Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடி கொடியேற்ற முடியாது:சிவானந்த் திவாரி

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சிவானந்த் திவாரி கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். போலவே மக்களிடையே வெறுப்பையும் மததுவேஷத்தையும் உருவாக்க மோடி முயற்சிக்கிறார்.

நேற்றைய சுதந்திர தின பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவர்கள் எல்லாம் மோடி வந்த வழியில் வந்தவர்களல்ல. அவர்கள் அனைவருமே காங்கிரஸ்காரர்கள்.

காந்தியின் படுகொலையை பற்றி மோடிக்கு நினைவிருக்குமா? என்பது எனக்கு தெரியாது.

ஆர்.எஸ்.எஸ். கடைபிடித்த மததுவேஷமும் பிறமத வெறுப்புணர்வும்தான் காந்தி படுகொலைக்கு காரணம் என குரு கோல்வார்கருக்கு கடிதம் எழுதிய சர்தார் வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் தடை செய்தார்.

இதே போன்ற வெறுப்புணர்வைதான் மோடியும் தற்போது ஏற்படுத்தி வருகிறார்.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் வாழ்ந்த நாட்டில் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி பிரதமராக துடிக்கும் மோடியின் கனவு ஒருபோதும் பலிக்காது.

ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடியால் சுதந்திர கொடியை ஏற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.