முறையில், பஞ்சாயத்துக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், கிராமங்களில் அதிகபட்சமாக, இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், கிராமபுற மக்கள் சுகாதாரமான, சுத்திகரித்த குடிநீர் இல்லாமல், உப்பு கலந்த போர்வெல் குடிநீரையே குடிக்கின்றனர். இதனால், கிராமப்புற பொதுமக்கள் ஏராளமானோர் கிட்னி செயல்இழப்பு, எலும்புகள் பலவீனம் உள்பட பல்வேறு பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர்.

குடிநீர் பற்றாக்குறை குறித்து பண்ணவாடி பஞ்., தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
பஞ்சாயத்துக்கு வினியோகம் செய்யும் குடிநீருக்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு முன்பு மாதம், 14 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினோம். தற்போது, 7,000 ரூபாய் மட்டுமே செலுத்தும் அளவுக்கு குடிநீர் சப்ளை பாதியாக குறைந்து விட்டது.

அரசு, பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேட்டூர் அணையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு குடிநீர் எடுத்து செல்கிறது. அணை கரையோர கிராமங்களில் இன்னும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நீடிப்பது வேதனையளிக்கிறது. அணை கரையோர கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, அரசு புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் இரண்டாவது, நாட்டின் முதல் மோனோ ரயில் மும்பையில் ஆகஸ்டில் செயல்படும்


"நாட்டின், முதல் மோனோ ரயில், மும்பையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மோனோ ரயிலின் சிறப்பம்சங்களாவன: உலகின், இரண்டாவது நீண்ட தூர மோனோரயில், இதுவாகும். ஜப்பானின், ஒசாகோவில், 23.8 கி.மீ.,க்கு மோனோ ரயில் இயக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக,19.54 கி.மீ., தூரம், மும்பை மோனோ ரயில் இயக்கப்படும்.

மோனோ ரயிலில், பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படாது; மின்சாரத்தில் இயங்கும். எனினும், சாதாரண மின்சார ரயில்களை விட, 25 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும் திறன் கொண்டவை. அதிகபட்சமாக, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயில், ஓடும் போது, தானாக மின்சாரத்தை தயாரிக்கும் திறன் கொண்டது. முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட, நான்கு பெட்டிகளைக் கொண்டது. ரயில் பெட்டியில்,18 பேர் அமர்ந்து பயணிக்கலாம்; 124 பேர் நின்று கொள்ளலாம்.

அபாய காலங்களில், பயணிகள், ஓட்டுனருடன் தொடர்பு கொள்ள முடியும். பெட்டிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பச்சை, நீலம், வெளிர் சிவப்பு ஆகிய நிறங்களில், ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட் டுள்ளன. அபாயகரமான வளைவுகளில், அசம்பாவிதங்களை தவிர்க்க, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சாதாரண ரயில்களைப் போல் இல்லாமல், இதில், இருக்கைகள் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.மும்பை மோனோ ரயில் குறித்து, மகாராஷ்டிர மாநில தலைமை செயலர், ஜே.கே.பந்தியா கூறியதாவது: மும்பை மோனோ ரயில் திட்டம், 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பு சான்றிதழுக்காக காத்திருக்கிறோம். கிடைத்ததும், ஆகஸ்ட் முதல் இயக்கப்படும்.3,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மோனோ ரயில் திட்டம், முதற்கட்டமாக, செம்பூர் முதல், வடாலா வரை, 8.8 கி.மீ.,க்கு இயக்கப்படும். இவ்வாறு, பந்தியா தெரிவித்தார்.

நிலவியல் படிப்பு வழங்கும் கல்லூரிகள்


தமிழ்நாட்டில் நிலவியல் படிப்பு வழங்கும் கல்லூரிகள்:

* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வருட படிப்பாக பி.எஸ்., ஜியோ சயின்ஸ், ஜந்து வருட படிப்பாக எம்.எஸ்சி., ஜியோ சயின்ஸ், ஆறு வருட படிப்பாக எம்.டெக்., ஜியோ-டெக்லானஜி அன்ட் ஜியோ-இன்பர்மேடிக்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

இணையதளம்: www.bdu.ac.in

* பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

இப்பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

தொலைபேசி: 0427-2345766, 2345520, 2346277

இணையதளம்: www.periyaruniversity.ac.in

* பிரசிடென்சி கல்லூரி, சென்னை

தொலைபேசி: 044-28544894

இக்கல்லூரியில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

இணையதளம்: www.presidencychennai.com

* நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

இக்கல்லூரியில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

தொலைபேசி: 0431-3202971

இணையதளம்: www.nct.ac.in

*  வி.ஓ சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி

இக்கல்லூரியில் பி.எஸ்சி.,ஜியாலஜி படிப்பு வழங்கப்படுகின்றன.

தொலைபேசி: 0461-320492

இணையதளம்: www.voccollege.ac.in

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

வானியல் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்


வானியல் படிப்பு என்பது அறிவியல் வகையை சார்ந்த படிப்பு ஆகும். வானியல் படிப்பு அதிசயமும், ஆச்சரியமும் மிகுந்தவை. வானத்தில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள், வீண்மீன் பற்றி விரிவாக இப்படிப்பில் விளக்கப்படுகிறது. இத்துறையில் நாளுக்கு நாள் பல புது புது விஷயங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.  இத்துறையில் ஆராய்ச்சியை மையமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் இத்துறையில் தனி முத்திரையை பதிக்கலாம்.

வானியல் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

* மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

Ph-0452?2458471,

Website: www.mkuniversity.org

* ஓஸ்மானிய பல்கலைக்கழகம், ஹைத்ராபாத் - 500007.

எம்.எஸ்சி.,(வானியல்)

Website: www.osmania.ac.in

* பிசிகல் ரிசர்ச் லெபாரட்டரி, அஹமதாபாத் - 380009, குஜராத்

Ph- 079-26314000

Website: www.prl.ernet.in

* ராமன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

சி.வி.ராமன் அவென்யூ, சதாசிவ நகர், பெங்களூர் - 560080.

Ph - 080-23610122

Website: www.rri.res.in

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூர் - 560012

Ph - 080-22932001

Website: www.iisc.ernet.in

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்,

II Block. Koramangala, Bangalore - 560034, Karnataka,

Ph - 080-25530672

Website: www.iiap.res.in

* ரேடியோ ஆஸ்ட்ரானமி சென்டர்

P.B. No: 8, Ootacamund - 643001

Ph - 0423-242032

Website: http://rac.ncra.tifr.res.in

* இன்டர் பல்கலைக்கழகம், சென்டர் பார் ஆஸ்ட்ரானமி அன்ட் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்

Post Bag no.4. Ganeshkhind, Pune - 411007

Ph - 020-25604308

Website: www.iucaa.ernet.in

* ஆந்திரா பல்கலைக்கழகம்,

விசாகப்பட்டினம் - 530003

Website: andhrauniversity.info

சனி, 23 பிப்ரவரி, 2013

தங்கம் தகடாக மாறாது...!

என்ன கிடைக்கும்?
முஸ்லிம் லீகையும்,முஸ்லிம் லீக் தலைவர்களையும்
வறுத்தெடுத்து விமர்ச்சிக்க...
ஆஹா கிடைத்ததே!
தின மலத்தின் ஒரு நாள் மலம்,
படம் போட்டு தந்தோமே சமுதயத்திற்கு...

சந்தையில் எடுப்பட்டது
சமுதயத்திற்கு சந்தேகமும் ஏற்பட்டது
சான்றுகள் கிடைத்ததும் சமாதானம் ஆனது.

ஆம்...!
ஏழரை ஆண்டுகளுக்கு முன்னால்
சாமியாருக்கு முன்பாக கையில் எலுமிச்சை பழம்,
அதே படத்தில் கையில் இன்று ஆப்பிள்....

பாவம்...!
திருடர்களுக்கு தப்பிக்கத் தெரியவில்லை
தின மலத்தை கண்டித்து  தலைவர் சொன்ன
அறிக்கையில்  உண்மை வெளிவந்ததும்
உருக்குலைந்து போனார்கள் உளவாளிகள்!

வேறு என்ன கிடைக்கும்?
கிடைத்ததே! இட ஒதுக்கீடு
உண்மைகளை தொலைத்துக்கட்ட...

ஒரு வார்த்தையில் ஒருவர் சொன்னார்!
இட ஒதுகீட்டிற்காக முஸ்லிம் லீக்
எதுவுமே செய்ய வில்லை என்று...

அவர்களுக்குத் தெரிய வில்லை
முஸ்லிம் லீகில் வரலாறு எழுத்திலும் இருக்கும்,
படத்திலும் இருக்கும்,உயிருடன் நடமாடும்
,எழுத்தரசு,போன்ற பல்கலை கழகங்களிலும் இருக்குமென்று.

பாவம்....
வாயடைத்துப் போனார்கள்
ஆதாரங்களின் அணிவகுப்பை அடுக்கிய போது..,

சிராஜுல் மில்லத்தின் கண்டிப்பான வேண்டுகோளையும்
முதல்வரின் கனிவான பதிலையும்,
இறுதியிலே நன்றி கூறும் வார்த்தைகளை உள்ளடக்கிய
படத்தையும் பார்த்து...படபடத்து போனார்கள்...

இது தவிர வேறு என்ன கிடைக்கும்?
கிடைக்கும் எது கிடைத்தாலும்
சமுதாயத்தின் வலிமையான கோரிக்கைகள்
வரலாறாக கிடைக்கும்...!

ஆம்..!
வரவு செலவு கணக்கில் சிக்கி
வம்பில் மாட்டியவர்கள் இல்லை...!

வாலிபர்களின் உண்ர்வுகளைத் தூண்டி
வருடக் கணக்கில் வழக்குகளில் சிக்க
வைத்த பெருமைக்குரியவர்களும் இல்லை...!

மானம்,மரியாதை உள்ள சமுதாயத்தை
இன்றும் கண்ணியதோடும் கவுரவத்தோடும்
வழி நடத்திச் செல்லும்
வரலாற்று நாயகர்கள்...!

தங்கம் தகடாக மாறாது
தாய்ச் சபையின் தலைவர்கள்
அன்றும்....
இன்றும்....
என்றும்...தங்கத் தலைவர்கள்...!

அதனாலே தான்...!
நூறாண்டு வரலாறு கொண்ட இயக்கத்தின்
தலைவர்கள் வரலாற்றில் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்
(அல்ஹம்துலில்லாஹ்!)




லால்பேட்டை  ஏ.எஸ்.அப்துல் ரஹமான்,அபுதாபி.


வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ. 2,481 கோடி: அமைச்சர் நமோ நாராயண் மீனா


 மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:ரிசர்வ் வங்கி அளித்த தகவல்படி, 2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையில், ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகளில் உள்ள, 2,481 கோடி ரூபாய் இதுவரை யாரும் உரிமை கோரப்படாமல் உள்ளது. இவ்வாறு, உரிமை கோரப்படாமல் உள்ள பணம், வங்கி ஒழுங்குமுறை சட்டப்பட்டி, முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதிக்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிதியை நிர்வகிப்பதற்கு, கமிட்டி நிர்வாகியை, ரிசர்வ் வங்கி நியமிக்கும். செயல்படாத கணக்குகளை, வங்கிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும். மீண்டும் கணக்கை செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் முன்வந்தால் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் வழியில் தேர்வானவர்கள் பணிக்கு சேர்வதில் சிக்கல்!


ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், வரலாறு உட்பட மூன்று பாடங்களில், தமிழ்வழி சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வான, முதுகலை பட்டதாரிகள், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

அரசு துறைகளில் பணியில் சேர, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு உள்ளது. கடந்த செப்டம்பரில், டி.ஆர்.பி., தேர்வில், அரசுப்பள்ளிகளுக்காக, 2000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில், தமிழ் வழிக்கல்வி ஒதுக்கீட்டில், 100 க்கும் மேற்பட்டோர் தேர்வாகினர்.

தமிழகத்தில் இப்பாடங்களுக்கு தமிழ் வழியில் முதுகலை பிரிவு, ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. அக்கல்லூரிகள் எந்த பல்கலை நிர்வாகத்தின் கீழ் வருகிறது, அரசு ஒப்புதல் உள்ளதா போன்ற உண்மைத் தன்மை குறித்த ஆய்விற்கு பிறகே, பணியில் சேர முடியும். இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றோர் கூறுகையில், "ஏற்கனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்ட படியும், சான்றுகளின் அடிப்படையிலும் தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளோம். உண்மை தன்மை ஆய்வு என்ற பெயரில், தேர்ச்சி பெற்றும் 5 மாதங்களாக பணிக்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றனர்.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "தமிழ் வழியில் பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளில், சம்பந்தப்பட்ட பல்கலை மூலம் ஆய்வுப்பணி நடக்கிறது. விரைவில் நியமன உத்தரவு வரும் என, எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

ஜவகர் சிறுவர் மன்றங்கள் விரைவில் அமையுமா?


ஒன்றியங்கள் தோறும், ஜவகர் சிறுவர் மன்றங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்த, அரசு முன்வந்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில், 5 முதல், 16 வயதுக்கு உட்பட்ட, மாணவர்களிடையே, மறைந்திருக்க கூடிய, ஆக்கப்பூர்வமான திறமைகளை கண்டுணர்ந்து, பயிற்சி அளித்து, அவற்றை வெளிப்படுத்துவதற்காக, 1979ல், "தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம்" துவங்கப்பட்டது. கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் செயல்படும், இம்மன்றத்தில், 24 மாவட்ட சிறுவர் மன்றங்கள், 10 விரிவாக்க மையங்கள், இரண்டு ஊரக மையங்கள் உள்ளன.

தமிழகம் முழுவதும், 36 சிறுவர் மன்றங்கள் தவிர்த்து, சென்னையில், தாம்பரம், சேலையூர், புழுதிவாக்கம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கைவினை, குரலிசை, நாடகம், உடல்திறன், மிருதங்கம், தபேலா போன்ற, 20க்கும் மேற்பட்ட கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படும் பயிற்சி மையங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், கடந்த, கோடைகாலத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி முகாம்களில், 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். கிராமப்புறங்களில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மாலை நேரத்தில், இங்கு, பொழுதை வீணாக கழித்து வருகின்றனர். இம்மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக, ஒன்றியங்களில் சிறுவர் மன்றங்கள் அமைத்து, பல்வேறு கலை பயிற்சி, கைவினை பயிற்சி அளித்தால், அவர்களின் வாழ்க்கை மேம்படும் என, பல ஆண்டாக கோரிக்கை எழுந்து வந்தது.

இதனால், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஒன்றியங்கள் தோறும், சிறுவர் மன்றங்களை அமைக்க, பொதுமக்கள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில், ஒன்றியங்களில், சிறுவர் மன்றங்கள் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, தெரிகிறது. மேலும், இத்திட்டம் குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும், அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. இது குறித்து, கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

மாடுகளை சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை : திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;
நெல்லை மாநகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தொழுவத்தில் கட்டி வளர்க்க வேண்டும். மாறாக தெருக்கள் மற்றும் ரோடுகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலைகளைகளில் ஒப்படைக்கவுள்ளனர்.

கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் மாடுகளை உரிமையாளர்கள் மீட்க முடியாது. மேலும் மாட்டின் உரிமையாளர்கள் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் தெரிவித்துள்ளார்.

