Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 7 நவம்பர், 2012

வன்முறைக்கு மாற்று மருந்து கல்விதான்- ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி


பெருகி வரும் வன்முறை, ஏற்றத்தாழ்வுகளை கல்வியினால் மட்டுமே முறியடிக்க இயலும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், நாரண்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான 2 தங்கும் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம் வளர கல்வி இன்றியமையாதது. கல்வியின் மூலம் சமூகமும் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். வன்முறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை நீக்கும் மாற்று மருந்தாக கல்வி விளங்குகின்றது. செயல்படுவதற்கான நேரம் இதுதான்.

உங்கள் பாதையில் வரும் வாய்ப்புகளை நீங்கள் தவற விட்டுவிடக் கூடாது. நாடு வளர்ச்சியடைந்து வருகின்றது. கிராமங்களில் ஆஸ்பத்திரிகளும், கட்டிடங்களும் உள்ளன. ஆனால், டாக்டர் இல்லை. 70 சதவீதம் மக்கள் கிராமங்களில் தான் வாழ்கின்றனர்.

நாடெங்கிலும் 6 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பணியாற்ற வேண்டும் என்ற உள்ளுணர்வு வரும் வரை யாரும் கிராமங்களுக்கு சென்று சேவையாற்ற முன் வருவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக