Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 25 ஏப்ரல், 2013

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் :நெல்லை கலெக்டர் சி.சமயமூர்த்தி


தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறையில் வருங்காலத்தில் மாணவ, மாணவிகளின் தேவை அதிகரித்து உள்ளது. அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில் மையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரி பேராசிரியர்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 கருத்தரங்கம் நடத்தி 6 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

9–வது கருத்தரங்கம் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

தகவல் தொழில் நுட்பம்
நாடு வளர்ந்து வரும் நிலையில் தகவல் தொழில் தொடர்பு தொழில் நுட்பம் என்பது அவசியமானது. போலீஸ் துறையில் கூட கம்ப்யூட்டரின் தேவை அதிகரித்து உள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்க கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழக அரசு, தகவல் தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப பூங்காங்களை தொடங்கி உள்ளது. இந்த பூங்காக்களில் பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளன.

மானியத்துடன் கடன்
தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக வரி விதிப்பில் விதி விலக்கு அளித்து உள்ளது. ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கி வருகிறது.

இந்த தொழில் நுட்ப பூங்காக்கள் மூலம் நமது நாட்டில் இருந்து, உலக நாடுகளை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் வேலை செய்ய அதிக அளவு மாணவ, மாணவிகள் தேவைப்படுகிறார்கள். அதன் தேவையை கருத்தில் கொண்டு தான் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கருத்தரங்குகள் பெரிய நகரங்களில் தான் நடத்தப்படும். இந்த வாய்ப்பு நெல்லைக்கு கிடைத்து உள்ளது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள்.

வேலை வாய்ப்பு
நீங்கள் மாணவர்களை தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தயார் செய்ய வேண்டும். எப்படி மாணவர்களை தயார் செய்வது, வருங்காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று இங்கு விளக்கம் அளிப்பார்கள். அதன் நோக்கத்தை பேராசிரியர்கள் புரிந்து கொண்டு, அதன்படி மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சி.சமயமூர்த்தி பேசினார்.

செராமிக் பொறியியல் படிப்பு


செராமிக் பொறியியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், களிமண் தொடர்பான பண்படுத்துதல், மணல் மற்றும் களிமண் போன்ற உலோகமல்லாத மற்றும் உயிரற்ற பொருட்களை பலவித பயன்பாட்டுப் பொருட்களாக தன்மை மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை பிரதானமாக செய்வார்கள்.

வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என்பதால், களிமண் இன்றைய உற்பத்தி உலகின் பல அம்சங்களில் பயன்படுத்தப்படுகிறது. களிமண் பொறியியல் படித்த ஒருவர், தொழில்நுட்ப மேலாண்மையில் பயிற்சி பெறுபவர், நிர்வாகி, திட்ட மேற்பார்வையாளர் விற்பனை பொறியாளர் அல்லது தொழில்நுட்ப ஆலோசகர் போன்ற நிலைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

தனியார் மற்றும் அரசுத் துறைகளில், செராமிக் பொறியாளர்களுக்கு ஏரளமாக பயில வாய்ப்புகள் உள்ளன. ஆய்வகம் அல்லது களிமண் பொருள் உற்பத்திக் கூடங்கள் போன்றவைகளில் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்ற முடியும். செராமிக் பொறியலில், அறிவியல் மற்றும் தயாரிப்பு அம்சங்களில் அனுபவமுடையவர்கள், நிர்வாகிகள், திட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனை பொறியாளர்கள் போன்ற பெரிய நிலைகளிலான பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.

சிவில் நியூக்ளியர் களம், எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவையும், செராமிக் துறையில் அபரிமித பணி வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள், ஓரிடத்தில் ஊதியத்திற்கு பணிபுரிவதைவிட, அத்துறை தொடர்பான புதிய தொழில்களைத் தொடங்கி வாழ்வின் புதிய உயரங்களை அடையலாம்.

புதிதாக படித்து வெளிவருபவர்கள், அரசு மற்றும் தனியார் ஆகிய 2 துறைகளிலும், ஆரம்பத்தில் ரூ.9000 முதல் ரூ.13000 வரையில் ஊதியம் பெறுகிறார்கள். அதே சமயத்தில் அனுபவமுள்ள ஒரு பொறியாளர் மாதம் ரூ.50,000 மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கிறார்.

செராமிக் துறையில் பி.இ, பி.டெக்., பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ ஆகியவற்றில் எந்த ஒன்றை படிக்க வேண்டுமென்றாலும், ஒருவர் தனது பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை கட்டாயப் பாடமாகக் கொண்டு குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர 60 சதவீத மதிப்பெண்கள் தேவை.

பெரும்பான்மையான கல்லூரிகளில், மாணவர்களைச் சேர்க்க நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதேசமயம் பணிபுரியும் நபர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ்அமைப்பில் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி, அதன்மூலம் தொலைநிலைக் கல்வி முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

1. Alagappa college of Technology. Chennai

2. Andhra Unibersity College of Engineering, Visakapattinam

3. Banaras Hindu University. Varanasi.

4. Central Glass and Ceramic Research Institute. Kolkata

5. College of Engineering and Technology, Bikanar

6. Gobernment College of Engineering and Ceramic Technology, Kolkatta

7. NIT, Rourkela

8. Anna University, Chennai 

இளநிலை பட்டபடிப்புகளுக்கு உதவித் தொகை


இந்தியாவில் கலை/அறிவியில்/வணிகம்/மருத்துவம்/பொறியியல் அல்லது வேறு தொழிற்கல்வியில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கல்விக் கட்டணம், இதரக் கட்டணம், விடுதி/உணவுக் கட்டணம் ஆகியவை சேர்ந்ததாக இந்த நிதியுதவி அமையும்.

www.faeaindia.org ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவது சிறந்தது. அல்லது இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் தபாலில் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 
பவுன்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலென்ஸ் அன்ட் ஆக்சஸ் (எப்ஏஇஏ),
சி-25, கடாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, நியூ மெஹ்ரவுலி ரோடு, நியுடெல்லி-110016.
தொலைபேசி 011-41689133

உயர்கல்விக்கான உதவித்தொகை


அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனம் (NISTADS), உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.

தகுதி: 12ம் வகுப்பை முடித்தவர்கள் மட்டுமே, இதைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.

வயது:
விண்ணப்பிக்கும்போது, 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை:
அதிகபட்சம் 5 வருடங்கள் வரை அல்லது படிப்பு முடியும் வரை வருடம் ரூ.80,000 வழங்கப்படும். (இரண்டில் எது முன்னதாக நிகழ்கிறதோ, அதுவே கணக்கில் எடுக்கப்படும்).

விண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற விபரங்களை அறிய www.inspire-dst.gov.in என்ற இணையதளம் செல்க.

வானிலை அறிவியல்(Weather Science) படிப்புகள்


வானிலை அறிவியல் என்பது, வளிமண்டலம் குறித்த அறிவியலின் ஒரு உட்பிரிவு. இது வானிலை மாற்றங்களையும், வானிலை பற்றிய முன்னறிவிப்புகளையும் மையமாகக் கொண்டு இயங்குகிறது.

இத்துறை, பூமியின் வளி மண்டலத்தில் நிகழும் இயற்பியல், வேதி மாற்றங்களையும், இயக்கங்களையும் உள்ளடக்கியது. வளி மண்டலத்துக்கும், புவி மேற்பரப்புக்கும் உள்ள தொடர்பு இயக்கங்களிலும் கவனம் செலுத்துகிறது.

மீடியா வாயிலாக முன்னறிவிப்புகளை வெளியிடுவோர் இத்துறையினரே. சுனாமி போன்ற இயற்கை பேரழிவுக்குப் பின், இதன் அவசியம் இன்றியமையாததாகிறது.

தகுதிகள் :
வானிலை அறிவியல் துறையில் பணிபுரிய விரும்புவோர், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்து, இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவேண்டும். இதில் பி.எஸ்சி., பி.டெக்., இளநிலைப் படிப்புகள் உள்ளன.

முதுநிலை படிப்பை எம்.எஸ்சி., எம்.டெக்., படிப்புகளாக இரண்டு ஆண்டுகளில் படிக்க முடியும். இத்துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க விரும்புவோர், இளநிலையில் வானிலை அறிவியல், இயற்பியல் அல்லது இன்ஜினியரிங் துறையில் படித்திருக்க வேண்டும்.

பணி வாய்ப்புகள்:
இத்துறையில் படித்தவர்களுக்கு, அரசுத்துறையில்தான் பணி வாய்ப்புகள் உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையுடன் தொடர்புடைய சில தனியார் நிறுவனங்களிலும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ராணுவப்பணிகளில் படைகளை நகர்த்துவது, விமானப் படை இயக்கம், குண்டு வீசுதல், கடற்படையை இயக்குவது போன்றவற்றுக்கு வானிலை தகவல் இன்றியமையாதது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டீயாரலஜி, இந்திய வானிலை அறிவியல் துறை, இந்திய விமானப்படை, விண்வெளி ஆராய்ச்சி மையம், நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி ஆகியவற்றில் பணிபுரியலாம்.

இத்துறை பல்வேறு சவால்களையும், சாதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. கல்வித் தகுதியையும், அனுபவத்தையும் பொறுத்து நல்ல ஊதியத்தை பெற முடியும்.

அரசுப் பணியில் நுழைந்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளமாகப் பெறலாம். வெளிநாடுகளில் வேலை கிடைத்தால், அதிக சம்பளம் பெற முடியும்.

கல்வி நிறுவனங்கள்:
* பாரதியார் பல்கலைக்கழகம்
* கொச்சின் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
* ஆந்திரா பல்கலைக்கழகம்
* ஐ.ஐ.டி., கோரக்பூர்