கரன்சி நோட் பிரிண்டிங் ஆலை பணி வாய்ப்பு


கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு பாங்க் நோட் பேப்பர் மில் இந்தியா லிமிடெட் எனப்படும் பி.என்.பி.எம்.ஐ.எல்., இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் 2010ல் உருவாக்கப்பட்டது. செக்யூரிட்டி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்களின் இணைப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் உள்ள இள நிலைப் பிரிவைச் சார்ந்த 3 பிரிவுகளிலான 73 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
ஜூனியர் கிரேடு  புரொடக்சன்/மெயின்டனன்ஸ் பிரிவிலான இந்தக் காலி இடங்களில் மெக்கானிகலில் 25 காலி இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 26 காலி இடங்களும், கெமிக்கல் இன்ஜினியரிங்/பேப்பர் அண்டு பல்ப் டெக்னாலஜி பிரிவில் 22 காலி இடங்களும் பி.என்.பி.எம்.ஐ.எல்., நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
மெக்கானிக்கல் பிரிவிலான மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டு ஐ.டி.ஐ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ ஆகிய ஏதாவது ஒன்றை தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் தேவைப் படும். எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே போல் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 2 ஆண்டு ஐ.டி.ஐ., படிப்போ அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பையோ தொடர்புடைய பிரிவு ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுபணி அனுபவம் தேவைப் படும். கெமிக்கல் இன்ஜினியரிங்/பேப்பர் அண்டு பல்ப் டெக்னாலஜி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களும் 10ம் வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை கெமிக்கல் இன்ஜினியரிங் அல்லது கெமிக்கல் பிளான்ட் பிரிவிலான படிப்பாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மற்ற விபரங்கள்
பாங்க் நோட் பேப்பர் மில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஜூனியர் கிரேடு புரொடக்சன்/மெயின்டனன்ஸ் காலியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர் காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இந்தப் பதவி களுக்கு விண்ணப்பிக்க எக்சிகியூடிவ் பிரிவுக்கு ரூ.500/ம், இதர பிரிவுகளுக்கு ரூ.350/ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாயிலாக BNPM Recruitment Account No: 32786458505 என்ற அக்கவுன்டில் செலுத்த வேண்டும்.

எழுத்துத் தேர்வு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 28.02.2013
இணையதள முகவரி: www.bnpmindia.com/job/final%20advertisement.pdf

ஆயுத தொழிற்சாலையில் டெக்னிக்கல் பதவி


இந்திய ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் பேக்டரி மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரிலுள்ள கமரியாவில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் டெக்னிக்கல் பிரிவில் உள்ள 676 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் டேஞ்சர் பில்டிங் ஒர்க்கர் பிரிவில் 250 காலி இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 100 காலி இடங்களும், ஜெனரல் பிட்டர் (எஸ்.எஸ்.,) பிரிவில் 72 காலி இடங்களும், பிட்டர் ஆட்டோ, பிட்டர் பாய்லர், பிட்டர் எலக்ட்ரிக், பிட்டர் பைப், பிட்டர் எலக்ட்ரானிக், பிட்டர் ரெப்ரிஜிரேஷன் மற்றும் பிட்டர் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் பிரிவுகளில் தலா 15 காலி இடங்களும், எக்ஸாமினர் பிரிவில் 50 காலி இடங்களும், கிரைண்டர் பிரிவில் 32 இடங்களும், மேசன் மற்றும் கார்பெண்டர் பிரிவுகளில் தலா 23 இடங்களும், டர்னர் பிரிவில் 20 காலி இடங்களும், எலக்ட்ரோபிளேட்டர் பிரிவில் 16 காலி இடங்களும் உள்ளன.

தேவைகள்
இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரியின் மேற்கண்ட டெக்னிக்கல் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் என்.சி.வி.டி., வழங்கும் நேஷனல் அப்ரென்டிஸ் சர்டிபிகேட் அல்லது நேஷனல் டிரேடு சர்டிபிகேட்டை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளின் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

இதர தகவல்கள்
இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரி கமரியாவின் மேற்கண்ட பதவி களுக்கு விண்ணப்பிக்க ரூ.50/க்கான டி.டி.,யை The Sr. General Manager, Ordnance Factory Khamaria, Jabalpur - 482 005 என்ற பெயரில் ஜபல்பூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.03.2013. முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.  இணையதள முகவரி - www.ordkham.gov.in/lb050213/Detail_advt_691.pdf

புதன், 20 பிப்ரவரி, 2013

பாராசிட்டாமல் (PARACETAMOL ) குறைப்பால் உயிரிழப்பு தவிர்ப்பு


பாராசிட்டாமல் மாத்திரை உட்கொள்ளும் அளவு குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிநிவாரணியாக பயன்படும் பாராசிட்டாமல் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வதால், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க, பிரிட்டனில் பாராசிட்டாமல் மாத்திரை விற்பனை குறைக்கப்பட்டது. மருந்தகங்கள் மூலம், 32 பாராசிட்டாமல் மாத்திரைகளும், மருந்தகம் அல்லாத இடங்களில், 16 மாத்திரைகளும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என, கடந்த, 1998ல் பிரிட்டன் அரசு, உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கேத் ஹாட்டன் குறிப்பிடுகையில், "இந்த உத்தரவின் மூலம் பாராசிட்டாமல் உட்கொள்வது குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்த மாத்திரைகளை இன்னும் குறைப்பதன் மூலம், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மேலும் பலர் உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.

