Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 22 நவம்பர், 2012

மதரஸாக்கள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி மாநில அரசுகள் மூலம் இல்லாமல் நேரடியாக வழங்கப்பட வேண்டும் தேசிய ஆலோசனை குழுக் கூட்டுக் கூட்டத்தில் கே.ஏ.எம். அபூபக்கர் கோரிக்கை


மதஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனை குழு முதல் கூட்டம் புதுடெல்லி லோதி சாலையில் உள்ள இந்தியா ஹேடிடேட் மையம் குல்மஹால் அரங்கில் கடந்த 20-ம் தேதி செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு, இணையமைச்சர் ஜிதேந் திர பிரசாத், துறைச் செயலா ளர்கள், இக்குழுவில் இடம் பெற்றுள்ள பல்வேறு மாநிலங் களின் மதரஸா வாரியத் தலைவர்கள், மதரஸா வளர்ச்சி சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜு, ஜிதேந்திர பிரசாத் ஆகியோர் இக்குழுவின் நோக்கம் பற்றி முன்னுரை வழங்கினர். 12-வது ஐந்தாண் டுத் திட்டத்தில் மதரஸா கல்வி மேம்பாட்டிற்கு ரூ.900 கோடி ஒதுக்க இக்கூட்டத்தில் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், குழு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது-

மதரஸாக்களின் மேம்பாட் டுக்கு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இங்கு தரப்பட்டுள்ள அறிக்கையில் மதரஸா மேம்பாட்டுக்கான எஸ்பிக்யூஇஎம். திட்டத்தின் மூலம் மாநில வாரியாக பயன்பெற்ற மதரஸாக்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

பூஜ்ய நிலையில் தமிழ்நாடு
நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் 19 மாநிலங்களில் 7,362 மதரஸாக் கள் பயனடைந்து அங்கு 16,788 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள் ளதும், 13164.56 லட்சம் நிதி யுதவி வழங்கப்பட்டதும் அறிக் கையாக தரப்பட்டுள்ளது. ஆனால், நான் சார்ந்துள்ள தமிழ்நாட்டிலிருந்து ஒரு மதரஸா கூட பயன்பெறவில்லை என்ப தையும், உயர்கல்விக்காக ஒரு ஆசிரியர்கூட நியமிக்கப் படவில்லை என்பதையும், ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பதையும் அறிந்ததும் மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே, இத்திட்டம் முழுமையாக மதரஸாக்களை சென்றடைய சில ஆலோசனை களை வழங்க விரும்புகிறேன். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மதரஸா வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. அவை அமைக்கப்படுவதற்கு மத்திய அரசு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் கிடைக்கும் நிதியுதவி அனைத்து மாநிலங்க ளையும் சென்றடைய மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனை குழுவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண் டும்.

மதரஸா மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியுத விகள் மாநில அரசு மூலம் இல்லாமல், ஆஸாத் பவுண்டே ஷன் நேரடியாக கல்வித் தொகையை வழங்குவதுபோல், மதரஸாக்களுக்கும் நேரடியாக வழங்க வேண்டும். இதன் மூலம் மாநில அரசின் தலையீடு குறித்த அச்சம் இல்லாமலும், சிரமமும் - காலதாமதமும் ஏற்படாமல் உதவிகள் சென்ற டைய வாய்ப்புகள் ஏற்படும்.

எஸ்பிக்யூஇஎம்(SPQEM) திட்டம் பற்றி அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் உள்ள மதரஸாக்கள் இத் திட்டத்தின் மூலம் உதவி பெற்றால் அரசின் தலையீடு இருக்குமோ என்ற அச்சம் மதரஸா நிர்வாகிகளுக் கும், உலமா பெருமக்களுக்கும் இருக்கிறது. ஆனால், இப்படி அச்சப்படத் தேவையில்லை என்பதை பிற மாநிலங்களின் மதரஸா வாரியத் தலைவர்கள் இங்கே தெளிவுபடுத்தினர். இந்த உண்மையை மதரஸா நிர்வாகிகளுக்கும், உலமா பெருமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை.

மதரஸாக்களில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் வழிவகைகளையும் இத்திட்டத் தில் சேர்க்க வேண்டும். மதர ஸாக்களில் தங்கிப் படிப்பவர்கள் எதிர்காலத்தில் தொழில் நிபுணர் களாகவும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையக் கூடியவர்களாகவும் ஆவதற்கு இது உறுதுணையாக அமையும்.

மதரஸா கல்வி மேம்பாட் டுக்கான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பகுதி வாரியாக ஆலோசனை கூட் டத்தை நடத்தி இத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வழிகாட்ட வேண்டும். இல்லையெனில், இப்படிப்பட்ட அருமையான திட்டங்கள் பெயரளவில் இருக்குமே தவிர மக்களை சென்றடையாது.

இவ்வாறு கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக