Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 ஜூன், 2013

குஜராத்தில் பல்கலைகழக தொழிலாளர்கள் ஊதியம் வழக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி

குஜராத்தில், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், சரியான முறையில் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

 ஜூனாகட் விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், பணியாளர்கள்,  தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென, மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். பின், விடுவிக்கப்பட்டனர்.

இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை கழகம் வெளியீடு

அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், கடந்த 2011-12 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறந்த கல்லூரி எது? எந்த அடிப்படையில் கல்லூரியை தேர்வு செய்யலாம்? உள்ளிட்ட பலவிதமான கேள்விகளுடன், மாணவர்கள் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கும் நேரம், இந்த கவுன்சிலிங் நேரம். இந்த நேரத்தில்தான், இந்த பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-2012ம் கல்வியாண்டில், அகடமிக் அளவில், எந்தெந்த கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றி, அண்ணா பல்கலை வெளியிட்ட பட்டியல், மாணவர்களுக்கு பெரியளவில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் முடிவெடுப்பது சற்று எளிதாக இருக்கும என்று நம்பப்படுகிறது.

இக்கல்லூரிகள் பற்றிய விபரங்கள் அறிய http://www.annauniv.edu/acaper/acaper.html என்ற வலைதளம் செல்க.

மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய் விமான சேவை : மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமான சேவை வழங்க உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை கீழக்குயில்குடி வக்கீல் விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: ராயல் ஏர்போர்ஸ் சார்பில், இரண்டாம் உலகப்போரின்போது 1942 ல் மதுரையில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1956 ல் துவங்கியது. போயிங் (737) விமானம் 1970 ல் இயக்கப்பட்டது.

தற்போது, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மதுரை, திண்டுக்கல் உட்பட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை, பெங்கரூரு வேலைக்குச் செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய்க்கு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய செல்கின்றனர்.மதுரையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்க போதிய வசதிகள் இல்லை என, சிவில் விமான போக்குவரத்துத்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், மதுரை விமான நிலையத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைத்தனர். முனையம் 2010 நவம்பரில் செயல்பட துவங்கியது. அப்போது, மதுரையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றனர். மிகின் லங்கா விமான சேவை 2012 டிசம்பரில் துவங்கியது. குடியேற்றம் (இமிகிரேஷன்), சுங்கப்பிரிவு அலுவலகங்கள் செயல்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் சிங்கப்பூர், துபாய் விமான சேவையை ஜனவரியில் 10 ஆயிரத்து 134 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். மதுரை விமான நிலையம் ஜனவரியில் 7171 பயணிகளை கையாண்டுள்ளது. மதுரை அருகே கொடைக்கானல், மூணாறு உள்ளதால் சுற்றுலா வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மதுரையிலிருந்து 3 மெட்ரோ நகரங்களுக்கு விமான சேவை உள்ளது.

மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமானங்கள் இயக்க வலியுறுத்தி, சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்கு மனு செய்தேன். மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஏப்.,9 ல் வலியுறுத்தினேன். விமான நிலைய ஆணைய தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வந்தது. மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமான சேவை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன் ஆஜரானார். சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.