ரத்தினங்கள் மற்றும் வைரங்கள் தரம் பிரிப்பதற்கான பயிற்சி வகுப்புகள்


இரத்தினக் கற்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்காக Institute of Diamond Trade(IDT) எனும் வைர வணிகம் பற்றிய கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இரத்தினங்கள் மற்றும் வைர வணிகத்துக்கான கல்வியை ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுக்கிறது. இந்த துறையில் ரத்தினங்கள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கு உதவும் வகையில் 60 நாள் அறிமுகப் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

அதேபோன்று வைர நகை விற்பனையாளர்கள், மதிப்பீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வைரங்கள் தரம் பிரிப்பதற்கான 8 வார பயிற்சி வகுப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது. வைரங்கள் தரம் பிரிப்பதற்காக நிறம், தூய்மை, வெட்டுதல் மற்றும் கேரட் அளவு பற்றிய சர்வதேச தர மதிப்பீட்டு விபரங்கள் கற்றுக்கொடுக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் வைர நகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும், ஆய்வுக்கூடங்களிலும் வேலை செய்யலாம்.

ஐடிடி நிறுவனம் இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. பயிற்சிக்கான கட்டணங்கள் முறையே, ரத்தினங்கள் பற்றிய பயிற்சிக்கு ரூ.9,950ம், வைரங்கள் பற்றிய பயிற்சிக்கு ரூ.5,515 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர்வதற்கான கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சான்றிதழ் படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது. அவை பற்றிய தகவல் அறிய www.idt.edu.in என்ற இணையதளத்தை காணவும்.

சமுதாயத்தை மேம்படுத்தும் சமூகசேவை படிப்பு


தொடக்கத்தில் சமூகசேவையோடு தொடர்புடைய படிப்பாக மட்டுமே சமூகப்பணி கருதப்பட்டது. ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப்பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு, தொழிலாளர் நலன், கிராமப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு பெரும் பங்காற்றும் துறையாக விளங்க உதவுவது சமூகப்பணி தான்.

சமூகசேவையில் ஈடுபடுபவருக்கு ஏற்படும் மனதிருப்தியை வார்த்தைகளால் கூற முடியாது. மனிதர்களை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால், இப்படிப்பை மேற்கொள்ளலாம். பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும், என்ற நம்பிக்கை இத்துறைக்கு அவசியம் வேண்டும்.

சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை களைய முயற்சிப்பதே சமூகவியலாளர்களின் முக்கியப் பணி. இதற்கு கவுன்சலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, உடல்நல திட்டங்களை செயல்படுத்துவது என இவர்களின் பணி, உயரிய நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.

சமூகப் பணிகளின்கீழ் கிளினிகல் சமூகப்பணி, பள்ளி சமூகப்பணி, உளவியல் சமூகப்பணி, மறுசீரமைப்பு மற்றும் குற்றங்களை களையும் பணி, மருத்துவ சமூகப்பணி, சமுதாயப்பணி என பல பிரிவுகள் உள்ளன. தொழிற்சாலை சமுதாயப் பணியும் இருக்கிறது.

அரசுத் துறைகளிலும், தன்னார்வ நிறுவனங்களிலும் சமூகப்பணி படித்தவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எம்.எஸ்.டபிள்யூ., அல்லது எம்.ஏ. படிப்பாக இதைப் படிக்கலாம். யுனெஸ்கோ, யுனிசெப், லேபர் பீரோ போன்றவற்றில் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

திறந்தவெளி பல்கலையில் 8 புதிய படிப்புகள்


தொழில் கல்வி அளிக்கும் வகையில், எட்டு புதிய பட்டய படிப்புகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் துவங்கப்படுகின்றன.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமுதாய கல்லூரிகள் மூலம், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது. சுகாதார உதவியாளர், ஆடை வடிவமைப்பு, கணினி வன்பொருள் பழுது பார்ப்பு, அலைபேசி பழுது பார்ப்பு, அழகு கலை நிபுணர் பயிற்சி, நான்கு சக்கர பழுது பார்த்தல் பயிற்சி என, 21 வகையான பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஓராண்டு பட்டய படிப்பு முடித்த மாணவர்களுக்கு, தொழில் துவங்குவதற்காக, 1,000 ரூபாய் அரசு நிதியுதவி அளிக்கிறது. தமிழகம் முழுவதும், 204 சமுதாய கல்லூரிகளில், 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி கற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு, தொழில் கல்வியை கொண்டு செல்லும் வகையில், 2012-13ம் ஆண்டில் பொருத்துதல், நெசவு, பின்னாலாடை, ஆடை சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல் பட்டயம், ஆயத்த ஆடை விற்பனைப்படுத்துதல், திருநங்கைகளின் மனித உரிமைக்கான சான்றிதழ் படிப்பு, சைபர் சட்டங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் புலனாய்வு உள்ளிட்ட, எட்டு புதிய பட்டய படிப்புகள் துவங்கப்படுகின்றன.

புதிய பட்டய படிப்புகளுக்கான, பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூனில் துவங்கும் கல்வியாண்டு முதல், புதிய பட்டய படிப்புகள் சமுதாய கல்லூரிகளில் இடம் பெறுகின்றன.

இதுகுறித்து சமுதாய கல்லூரிகள் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, தொழிற் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என, மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தவெளி பல்லைக்கழகத்தில் விவாதிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள, எட்டு தொழில்களில், புதிய பட்டயப் படிப்புகள் கொண்டு வரப்பட்டுகின்றன.

