Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

காஸ் குழாய் அமைக்க எதிர்ப்பு: விசாயிகள் 26-ல் போராட்டம் அறிவிப்பு


விவசாய பயிர்களை அழித்து காஸ் குழாய் அமைக்கும், "கெய்ல்' நிறுவனத்தை கண்டித்து, பல்லடத்தில் , தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்."கெய்ல்' நிறுவனம் , கொச்சி-சேலம்-பெங்களூரு வரை, 310 கி.மீ., தூரத்துக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான காஸ் கொண்டு செல்லும் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 136 கிராமங்கள் வழியாக குழாய் அமைக்கப்படுகிறது.

விளைநிலைங்கள் வழியாக காஸ் குழாய் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாய பயிர்களை அழித்து குழாய் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்; மாற்றுப்பாதையில் குழாய் அமைக்க வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று ஏழு மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் கெய்ல் நிறுவனத்தினை கண்டித்தும், சேலம் கெய்ல் தலைமை அலுவலகத்தினை 26-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக