Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

திருச்சி - கொழும்பு விமான சேவை ஜூன் 1ல் நிறுத்தம் : தமிழக வர்த்தகர்கள் கவலை


இலங்கை சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் எதிரொலியாக, திருச்சியில்இருந்து, வாரம் நான்கு முறை, கொழும்புக்கு இயக்கப்படும், மிகின்லங்கா விமான சேவை, வரும் ஜூன், 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி தொழில் செய்து வரும், தமிழக வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து, திருச்சிக்கு, வாரம் நான்கு முறை வந்து செல்லும், மிகின்லங்கா விமானம், பயணிகள் பற்றாக்குறையால், வரும், ஜூன், 1ம் தேதி முதல், தன் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் நிறுவனம், தற்போது, வாரத்துக்கு 14 முறை, கொழும்பிலிருந்து, திருச்சி வந்து செல்கிறது. அந்நிறுவனமும் தன் சேவையை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மிகின்லங்கா ஏர்-லைன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், விமான சேவையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது' என்று, கூறினர்.
திருச்சியிலிருந்து, கொழும்புக்கு மிகின்லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் மட்டுமே விமான சேவை அளித்து வருகின்றன. ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் நிறுவனமும் சேவை நிறுத்த முடிவை எடுத்தால், திருச்சியிலிருந்து கொழும்பு நகருக்கு எந்த விமான சேவையும் கிடையாது.
இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் தமிழர்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், வர்த்தகர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவர்.

பாதிப்பு ஏற்படும் : இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி விமான நிலையத்திலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கும், மேற்கு ஆசிய நாடுகளுக்கும் தேங்காய், வெங்காயம், கறிவேப்பிலை, முருங்கைக்காய், காய்கறிகள், மருந்து பொருட்கள், தோல், துணி வகைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவையெல்லாம் மிகின்லங்கா, ஸ்ரீலங்கன் ஏர்-லைன்ஸ் மூலம் தான் கொழும்பு நகருக்கு சென்று, அங்கிருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்கின்றன.

தற்போது விமான சேவை குறைவதால், வர்த்தகமும் வெகுவாக பாதிக்கப்படும். இதனால் தமிழக வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியு உள்ளது. ஒருபுறம் இலங்கை சுற்றுலா பயணிகள் மீது தாக்குதலால், பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது என்றால், மறுபுறம் வர்த்தகர்களிடம் திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளும், இமிகிரேஷன் அதிகாரிகளும் காட்டும் கெடுபிடியும் தான், கொழும்பு செல்லும் பயணிகள் குறைவுக்கு காரணம். தற்போது இலங்கையிலிருந்து வர்த்தகர்கள் சிலர் மட்டுமே திருச்சி வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலிருந்தும் வியா
பாரிகள் மட்டுமே இலங்கை செல்கின்றனர். மற்றபடி சுற்றுலாவுக்கு என்று யாரும் வருவதில்லை. பயணிகளின் பற்றாக்குறையை, "கார்கோ' மூலம் விமான நிறுவனங்கள் ஈடுகட்டி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில், சிலர் நடத்தும் வன்முறை சம்பவங்களால், தமிழகத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டு, விடுதிகள், ஓட்டல்கள், டாக்சி ஓட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழக பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

பொறியியல் விண்ணப்பம் ஏப்ரல்.,3வது வாரம் விநியோகம்


உச்ச நீதிமன்றம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ஆகியவற்றின் உத்தரவைத் தொடர்ந்து, 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, பொதுப் பிரிவு என அனைத்து பிரிவினருக்குமான கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. மேலும், பி.இ. முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளிப்போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் கலந்தாய்வும் தள்ளிப்போனது. பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளும் செப்டம்பர் 1-ம் தேதிதான் தொடங்கின.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதியே தொடங்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக 2013-14 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகத்தையும் ஏப்ரல் 3-வது வாரத்திலேயே தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி  கூறியது:

ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவைத் தொடர்ந்து, 2013-14-ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, இதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் மூன்றாவது வாரம் முதல் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் விநியோகிக்கத் தொடங்கும் தேதி விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மேலும், பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிவிடும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகம் எடுத்து வருகிறது என்றார்.

மோடியை ஏற்றுக் கொள்ளமாட்டோம்; மதச்சார்பற்ற தலைவராகத் திகழும் ஒருவர்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்


குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு நடந்த வகுப்புக் கலவரத்தைத் தடுக்க முதல்வர் என்ற முறையில் நரேந்திரமோடி தவறிவிட்டார். அப்படிப்பட்ட ஒருவரை பிரதமர் வேட்பாளராக எப்படி ஏற்பது என்றும் ஐக்கிய ஜனதாதளம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்மைக்காலமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரைப் பிரதமர் வேட்பாளர்போல் சித்தரித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கு ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் பலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது வெளிப்படையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.முதல்நாள் கூட்டத்துக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்மைக்காலமாக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் போல பாரதிய ஜனதா கட்சியினர் உருவகப்படுத்தி வருகின்றனர். இதை ஐக்கிய ஜனதா தளம் ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் பாரதிய ஜனதா தலைமை அதன் நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டும். ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற தலைவராகத் திகழும் ஒருவர்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய ஜனதா தளம் உறுதியுடன் உள்ளது,என்றார் .