Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 31 ஜூலை, 2012

உழைப்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல :நிரூபித்தது 103

 செல்லப்பிள்ளையார்குளத்தில் 103 வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தினமும் மூதாட்டி பூ விற்று வருகிறார்.

ஆழ்வார்குறிச்சி அருகே ஏ.பி.நாடானூரில் உள்ள இந்து துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி கோமதியம்மாள். இவர்களது மகன் மகாலிங்கம். மகாலிங்கத்தின் மனைவி பன்னீர்செல்வம். ராமகிருஷ்ணன் கடந்த 1948ல் இறந்துபோனார்.
இவரது மனைவி கோமதியம்மாள் தனது வீட்டிலேயே தோட்டம் அமைத்து மல்லிகை செடி பயிரிட்டுள்ளார்.



 தினமும் காலையில் 6.30 மணிக்கு எழுந்து பூக்களை பறித்து அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் தனது ஒரே மகன் மகாலிங்கம் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் இறந்துபோனார். மனம் தளராத கோமதியம்மாள் தனது உழைக்கும் பணியை அதிகப்படுத்தி தினமும் பூ வியாபாரம் செய்து வருகிறார். 


தற்போது வயது முதிர்ந்த நிலையில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு தனது கிராமத்திற்குள்ளேயே நாள் ஒன்றுக்கு குறைந்தது 60 ரூபாயாவது கிடைக்கும் வகையில் பூ விற்று வருகிறார். தனது பேரன் பாலகிருஷ்ணனின் அரவணைப்பில் வசித்து வரும் கோமதியம்மாள், தனது கணவரின் பென்ஷன் தொகை வாங்குவதற்காக மாதத்திற்கு ஒருநாள் தனது பேரனுடன் பைக்கில் ஆழ்வார்குறிச்சி ஸ்டேட் பாங்க் வருகிறார் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் வந்தபோதிலும் 103 வயதிலும் தினமும் தனது தோட்டத்திலுள்ள பூவை தானே பறித்து பூ விற்று வருகிறார். பூ விற்று விட்டு ஓய்வெடுக்க விரும்பாமல் தென்னை குச்சிகளை கொ ண்டு துடைப்பம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்.

சிறிய கம்பை கையில் வைத்து கொண்டு வேகமாக நடந்து பூ விற்க வரும் கோமதியம்மாள் மற்றும் ஏ.பி.நாடானூரில் 80 வயதிலும் தோசை வியாபாரம் செய்யும் பால்துரை போன்ற முதியவர்களை அரசு கவுரவிக்க வேண்டும். சிறிய வயதிலும் உழைக்காமல் சோம்பேறியாக இருக்கும் பலருக்கு மத்தியில் தள்ளாத வயதிலும் உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் இவர்களது வாழ்வு பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.