இதற்கு, டில்லி தொலைதூர கல்வி மாமன்றம், 20 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்


 "சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல் பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன.

இதனால், பள்ளிகளில் உள்ள ஒரு ஆய்வகத்தையே, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஒவ்வொரு பிரிவாக பயன்படுத்த வேண்டி உள்ளது. மேலும், செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், சரிவர கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.

இதனால், மாணவ, மாணவியர், திருப்தியான முறையில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்கின்றனரா என்பதையும், உறுதியாக கூற முடியாது. இது போன்ற நிலையில், ஆன்-லைன் வழியாக, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளும் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்துள்ளது.

மும்பையில் உள்ள மத்திய அரசின் சி.டி.ஏ.சி., (சென்டர் பார் டெவலப்டு ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்) மையமும், கேரளாவில் உள்ள அம்ரிதா பல்கலையும் இணைந்து, இந்த ஆன்-லைன், லேப்பை உருவாக்கி உள்ளன.


www.olabs.co.in என்ற இணையதளத்திற்குள் சென்று, 9, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், எத்தனை முறை வேண்டுமானாலும், முப்பரிமாண தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். செய்முறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படங்களாக, இணையத்தில் உள்ளன. இதை பயன்படுத்தி, செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

இது தொடர்பான சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அனுப்பப்பட்டு உள்ளது. அதில், சி.பி.எஸ்.இ., தலைவர் வினீத் ஜோஷி கூறியதாவது: பள்ளிகளில், செய்முறை பயிற்சியை மேற்கொள்ள, போதிய நேரம் கிடைக்காது. ஆன்-லைன் வழியில், எப்போது வேண்டுமானாலும், செய்முறை பயிற்சியில் ஈடுபடலாம்.

மாணவர்களின் செய்முறை தேர்வை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்பமும், இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்திற்கு, ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அறிவியல் ஆசிரியை ஷீலா கூறுகையில், "இத்திட்டம், அறிவியலை, மாணவ, மாணவியரின் வீட்டிற்கே கொண்டு செல்வதாக உள்ளது.

ஆன்-லைன் வழியில், மாணவ, மாணவியர், உற்சாகமாக, செய்முறை பயிற்சிகளில் ஈடுபடுவர். இதன் மூலம், அவர்களது அறிவியல் அறிவு மேம்படும்,' என, தெரிவித்தார்.

அப்பாவிகளின் நிலையிலிருந்து நீதிபதிகள் பார்க்க வேண்டும்: தலைமை நீதிபதி அகர்வால்


"ஒரு அப்பாவி, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோர்ட்டை நாடுகிறான். நீதிபதிகள், சட்டத்தின் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அப்பாவிகளின் நிலையிலிருந்து அணுக வேண்டும்,'' என, சென்னை ஐகோர்ட், தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் பேசினார்.

மதுரை ஐகோர்ட் கிளையில் அளிக்கப்பட்ட, வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தன் கணவருக்கு அநீதி இழைக்கப்பட்டது குறித்து, மதுரையில், பாண்டிய மன்னனிடம், கண்ணகி நீதி கேட்டதை, "சிலப்பதிகாரம்' கூறுகிறது. இது, தற்போதுள்ள நீதிபரிபாலன முறைக்கு, முன் மாதிரியாக திகழ்கிறது.

மதுரை, "பாரில்' திறமையான வக்கீல்கள் உள்ளனர். மற்ற கோர்ட்டுகளுக்கு முன்னுதாரணமாக திகழ முயற்சிக்கின்றனர். நீதிபதி எம்.சி.சாக்லா, "ஒரு நீதிபதி, வழக்கை கையாளும்போது, சட்டத்தை மட்டும் மனதில் கொள்ளாமல், அது சமூக மேம்பாட்டிற்கும், ஏழைகளை பாதுகாக்கும் வகையிலும் இருக்க வேண்டும். கர்வமின்றி நடந்து கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அப்பாவி, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோர்ட்டை நாடுகிறான். நீதிபதிகள், சட்டத்தின் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அப்பாவிகளின் நிலையிலிருந்து, அணுக வேண்டும். பொது மனிதன் நீதி, நியாயம் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு, தற்காலிக தலைமை நீதிபதி பேசினார்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

நெல்லை கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு


நெல்லை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் பைல்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், அதன் கீழ் 21 உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்கள் உள்ளன. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பாளர், 2 தரம் உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், 4 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் மாற்றுப்பணி என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பாளை., நகர், மானூர், நான்குநேரி, சேரன்மகாதேவி, மேல நீலிதநல்லூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆசிரியர்களுக்கான பைல்கள் தேக்கம் அடைந்துள்ளன.இதுதவிர மாவட்டக்கல்வி அலுவலகங்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சில பள்ளிகளில் இளநிலை உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலையுள்ளது.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், இதர உதவித்தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மாற்றுப்பணி மேற்கொண்டு வரும் ஊழியர்களை அந்தந்த அலுவலகங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20, 21 தேதிகளில்வேலை நிறுத்தம்:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை, நெல்லை மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுடலைமணி, பொருளாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறை அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 20, 21 தேதிகளில் நடக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை மணலியில் அமோனியா வாயு கசிவு மூச்சு திணறலால் மக்கள் தவிப்பு


