Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 10 ஜூலை, 2012

இ-டாய்லெட் குற்றாலத்தில் .......

 "குற்றாலத்தில் "இ டாய்லெட்' வசதி வரும் 26ம் தேதி துவக்கப்படுகிறது' என தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் கூறினார். குற்றாலத்தில் சீசன் களை கட்டி வருகிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் மெயின் அருவி, பழையகுற்றாலம் பகுதியை எம்.எல்.ஏ.,சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மெயின் அருவி பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரியிடம் எம்.எல்.ஏ.,கூறினார். மேலும் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். உண்மையிலேயே தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா என குடிநீரை குடித்து பார்த்து சரத்குமார் ஆய்வு செய்தார்.


 பழைய குற்றால அருவிக்கு சென்று ஆய்வு நடத்திய எம்.எல்.ஏ.,விடம் அங்கு அடிப்படை வசதிகள் மேன்மைபடுத்தப்பட வேண்டும் என்பதை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதன் பின்னர் எம்.எல்.ஏ.,சரத்குமார் நிருபர்களிடம் கூறும் போது, ""குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 26ம் தேதி "இ டாய்லெட்' வசதி குற்றாலத்தில் துவக்கப்படுகிறது. மெயின் அருவி அருகில் பெண்கள் துணிகளை துவைப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் பழைய துணிகள் ஆற்றில் விடப்படுகிறது.