Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 22 ஜூன், 2012

ராமகோபால அய்யரின் கொக்கரிப்பு


ராமகோபாலன் விடுத்துள்ள அறிக்கையில் ( ஆனந்த விகடன் 21 / 06 /2012 ) கூறியிருப்பதாவது ,

                  கிராமங்களிலும் ,நகரங்களிலும் எருமைமாடுகளை பார்ப்பது அரிதாகி வருகிறது .இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள மாடுகளும் ,பசுக்களும் ,எருமைகளும் கொல்லப்பட்டு மாமிசங்களாகவும்,தோல்களாகவும்,வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிவிடும் .தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்க பசுக்கள் ,மாடுகள் பாதுகாக்கப்படவேண்டும்,தமிழகத்தில் மாடுகளை அறுக்க தடை செய்யவேண்டும் ,என்று கூறியுள்ளார் .


                எருமை மாடுகளையும் ,மாடுகளையும் பார்ப்பது அரிதாகி விட்டால் ,ராமகோபால அய்யர் தன் சொந்த செலவில் தமிழகம் முழுவதும் ஒரு வீட்டுக்கு ஒரு பசு ,ஒரு மாடு என்று கொடுத்து எண்ணிக்கையை கூட்டலாம் .
தமிழகம் பாலைவனம் ஆகாமல் இருக்க ,மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும், மரங்களை மாநிலம் முழுவதும் நட வேண்டும் என்று சொல்லுவதற்கு உரிய அறிவு கூட இல்லாத ,சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான  ராமகோபாலன் போன்ற தீவிரவாதிகளை தமிழக அரசு உடனே கைது செய்து ,அவர்கள் பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்பது தான் அனைத்து சமுதாய மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் .

அதிசய கண்டு பிடிப்பிலும் தில்லு முல்லா ?


சிங்கப்பூரை சேர்ந்த சீன பெண் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சோதனை குழாய் முறையில் குழந்தை பெற்றார். ஆனால், அந்த குழந்தையின் உடல் அமைப்பு மற்றும் தலைமுடியின் நிறம் மாறுபட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்தான் சோதனை குழாய் குழந்தை பெற்ற ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டார்.
 
அப்போது சோதனை குழாய் குழந்தை உருவாக்கும் போது கணவரின் உயிரணுவை இவரது கருமுட்டையுடன் சேர்ப்பதற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்த்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் அந்த ஆஸ்பத்திரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே நடந்த தவறுக்கு நஷ்டஈடு வழங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் முன்வந்துள்ளது.

இன்ஜி., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு பி.இ., பி.டெக்., சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அழகப்பா பொறியியல் கல்லூரி செயலாளர் மாலா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டில் சேர, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஜூலை 2வது வாரத்தில் கவுன்சிலிங் நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் 33 மையங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க கடைசி நாள் ஜூன் 25.
விண்ணப்பம் பெற குறுகிய நாட்களே உள்ளதால், மாணவர்கள் நலன் கருதி, ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.300க்கான வங்கி காசோலையை இணைக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணமில்லை. ஜாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.
பாலிடெக்னிக் மதிப்பெண் சான்று பெற காலதாமதம் ஆவதால், ஆன்லைனில் மதிப்பெண்ணை எடுத்து, கல்லூரி முதல்வர் கையெழுத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். கவுன்சிலிங் வரும்போது ஒரிஜினல் சான்று அவசியம். 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

சமுதாய போர்வாளின் தொகுதிப்பணிகளை பாரீர் !