மணலி உரத் தொழிற்சாலையில் இருந்து, நேற்று காலை வெளியேறிய அமோனியா வாயுவால், அப்பகுதி மக்கள், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

சென்னை அடுத்த மணலியில், மத்திய அரசின் உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு, வாரத்திற்கு இருமுறை, இரவு நேரத்தில், அமோனியா வாயு வெளியேற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மணலி, அரிகிருஷ்ணபுரம், எடப்பாளையம், தில்லைபுரம், கலைஞர்நகர், லம்பைமேடு மற்றும் மாத்தூர் எம்.எம்.டி.ஏ., உள்ளிட்ட, பல இடங்களில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அமோனியா வாயு அதிகளவில் பரவியது. அப்பகுதியில் பரவிய அமோனியா வாயுவால், கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
பல மணி நேரம் அமோனியா கசிவு நிலவியதால். அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து சென்ற பலரும் துணிகளால் முகத்தை மூடியபடியே சென்றனர்.

ஆர்.டி.ஓ., சண்முகம் கூறுகையில், ""உரத் தொழிற்சாலையில், நேற்று காலை, 9:15 மணிக்கு, மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்னாக்கியை இயக்காததால், அமோனியா வாயு கசிவு வெளியேறியது. சில மணி நேரத்திற்கு பின் இயல்பு நிலை திரும்பியது,'' என்றார்.

உயர்கல்வி பெற முடியாத மாணவர்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?


சிங்கம்புணரி வட்டாரத்தில் பிளஸ் 2,முடிக்கும் மாணவர்கள், கல்லூரி வசதியின்றி உயர்கல்வி பெற முடியாமல் தவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு ஆண், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இரு தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஏரியூர், எஸ்.எஸ்.கோட்டை, முறையூர்,கிருங்காக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பிரான்மலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன.

இவை மட்டுமின்றி, உலகம்பட்டி, புழுதிபட்டி, கட்டுக்குடிப்பட்டி, எஸ்.புதூரில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகள் உள்ளன. ஆண்டு தோறும்,கிராமப்புற பள்ளிகளில் பிளஸ் 2, முடித்து ஆயிரத்து 500 மாணவர்கள் வெளியேறுகின்றனர்.

இப்பகுதியில் அரசு, தனியார் கலைக்கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரிகள் இல்லை. ஒரு தனியார் பாலிடெக்னிக், இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மட்டும் உண்டு.

வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகள் உயர்கல்வி பெற வெளியூர் அனுப்புகின்றனர். ஏழை மாணவர்கள் 25 கி.மீ.,தூரத்தில் உள்ள திருப்புத்தூர், 35 கி.மீ.,தூரத்திலுள்ள மேலைச்சிவபுரி கல்லூரிக்கு தினமும் பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது.

மாணவிகள், மேலூர், நத்தத்திலுள்ள கல்லூரிக்கு பஸ்சில் சென்று உயர் கல்வி பெறும் கட்டாயம் உள்ளது. இதனால் பணம், நேரம் வீணாகிறது. இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற சிங்கம்புணரியில் அரசு, தனியார் கல்லூரிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

காஸ் குழாய் அமைக்க எதிர்ப்பு: விசாயிகள் 26-ல் போராட்டம் அறிவிப்பு


விவசாய பயிர்களை அழித்து காஸ் குழாய் அமைக்கும், "கெய்ல்' நிறுவனத்தை கண்டித்து, பல்லடத்தில் , தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்."கெய்ல்' நிறுவனம் , கொச்சி-சேலம்-பெங்களூரு வரை, 310 கி.மீ., தூரத்துக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான காஸ் கொண்டு செல்லும் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 136 கிராமங்கள் வழியாக குழாய் அமைக்கப்படுகிறது.

விளைநிலைங்கள் வழியாக காஸ் குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாய பயிர்களை அழித்து குழாய் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்; மாற்றுப்பாதையில் குழாய் அமைக்க வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று ஏழு மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் கெய்ல் நிறுவனத்தினை கண்டித்தும், சேலம் கெய்ல் தலைமை அலுவலகத்தினை 26-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர் பயத்தில் தவிக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள்


உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையத்திற்கு, புதிய கட்டடம் அமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னும், இன்று வரை பணிகள் துவங்காமல் உள்ளது. இதனால், எப்போது கட்டடம் இடிந்து விழுமோ என்ற உயிர் பயத்தில், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை, தரமணி வளாகத்தில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், 60க்கும் மேற்பட்ட எம்.பில்., - பிஎச்.டி., மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழின் சிறப்பு, வளர்ச்சி, தமிழரின் பண்பாடு, நாகரிகம், காலாசாரம் ஆகியவை குறித்து, இந்நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இக்கட்டடத்தின் நிலை மோசமானது.குறிப்பாக, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

ஆராய்ச்சி மாணவர்களின் அறையும், உலகப்புகழ் பெற்ற இவ்வாராய்ச்சி நிலையத்தின் நூலகமும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. பக்கவாட்டுச் சுவர்களின் பெரும் கீறல் விழுந்தது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 3.20 கோடியில், புதிய கட்டடம் அமைக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதில், மூன்று அடுக்கு கட்டடம் அமைக்கவும், வெளிநாடுகளில் இருந்து ஆராய்ச்சி நிலையத்திற்கு வரும் ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் தங்குதவதற்கும், 12 அறைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரைபடமும் தயாரானது.

