Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 18 மார்ச், 2013

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை சம்பந்தமான ஐ.நா தீர்மானத்தில் உரிய திருத்தத்தை இந்திய அரசு கொண்டுவரவேண்டும் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

கரூர் மாவட்டம் பள்ளபட்டி நகரில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்தார்.


அப்போது அவர் கூறியதா வது-

3 ஆயிரம் இடங்களில் கொடியேற்று விழாக்கள்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அமைப்பு ரீதியாக பலப்படுத்தி வலிமை சேர்க்கும் நடவடிக்கை கள் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹமது சாஹிப் தலைமை யில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மார்ச் 10ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 66வது நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொடியேற்று விழாக் களும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நான் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.

தமிழகத்தில் பட்டிதொட்டிக ளெங்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகள் ஏற்றி வைக் கப்பட்டுள்ளன. இது ஒரு புதிய எழுச்சியையும், இயக்கத்திற்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 2 கோரிக்கை பேரணி
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி யும், திண்டுக்கல்லில் நடை பெற்ற தமிழ்நாடு மாநில பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும் முப் பெரும் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் கோரிக்கை பேரணி கள் நடைபெறுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை வரும் ஏப்ரல் 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் இக் கோரிக்கை பேரணிகள் நடை பெறுகின்றன. இப்பேரணி களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிக ளோடு முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுந்திர தொழிலாளர் யூனியன், மகளிர் அணி ஆகியவற்றின் செயல் வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த முப்பெரும் கோரிக் கைகளில் ஒன்று நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று கல்வி - வேலைவாய்ப்புகளில் முஸ்லிம் களுக்கு 10 சதவீத இடஒதுக் கீட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும்,

தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை 5 சத வீதமாக உயர்த்தித் தர வேண்டும் என தாம்பரத்தில் டைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கோரிக்கை விடுத்த போது தாங்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் போது இக்கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என அம் மாநாட்டு மேடையிலேயே கலைஞர் உறுதியளித்தார்.

அதேபோன்று அ.இ.அ.தி. மு.க. தேர்தல் பிரசார கூட்டங்க ளில் செல்வி ஜெயலலிதா அம்மையார் உரையாற்றிய போது, `முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு’ உயர்த்தித் தரப்படும் என வாக்களித்தி ருந்தார். அந்த வாக்குறுதியை ஏற்று தமிழகத்தில் 3.5 சதவீத இடஒதுக் கீட்டை உயர்த்தித் தர வேண்டும்.

பூரண மதுவிலக்கு
இரண்டாவது கோரிக்கை யாக இந்தியாவில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண் டும். நாட்டில் ஏற்கனவே குடி காரர்கள் பெருகி விட்ட நிலையில் புதிய தலைமுறையி னர் போதைக்கு அடிமையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் இன்று மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிற்னர். இதனால், இந்திய கலாச் சாரம் சீரழிந்துவிடும். தமிழ் பண்பாடு நாசமாகி விடும்.

எனவே, இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத் வேண்டும். அதற்கு முன்னோட் டமாக தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பது எங்களது இன்னொரு கோரிக்கை யாகும்.

சிறைவாசிகள் விடுதலை 
இந்தியாவின் பல்வேறு மாநி லங்களில் முஸ்லிம் இளைஞர் கள் எண்ணற்றோர் கைது செய்யப்பட்டு விசாரணை முடிக்கப்படாமலேயே பல்லாண் டுகளாக சிறை வைக்கப்பட் டுள்ளனர். மகாராஷ்டிரா உள் ளிட்ட மாநிலங்களில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் விசாரணை சிறைவாசிகளில் 80சதவீதம் வரை அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

தமிழகத்தைப் பொறுத்த வரை123 சிறைகளிலும், 22 ஆயிரம் கைதிகள் மட்டுமே வைக்கப்படும் இடவசதி உள் ளது. இதில் தண்டனை பெற்ற கைதிகள் 6 ஆயிரம் பேர் மட்டுமே. 12 ஆயிரம் கைதிகள் விசாரணை முடிக்கப்படாமல் இருக்கிறார்கள். விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட கைதி களிலும் 14 ஆண்டுகளை கடந்தவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் விடுவிக்கப்பட வேண் டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

இந்த முப்பெரும் கோரிக் கைகளை முன்வைத்து ஏப்ரல் 2 கோரிக்கை பேரணி நடைபெறு கிறது.

இந்த பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமின்றி நடுநிலையாளர்க ளான அனைத்து சமுதாயப் பெருமக்களும், முஸ்லிம் லீக் முன்வைத்துள்ள கோரிக்கை களின் நியாயத்தை உணர்ந் துள்ள பெருமக்களும் பெரு மளவில் கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை
இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு அரசால் இழைக்கப் பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங் கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐ.நா. தீர்மானத்தில் மத்திய அரசு உரிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என தி.மு.க. தலைவர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அனைத்து நுணுக்கங்களையும் மிக நன்கு அறிந்த மூத்த தலைவர் கலைஞர். அவர் முன்வைக் கின்ற தீர்வு நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

எனவே. தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு கலைஞரின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்திய அரசு உரிய திருத்தங்கள் கொண்டு வந்து அமெரிக்க தீர்மானத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நாட்டை ஆள்வது யார்?
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற விவாதம் இப்போது நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது. நாட்டை ஆள்வது யார் என்பது முக்கியமல்ல? எந்த கொள்கை உடையவர்கள் ஆள வேண்டும் என்பதே முக்கியம்.

இந்தியா சமயசார்பற்ற ஜனநாயக நாடு என்பதில் உறுதி கொண்ட - சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் - வகுப்பு மோதல்களை உருவாக் காமல் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றக் கூடியவர்கள் - தர்மத்தை நிலைநிறுத்தக்கூடிய வர்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கொள்கை உடையவர்களை ஒருங்கி ணைத்து பாசிச சக்திகளை வீழ்த்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் வேண்டு கோள் விடுத்து அதற்கான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் கலைஞர் தலைமை யிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அந்த கூட்டணியில் வலிமை சேர்க்க பாடுபடும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப் பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ..எம். முஹம்மது அபூக்கர், மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில துணைத் தலைவர் எம்.பி. காதர் உசேன், கரூர் மாவட்டத் தலைவர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், செயலாளர் எம்.ஏ. மஹபூப் அலி, முஸ்லிம் யூத் லீக் மாநிலச் செயலாளர் எம்.கே. முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

"குடும்ப தகராறு வழக்குகளில் கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு காணவேண்டும்" சுப்ரீம் கோர்ட்டு கருத்து


மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் தன் கணவர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடுத்தார். ஆனால் பின்னர் அவர்கள் சமரசமாகி விட்டனர். அதைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த மாநில ஐகோர்ட்டை அந்தப் பெண் நாடினார். ஐகோர்ட்டு அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து அந்த பெண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து, மத்திய பிரதேச ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்தும், அந்த பெண் தன் கணவர் குடும்பத்தினர் மீது தொடுத்த வழக்கை ரத்துசெய்தும் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

வழக்கை ரத்து செய்யலாம்
சட்டப்படி கோர்ட்டில் போராடிக்கொண்டிருப்பதை விட, சம்மந்தப்பட்ட தரப்பினர் இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து, சமரச தீர்வு கண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அதை ஊக்குவிக்க வேண்டும். குடும்ப தகராறு வழக்குகளில், நீதியை நிலை நாட்டுவதற்கு இதைச் செய்வதற்கு நீதிமன்றம் பெரிதாக தயங்கக்கூடாது.சம்மந்தப்பட்ட தரப்பினர் சமரசமாகப் போய்விட்டால், அது தொடர்பான வழக்கினை ரத்து செய்வதற்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 482 வழங்கியுள்ள அதிகாரத்தை ஐகோர்ட்டுகள் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து முயற்சி
சமீப காலமாக இப்படி கோபத்தின் வெளிப்பாடாக குடும்ப தகராறுகள் அதிகரித்து வருகின்றன. திருமணபந்தம் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தம்பதியரின் நலனை முன்னிட்டு, அவர்கள் வாழ்க்கையை சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.குடும்ப தகராறுகளில் குறிப்பாக இத்தகைய தகராறுகள் அதிகரித்து வருகிற சூழ்நிலையில், கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு காண்பதை கோர்ட்டுகள் ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து.

அதிகாரம் உள்ளது
வழக்கின் குற்றம் சமரசம் செய்ய இயலாதது என்றாலும்கூட, அவை குடும்ப தகராறாக இருந்தால், அவர்கள் தங்கள் தகராறை எந்தவொரு நிர்ப்பந்தமும் இல்லாமல் தீர்த்துக்கொண்டனர் என நீதிமன்றம் திருப்தி அடைந்தால், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 320, வழக்கை, நீதிமன்ற நடவடிக்கையை ரத்து செய்வதற்கு ஒரு தடையாக இருக்க முடியாது.இத்தகைய உத்தரவை (வழக்கை ரத்து செய்வதற்கு) பிறப்பிக்க குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 482 ஐகோர்ட்டுக்கும், அரசியல் சட்டம் பிரிவு 142 சுப்ரீம் கோர்ட்டுக்கும் அதிகாரம் அளிக்கிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். தேர்வில் ஆங்கிலத் திறனுக்கு அவசியம் இருக்காது


அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் புதிய முறையை பின்பற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதன்மை தேர்வில் ஆங்கிலத் திறன் அவசியம் இல்லை; அந்த மதிப்பெண், இறுதித் தேர்வில் சேர்க்கப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற, உயரதிகாரிகளை தேர்வு செய்யும் பணியை, யு.பி.எஸ்.சி., அமைப்பு மேற்கொள்கிறது. இம்மாதம், 5ம் தேதி, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பில், பல மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.

அதன்படி, ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுத விரும்பாமல், வட்டார மொழியில் எழுத விரும்பினால், குறைந்தபட்சம், 25 பேர் தேர்ந்தெடுக்கும் மொழி தான், வட்டார மொழியாக இருக்கும். அது போல், விருப்பப்படமாக ஒன்றை இது வரை தேர்வு செய்தவர்கள், இரண்டு பாடங்களை விருப்பப் பாடமாக தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், இலக்கியம் பாடத்தை தங்கள் பட்டப்படிப்பில் எடுத்து படிக்காதவர்கள், அதை சிவில் சர்வீஸ் தேர்வில் விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியாது. அது போல், ஜெனரல் ஸ்டடீஸ் எனப்படும், பொது அறிவு தேர்வில் இருந்த, இரண்டு பாடங்கள், நான்காக விரிவுபடுத்தப்பட்டன.

இவ்வாறு, சில முக்கிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், வட்டார மொழித் தேர்வுக்கு, யு.பி.எஸ்.சி., விதித்த கட்டுப்பாடுகள், அரசியல் கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானது.

இதுகுறித்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ரகளையிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த வாரம், இந்த உத்தரவுகளை, யு.பி.எஸ்.சி., நிறுத்தி, அறிவிப்பு வெளியிட்டது. புதிய முறை விரைவில் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைபாடு மற்றும் பென்ஷன் துறை அதிகாரிகள், யு.பி.எஸ்.சி., அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த மாற்றங்கள், அடுத்த ஆண்டு தேர்வு எழுதுபவர்களுக்குத் தான் பொருந்தும் படி இருக்கும்; வரும், மே, 26ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட தேர்வில், எந்த மாற்றமும் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் குறித்து ஜனாதிபதி பிரணாப் கவலை


திறமைவாய்ந்த ஆசிரியர்களும் சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர்களும் இல்லாததால் உலக அளவில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்திருக்கிறார்.

உத்தராகண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் குறித்து கவலை தெரிவித்தார். அவர் பேசியது:

நமது நாட்டின் தேவைகளை தற்போது இருக்கும் மேலாண்மை நிபுணர்களால் நிறைவேற்ற முடியாது. உலகின் மிகச் சிறந்த நிர்வாகத் திறனுடன் போட்டியிட இந்திய தொழிலகங்கள் தயாராக வேண்டுமானால் அதற்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் திட்டமிட வேண்டும். இந்திய தொழிலகங்கள் சர்வதேச தரத்தில் செயல்படும் விதத்தில் வளர்ச்சி அடைய வேண்டுமானால் நிர்வாகத் திறன் மிக்கவர்கள் தேவை. துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் அது போன்றவர்களின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை. 2006-2007-ஆம் ஆண்டில் வணிகம் மற்றும் நிர்வாக இயல் படிப்பவர்களின் எண்ணிக்கை 23 லட்சமாக இருந்தது. 2011-2012ஆம் ஆண்டில் இது 34 லட்சமாக அதிகரித்தது. ஆனால் இந்த பாடப்பிரிவுகளில் பட்டதாரிகளும் உயர்கல்வி பயின்றவர்களும் மேலும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார, தொழிலக வளர்ச்சிக்கு ஏற்ற கல்வித் திறன் மிக்கவர்களை நாம் உருவாக்க இயலும்.

பல்கலைக்கழகங்களில் புதிய முயற்சிகள், கண்டுபிடிப்புகள் அதிகரிப்பதுதான் நமது வளர்ச்சிக்கு உதவும். 2012-ஆம் ஆண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 42 ஆயிரம். அமெரிக்காவிலும் சீனாவிலும் காப்புரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாகும். கூட்டு முயற்சியில் செய்யப்படும் கல்வி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தர வேண்டும். ஆராய்ச்சி செய்வதற்கான உதவிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தியா மிக உன்னதமான நிலையை அடைகின்ற திருப்புமுனை கட்டத்தில் உள்ளது. இங்கு பல சவால்கள் உள்ளன. அதே சமயம் வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.

2020-ஆம் ஆண்டில் இந்திய பிரஜையின் சராசரி வயது 29 ஆக இருக்கும். அதே நேரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் இளைஞர்களின் சராசரி வயது 37 ஆகவும், மேற்கு ஐரோப்பாவில் 45 ஆகவும், ஜப்பானில் 48 ஆகவும் இருக்கும். உலக அளவில் போட்டியிட நமது இளைஞர்கள் தயாராக வேண்டும் என்றார் அவர்.