Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 13 டிசம்பர், 2012

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு தடை !


'சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு, கேரளாவில் அனுமதியில்லை' என, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், அன்னிய முதலீட்டை அனுமதிக்க, அந்தந்த மாநில அரசுகள், முடிவு எடுத்து கொள்ளலாம் என, மத்திய அரசு தெளிவுபடுத்திஉள்ளது. நேற்று, கேரள சட்டசபையில், மாநிலத்தில் பாராம்பரியமாக நடக்கும், கயிறு திரிப்பு, முந்திரி பதப்படுத்துதல், ஜவுளி தயாரிப்பு, பீடி சுற்றுதல் ஆகிய தொழில்களில் உள்ள பிரச்னைகள் குறித்து, ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதற்கு பதிலளித்து பேசிய, முதல்வர், உம்மன் சாண்டி கூறியதாவது:

ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி காலத்தில், எந்த சூழ்நிலையிலும், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது இல்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவில் மாற்றம் இல்லை. இதற்கான அனுமதியை, மேலிடத் தலைவர்களிடம் பெற்றுள்ளோம்.இந்த விஷயத்தில், நம், எம்.பி.,க்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். இருப்பினும், பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில், கட்சியின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஓட்டளித்தனர்.மாநில அரசின் முடிவு குறித்து, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கும், கட்சி தலைவர், சோனியாவுக்கும் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.920 கோடி முதலீட்டில் சூரிய மின் சக்தி பூங்கா


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும் திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த பூங்காவில் 100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல், தமிழகத்தில், வரும் 11 ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ல், தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டுக்குள் சுமார் 3000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டங்களை முதலீட்டாளர்கள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்கள் அமைக் கப்படுவதை ஊக்குவிப்பதும் இக்கொள்கையின் ஒரு அம்சமாகும்.

இந்த இலக்கினை எட்டும் வகையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 1000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக் களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிறுவுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும், திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ் ராஜ் வர்மா, திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நரசிம்மனும் கையெழுத்திட்டனர்.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை சிறப்பாக அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், வடிகால் வசதிகள், போதுமான தண்ணீர் வசதி, செம்மைப்படுத்தப்பட்ட நில வடிவமைப்பு, மின்சாரம் வெளியேற்று வசதிகள் போன்றவைகளை சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் அமைக்கப்படும். இதனால், இப்பூங்காவில் அதிக அளவில் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைப் பதற்கு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது அரசு மற்றும் தனியாருடைய கூட்டு முயற்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா திட்டம் 12 மாதங்களில் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இந்தப் பூங்கா வானது, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ன்படி அமைக்கப்படும் முதலாவது சூரிய மின்சக்தி பூங்காவாகும். நிகழ்ச்சியில் நிதி, மின்சாரம், தொழில்துறை முதன்மைச் செயலாளர், எரிசக்தித்துறை செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எல். அன் டி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ராஜவேல், கெனடியன் சோலார் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் வினய் ஷெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சவூதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தில் அதிகமான இந்திய தொழிலாளர்கள் உள்ளனர்


சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமான இந்தியா தொழிலார்கள் பணி செய்து  வருகின்றனர்

வெளிநாட்டு இந்திய தொழிலாளர்கள் நலன் விவகார அமைச்சர் வயலார் ரவி ,சவுதி அரேபியாவில்  இரண்டு மில்லியன் இந்தியர்களும் ,ஐக்கிய அரபு எமிரேட்டில் 1.8 மில்லியன் இந்தியர்களும்  வேலை செய்கின்றனர் என்று கடந்த புதனன்று  மக்களவையில்  கூறினார்.

மேலும் ,குவைத்(641,062 ) ,ஓமன் (581,832), கத்தார் (500,000) மற்றும் பஹ்ரைன் (400,000) ,ஈராக்கில் 16,000 இந்திய தொழிலாளர்கள், லெபனான் 10,000, ஜோர்டான் 9,000 மற்றும் லிபியா 1,800  என்றும்  அவர் கூறினார்.

மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் தேவையில்லை


கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். பள்ளி படிப்பை தொடர முடியாதவர்கள், பிழைப்பிற்காக இடம் மாறியவர்கள், இச்சட்டத்தால் பலன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய சட்டப்படி, "13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடை நின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று தேவையில்லை. பெற்றோர் உறுதி மொழியை, வயது சான்றிதழாக ஏற்று, தேர்வுக்கு முதல் நாள் கூட சேர்க்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை உடனடியாக அமல்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்தின் படி, பிழைப்பிற்காக வெளி மாவட்டங்களில் குடியிருப்போர், தங்கள் குழந்தைகளை, வசிக்கும் பகுதி பள்ளிகளிலே சேர்க்க, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் மதுரா கோட்ஸ் கதவடைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு


தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை யில் ஏற் பட்ட இழுபறியை தொடர்ந்து விகேபுரம் மதுரா கோட்ஸ் ஆலை நிர் வாகம்  நேற்று 2வது ஷிப்ட் முதல் கதவடைப்பு செய்தது. இதையொட்டி ஆலை முன்பு பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

மதுரா கோட்ஸ் நிறு வனம் மதுரை, தூத்துக்குடி, விகேபுரம் ஆகிய இடங்களில் 133 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மதுரையில் 290 பேரும், தூத்துக்குடியில் 250 பேரும், விகேபுரத்தில் 780 பேரும் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

 இவர்களுக்கு இந்தாண்டுக்கான சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்தது. இதில் மாத சம்பள உயர்வு ரூ.4003ம், அரியர்ஸ் ரூ. 6 ஆயிரம் வழங்கவும் நிர்வா கம் ஒப்புகொண்டது. இதனை மதுரை, தூத்துக் குடி ஆலைத் தொழிலாயளர் கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் விகேபுரம் ஆலைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கூடுதல் சம்பள உயர்வு கேட்டு, 6ம் தேதி முதல் ஸ்டிரைக் செய்ய போவதாக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதன்படி கடந்த 5ம் தேதி மதுரையில் பேச்சு வார்த்தைக்கு நிர்வாகம் சம்மதித்தது. இந்நிலையில் பேச்சுவார்தைக்கு முன்பே கடந்த 1ம் தேதி 2வது ஷிப்ட் முதல் 4 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். எஞ்சிய 4 மணி நேரம் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

நேற்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு மதுரை யில் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால்  தொழிலாளர்களின் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தால் நஷ்டம் ஏற்படுவதாக காரணம் காட்டி  நிர் வாகம் நேற்று 2வது ஷிப்ட் முதல் போலீஸ் பாதுகாப்புடன் கதவடைப்பு செய்தது.