ஆனால், ஆராய்ச்சி நிலையில், புதிய கட்டடம் கட்டுவதில் ஆர்வமாக இருந்த போதிலும், பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. இதுகுறித்து, ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கட்டடம் எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்து, நான்கு வகையான வரைபடம் தயாரித்து, பொதுப்பணித்துறைக்கு அளித்தோம். ஆனால், பொதுப்பணித்துறை கட்டடம் அமைவதில் ஆர்வம் காட்டவில்லை. வரைபடம் முடிவான பிறகு, நான்கு மாதத்திற்குள், பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டும். ஆனால், வரைபடத்தின் படி, கட்டடம் கட்டுவதற்கு, போதுமான பணம் இல்லை என, நிராகரித்தது. புதிய வரைபடம் தயாரிக்க வேண்டும் என்றது.

புதிய வரைபடம் தயார் செய்தால், மீண்டும் அரசின் ஒப்புதல் வாங்குவதற்கு தாமதமாகும் என்பதால், ஏற்கனவே வரைந்த வரைபடத்திற்கு ஆகும் செலவினங்களை, நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்றோம். ஆனால், இன்று வரை பணிகள் துவங்கவில்லை.

இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, பேராசிரியர்களும் எந்நேரம் கட்டடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், தவித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை கட்டட பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் துவங்கி விடும்" என்றனர்.

கல்வி-திருமண சான்றிதழ்களில் அத்தாட்சி: பொது மக்களை அலைக்கழிக்கும் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை


வெளிநாடுகள் செல்வதற்காக, கல்வி-திருமண சான்றிதழ்களில் அத்தாட்சி பெறுவதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறைக்கு வரும் பொது மக்களை அலுவலர்களும், அதிகாரிகளும் தினமும் அலைய விடுகின்றனர்.

போதுமான விவரங்களைத் தெரிவிக்க தனியாக கவுன்சிலர்கள் நியமிக்கப்படாததால் அந்தப் பிரிவு முழுவதிலும் லஞ்சம் பெருக்கெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயர் கல்வியை முடித்தவர்கள், குடும்பத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய நினைக்கும் பெண்கள் என அனைவரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், திருமண பதிவுச் சான்றிதழ்களை பொதுத்துறையில் உள்ள வெளிநாட்டினர் பிரிவில் சமர்ப்பித்து உரிய அத்தாட்சியைப் பெறுவது அவசியம். இந்தப் பணியை முடித்த பிறகே வெளிநாடு செல்வதற்கு உரிய அனுமதியைப் பெற முடியும்.

இந்த அத்தாட்சியை உடனடியாகப் பெற விரும்புவோர் நேரடியாக தலைமைச் செயலகத்துக்கே வந்து பொதுத்துறையில் அதற்கான பிரிவை அணுகுகிறார்கள். அவ்வாறு செல்லும் பொது மக்களுக்கு உரிய முறையில் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. அத்தாட்சியைப் பெற என்னென்ன வழிகளைக் கையாள வேண்டும். எந்தெந்த  விண்ணப்பத்தை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எந்தத் தகவலும் கிடைப்பதில்லை.


இடைத்தரகர்கள் ராஜ்யம்: அத்தாட்சி பெறுவோருக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்காத நிலையில், துறையில் உள்ள அலுவலர்களைக் கேட்கும் போது, உரிய முறையில் அவர்களும் பதில் தருவதில்லை. இதனால், வேறு வழியின்றி துறைக்குத் தொடர்பில்லாத அதே சமயம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் உள்ள இடைத்தரகர்களை பொது மக்கள் நாட வேண்டியுள்ளது.

இடைத்தரகர்கள் ஒவ்வொரு சான்றுக்கும் மக்களின் அவசரத் தேவைக்கு ஏற்ற வகையில், பணம் வசூலிக்கின்றனர். ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஒவ்வொரு சான்றிதழுக்கும் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த இடைத்தரகர்களுக்கும், பொதுத்துறையில் வெளிநாட்டினர் பிரிவில் கீழ் நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

எந்த சான்றிதழில் அத்தாட்சி பெற வேண்டுமென அந்த சான்றிதழின் அசலானது, அதை வழங்கிய தமிழக அரசுத் துறைக்கு அனுப்பப்படும். அது எந்த ஊராக இருந்தாலும் அந்த ஊரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உண்மைத் தன்மை ஆராயப்படும்.


பொது மக்கள் தங்களது அசல் சான்றிதழை அத்தாட்சிக்காகக் கொடுத்துச் செல்வதால் அதற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இடைத்தரகர்களை அணுகி விரைவாகப் பெற்றுச் செல்ல முனைகின்றனர்.

தகவல் அளிப்பவர் இல்லாதது ஏன்? தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் கல்வி மற்றும் திருமண பதிவின் அசல் சான்றிதழ்கள் அனுப்பப்படும் சூழலில், அதுகுறித்த நிலையை தெரிவிக்க தகவல் அளிப்பவர் அந்தப் பிரிவில் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.

வெளிநாடு செல்லும் கனவுகளுடன் தலைமைச் செயலகம் வந்து சான்றிதழ்களில் அத்தாட்சி பெற வரும் பொது மக்களை அலைக்கழித்து வெறுத்து ஓடச் செய்கிறது பொதுத்துறை.