Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 6 அக்டோபர், 2012

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வரலாறு காணாத குடிநீர் மற்றும் மின்சாரம் தட்டுப்பாடு : ஓட்டல்கள் மூடல்


கடையநல்லூர், பகுதியில் ஏற்பட்டு வரும் மின்தடையினால் தொழில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் கடந்த நாட்களில் கடுமையாக காணப்பட்டு வரும் மின்தடையினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்சப்ளை பெருமளவில் தடைபட்டு வருவதால் மின்சாரம் தொடர்பான அனைத்து பணிகளும் பெருமளவில் முடங்கி வருகின்றன.

ஏற்கனவே கடையநல்லூரில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மின்தடையும் தொடர்வதால் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.
சிறு தொழில் நிறுவனங்களும் முறையாக தொழிலை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. கடந்த கடந்த நாட்களில்  இப்பகுதியில் ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக  தொழில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

 மற்ற பகுதிகளை விட காற்றாலை மின்உற்பத்தியை வைத்து கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் போதுமான அளவில் மின்சப்ளை பாதிப்பின்றி ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காற்றாலைகளும் சீராக இயங்காததால் அதன் மூலமான மின் உற்பத்தி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏனைய பகுதிகளில் நிலவி வருகின்ற மின்தடை போன்று கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

பகல் நேரத்தில் சுமார் 10 மணி நேரமும், இரவில் சுமார் 6 மணிநேரம் வரையிலும் மின்தடை தொடர்வதால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான மின்தடை குறித்து இப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மதுரையிலிருந்து உபமின் நிலையங்களுக்கு வரும் தகவல்களை பொறுத்தவரை சப்-ஸ்டேஷன்களில் இருந்து செல்லக்கூடிய மின் வினியோகத்தை நிறுத்தம் செய்திடவும், மீண்டும் தகவல் வரும்போது ஜார்ஜ் செய்தால் போதும் என்று கூறிவிடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.