Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 22 நவம்பர், 2012

மதரஸாக்கள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி மாநில அரசுகள் மூலம் இல்லாமல் நேரடியாக வழங்கப்பட வேண்டும் தேசிய ஆலோசனை குழுக் கூட்டுக் கூட்டத்தில் கே.ஏ.எம். அபூபக்கர் கோரிக்கை


மதஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனை குழு முதல் கூட்டம் புதுடெல்லி லோதி சாலையில் உள்ள இந்தியா ஹேடிடேட் மையம் குல்மஹால் அரங்கில் கடந்த 20-ம் தேதி செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு, இணையமைச்சர் ஜிதேந் திர பிரசாத், துறைச் செயலா ளர்கள், இக்குழுவில் இடம் பெற்றுள்ள பல்வேறு மாநிலங் களின் மதரஸா வாரியத் தலைவர்கள், மதரஸா வளர்ச்சி சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜு, ஜிதேந்திர பிரசாத் ஆகியோர் இக்குழுவின் நோக்கம் பற்றி முன்னுரை வழங்கினர். 12-வது ஐந்தாண் டுத் திட்டத்தில் மதரஸா கல்வி மேம்பாட்டிற்கு ரூ.900 கோடி ஒதுக்க இக்கூட்டத்தில் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், குழு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது-

மதரஸாக்களின் மேம்பாட் டுக்கு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இங்கு தரப்பட்டுள்ள அறிக்கையில் மதரஸா மேம்பாட்டுக்கான எஸ்பிக்யூஇஎம். திட்டத்தின் மூலம் மாநில வாரியாக பயன்பெற்ற மதரஸாக்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

பூஜ்ய நிலையில் தமிழ்நாடு
நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் 19 மாநிலங்களில் 7,362 மதரஸாக் கள் பயனடைந்து அங்கு 16,788 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள் ளதும், 13164.56 லட்சம் நிதி யுதவி வழங்கப்பட்டதும் அறிக் கையாக தரப்பட்டுள்ளது. ஆனால், நான் சார்ந்துள்ள தமிழ்நாட்டிலிருந்து ஒரு மதரஸா கூட பயன்பெறவில்லை என்ப தையும், உயர்கல்விக்காக ஒரு ஆசிரியர்கூட நியமிக்கப் படவில்லை என்பதையும், ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பதையும் அறிந்ததும் மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே, இத்திட்டம் முழுமையாக மதரஸாக்களை சென்றடைய சில ஆலோசனை களை வழங்க விரும்புகிறேன். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மதரஸா வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. அவை அமைக்கப்படுவதற்கு மத்திய அரசு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் கிடைக்கும் நிதியுதவி அனைத்து மாநிலங்க ளையும் சென்றடைய மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனை குழுவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண் டும்.

மதரஸா மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியுத விகள் மாநில அரசு மூலம் இல்லாமல், ஆஸாத் பவுண்டே ஷன் நேரடியாக கல்வித் தொகையை வழங்குவதுபோல், மதரஸாக்களுக்கும் நேரடியாக வழங்க வேண்டும். இதன் மூலம் மாநில அரசின் தலையீடு குறித்த அச்சம் இல்லாமலும், சிரமமும் - காலதாமதமும் ஏற்படாமல் உதவிகள் சென்ற டைய வாய்ப்புகள் ஏற்படும்.

எஸ்பிக்யூஇஎம்(SPQEM) திட்டம் பற்றி அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் உள்ள மதரஸாக்கள் இத் திட்டத்தின் மூலம் உதவி பெற்றால் அரசின் தலையீடு இருக்குமோ என்ற அச்சம் மதரஸா நிர்வாகிகளுக் கும், உலமா பெருமக்களுக்கும் இருக்கிறது. ஆனால், இப்படி அச்சப்படத் தேவையில்லை என்பதை பிற மாநிலங்களின் மதரஸா வாரியத் தலைவர்கள் இங்கே தெளிவுபடுத்தினர். இந்த உண்மையை மதரஸா நிர்வாகிகளுக்கும், உலமா பெருமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை.

மதரஸாக்களில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் வழிவகைகளையும் இத்திட்டத் தில் சேர்க்க வேண்டும். மதர ஸாக்களில் தங்கிப் படிப்பவர்கள் எதிர்காலத்தில் தொழில் நிபுணர் களாகவும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையக் கூடியவர்களாகவும் ஆவதற்கு இது உறுதுணையாக அமையும்.

மதரஸா கல்வி மேம்பாட் டுக்கான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பகுதி வாரியாக ஆலோசனை கூட் டத்தை நடத்தி இத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வழிகாட்ட வேண்டும். இல்லையெனில், இப்படிப்பட்ட அருமையான திட்டங்கள் பெயரளவில் இருக்குமே தவிர மக்களை சென்றடையாது.

இவ்வாறு கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் குறிப்பிட்டார்.

தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! இ-மெயிலை கண்டுபிடித்தது தமிழ்நாட்டுக்காரன் ..........!


இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் ‘மெயில்’ வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. ‘மெயில்’ என்றால் ‘இமெயில்’ தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.

முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.

மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அவமதிப்பு:
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

  ஒரு பத்திரிக்கைக்கு சிவா அய்யாத்துரை தன்னை பற்றி கூறும்போது  ,

"என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

 நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.

 எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.


பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

 இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

 அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

 தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன் என்று கூறி உள்ளார் .