Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 1 ஏப்ரல், 2013

முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 21 நகரங்களில் பேரணி; 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் அணி திரள்கின்றனர்


கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி யும், தமிழ் நாட்டில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரியும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டியும், நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரியும் வரும் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய் கிழமை தமிழகத் தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்நிகழ்ச்சி களில் தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேற்பட்டோர் அணி திரள்கின்றனர்.

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி முப்பெரும் கோரிக்கை பேரணிகள் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல்லில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப் 2ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங் கள் ஒரே நாளில் நடை பெறுகின்றன. பேரணி நடைபெறும் ஊர்கள்

திருவள்ளுர், திருவண்ணா மலை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பூர், கடலூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி,மதுரை, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கன் னியாகுமரி ஆகிய மாவட்டங் களில் பேரணி நடைபெறுகின் றன. பேரணி முடிவில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்:
பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊர்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெறு கின்றன. சென்னை, திருநெல்வேலி, கோவை, காஞ்சிபுரம், தருமபுரி, நாமக்கல்,ஈரோடு, புதுக் கோட்டை, அரியலூர், விருது நகர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

சென்னையில் தலைவர் பேராசிரியர் தலைமை:
சென்னையில் 2ம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆப்தீன், செயலாளர் ஏ.எச்.எம். இஸ்மாயில், பொருளாளர் கேப்டன் பஷீர் அஹமது, தென்சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, செயலாளர் ஏ. ஹைதர் அலிகான், பொருளாளர் மடுவை பீர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற் பாடுகளை மிகச் சிறப்பான செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாநில பொதுச்செயலாளர்:
தூத்துக்குடியில் பழைய துறைமுகம் முன்பிலிருந்து பிரமாண்டமான பேரணி புறப் படுகிறது இப்பேரணிக்கு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமை ஏற்கிறார்.

கோவையில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.:
கோவையில் மாநகர காவல் துறை ஆணையர் அலுவகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான்எம்.பி., தலைமை ஏற்கிறார்.

இராமநாதபுரத்தில் மாநில பொருளாளர் :
இராமநாதபுரத்தில் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது.

இதே போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் மாநில நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் இல்லை


மதுரை அருகே, அரசு பள்ளியில் 6 மாதங்களாக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால், வட்டிக்கு கடன் வாங்கி, குடும்பம் நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் சர்க்கரை ஆலையில் பணியாற்றிய ஊழியர்களின் குழந்தைகள் நலன் கருதி 1964ல் மதுரை சர்க்கரை ஆலை உயர் நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. 1980ல் இது, மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

மாணவர்கள் நலன் கருதி 26.6.2012ல் ஆலை நிர்வாகத்திற்கு உட்பட்ட இப்பள்ளியை, அரசு ஏற்றுக் கொண்டு, "அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலை பள்ளி&' என பெயர் மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறையால் செயல்பட்ட இப்பள்ளிக்கு, சமீபத்தில் டி.ஆர்.பி., மூலம் தேர்வான 10 ஆசிரியர்கள் மற்றும் ஒரு கிளார்க் பணியிடம் நிரப்பப்பட்டன. இவர்களை சேர்ந்து 24 ஆசிரியர்கள், 5 அலுவலர்கள் தற்போது பணியில் உள்ளனர்.

அனைவருக்கும் 2012, அக்., மாதம் முதல்சம்பளம் வழங்கப்படவில்லை. "அரசு பள்ளி தானே எப்படியும் சம்பளம் வந்துவிடும்&' என்ற நம்பிக்கையில், வட்டிக்கு கடன் வாங்கி, குடும்பம் நடத்தும் அவலத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளியாக மாற்றப்பட்ட பின், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி மூலம் கருவூல அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த பரிந்துரையை கருவூல அலுவலர் ஏற்காமல், ஆசிரியர்களுக்கான "நிரந்தர விரைவு சம்பள கொடுப்பாணை" கோரப்பட்டது.

இதுதொடர்பாக கல்வித்துறைசெயலர் மூலம் சம்பந்தப்பட்ட நிதிப்பிரிவு ஒப்புதலுக்கு "பைல்" அனுப்பப்பட்டது. ஆனால் அது கிடப்பில்உள்ளதால் ஆசிரியர்கள், அலுவலர்களால் சம்பளம் பெற முடியவில்லை. இதனால், வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறோம்.

முதன்மை கல்வி அலுவலர், கலெக்டர் என பல அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை, என்றார்.

புற்று நோய் மருந்து ஏழைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும்


சுவிஸ் நாட்டின் நோவர்ட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் கேன்சர் நோய் குணப்படுத்தும் மருந்துக்கு காப்புரிமை கேட்டு தொடரப்பட்ட அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதுடன், தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாகும் .

கேன்சர் நோய் குணப்படுத்தும் மருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக சுவிஸ் நாட்டின் நோவர்ட்டிஸ் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் கேன்சர் நோய் மருந்து விற்பனைக்கு தனக்கென காப்புரிமை தர வேண்டும் என சென்னையில் செயல்படும் இன்ட்லக்சுவல் புராப்பர்ட்டி அப்பலட் ( ஐ.பி.ஏ.பி) யில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்த நிறுவனம் அப்பீல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 6 ஆண்டு காலமாக நடந்தது. தலைமை நீதிபதி அல்டாப் ஆலம் தலைமையில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் நோவர்ட்டிஸ் நிறுவனம் தனது ஆய்வு குறித்த விவரங்களை முழுமையாக கோர்ட்டில் தெரிவிக்கவில்லை என்றும், இந்த மருந்து ஒரு மாதத்திற்கான செலவு 1, 2 லட்சம் குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வேதியியல் மருந்து பொது தயாரிப்பில் காப்புரிமை வழங்கப்பட்டால் ஏனைய நிறுவனங்கள் பாதிக்கும் என்றும் ,மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்காமல் போய்விடுவதை கோர்ட் ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.