Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 23 நவம்பர், 2012

திமுக மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல்நிலை பாதித்து சளித் தொல்லையால் அவர் அவதிப்பட்டார். இதனால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சேலம் அங்கம்மாள் காலனியில் குடிசைக்குத் தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைதானதும் கடந்த மாதம் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957 முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார்.

தி.மு.க., மூன்று நாட்கள் துக்கம்
வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததை தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தி.மு.க., அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக