Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 7 நவம்பர், 2012

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.

1950-ம் ஆண்டு தலிப்சிங் சவுண்ட் என்ற இந்தியர் முதன் முறையாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதன் பிறகு 2008-ம் ஆண்டு, ஜிண்டால் இரும்பு ஆலை அதிபரும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சா வழியினருமான பாபி ஜிண்டால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது லூசியானா கவர்னராக அவர் பதவி வகிக்கின்றார்.

தற்போது நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 6 இந்தியர்கள் போட்டியிட்டனர். இதில் 5 பேர் குடியரசு கட்சி சார்பிலும், ஒருவர் ஜனநாயக கட்சி சார்பிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் அமெரிக்காவில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது மாவட்டத்தில் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டாக்டர் அமிபேரா வெற்றி பெற்றுள்ளார்.

அமிபேரா, 88,406 ஓட்டுகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டேன்லுங்ரன் 88,222 ஓட்டுகளையும் பெற்றனர். 184 ஓட்டு வித்தியாசத்தில் இவர் வெற்றிக் கனியை பறித்தார்.

ரிக்கி கில், டாக்டர் சையத் தாஜ், டாக்டர் மனன் திரிவேதி, உபேந்திரா சிவுக்குலா, ஜேக், உப்பால் ஆகிய 5 இந்திய வம்சாவழி வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

வன்முறைக்கு மாற்று மருந்து கல்விதான்- ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி


பெருகி வரும் வன்முறை, ஏற்றத்தாழ்வுகளை கல்வியினால் மட்டுமே முறியடிக்க இயலும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், நாரண்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான 2 தங்கும் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம் வளர கல்வி இன்றியமையாதது. கல்வியின் மூலம் சமூகமும் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். வன்முறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை நீக்கும் மாற்று மருந்தாக கல்வி விளங்குகின்றது. செயல்படுவதற்கான நேரம் இதுதான்.

உங்கள் பாதையில் வரும் வாய்ப்புகளை நீங்கள் தவற விட்டுவிடக் கூடாது. நாடு வளர்ச்சியடைந்து வருகின்றது. கிராமங்களில் ஆஸ்பத்திரிகளும், கட்டிடங்களும் உள்ளன. ஆனால், டாக்டர் இல்லை. 70 சதவீதம் மக்கள் கிராமங்களில் தான் வாழ்கின்றனர்.

நாடெங்கிலும் 6 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பணியாற்ற வேண்டும் என்ற உள்ளுணர்வு வரும் வரை யாரும் கிராமங்களுக்கு சென்று சேவையாற்ற முன் வருவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்

மத்தியபிரதேச பிஜேபி அரசுக்கு எதிராக மேதாபட்கர் போராட்டம் தொடர்கிறது


மத்திய பிரதேச மாநிலத்தில் மின்திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதைக் கண்டித்து, சமூக சேவகியும், நர்மதா பாதுகாப்பு குழு தலைவருமான மேதா பட்கர் தலைமையில் கடந்த 4-ம் தேதி சிந்த்வாராவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மேதா பட்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிந்த்வாரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து தன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று, நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மேதா பட்கர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வதாகவும் அவர் எச்சரித்தார்.

மேதா பட்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லியில் உள்ள மத்திய பிரதேச பவன் அருகில் போராட்டம் நடத்தினார். அப்போது மேதா பட்கரை கைது செய்திருப்பது ஜனநாயக படுகொலை என்று அவர் கடுமையாக சாடினார்.

மேதா பட்கர் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகியும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தாததைக் கண்டித்து, ஜன் சங்கர்ஸ் மோர்ச்சா உறுப்பினர் அனுராக் மோடி, ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கோர்ட் உத்தரவையடுத்து மேதா பட்கர் மற்றும் 19 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.