Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 11 ஜூலை, 2013

வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்

கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.

இதையும் தாண்டி பேஷன், சுற்றுலா, இன்டீரியர் டிசைன், வெளிநாட்டு மொழிகள், ஆர்க்கியாலஜி, கம்யூனிகேஷன் போன்ற பல படிப்புகள் உள்ளன. இவை ஹியுமானிட்டிஸ் படிப்புகள் என அழைக்கப்படுகிறது. தற்போது இப்படிப்புகள் மீது தற்போது மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.

பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 2 படிப்பை முடித்த பின், இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்கின்றனர். இதனால் இத்துறைகளில் அதிகளவில் போட்டி நிலவுகிறது. ஆனால் அதே நேரத்தில் "ஹியுமானிட்டிஸ்" படிப்புகளுக்கு போட்டிகளும் குறைவு; வேலைவாய்ப்பும் அதிகம்.

இப்படிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார இடைவெளிக்கு பாலமாக விளங்குகின்றன. வேகமாக வளரும் டூரிஸம், பேஷன் மற்றும் மீடியா போன்ற படிப்புகள், மனிதவியல் மற்றும் வரலாறு போன்ற பாரம்பரியமிக்க படிப்புகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபடுகின்றன.

மதம் மற்றும் பண்பாடு தொடர்புடைய படிப்புகள் தற்போது பிரமலமடைந்துள்ளன. பல பெரு நிறுவனங்களில் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்ச், ஜாப்பனிஸ் போன்ற மொழிகளுக்கு, மொழிபெயர்ப்புத் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதால், இந்த மொழிகளைக் கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் பெருகியுள்ளது.

டூரிஸம், மீடியாவுக்கு எப்போதும் கிராக்கி அதிகம். இசை, நாடக, நடனப் பயிற்சி படிப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய படிப்புகளாக உள்ளது. காலமாற்றத்தில் புதிய படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

"ஹியுமானிட்டிஸ்" படிப்புகள் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.

சிறையில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

ஒரு நபர் சிறையிலோ அல்லது போலீஸ் கஸ்டடியிலோ இருந்தால், அந்த நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று அடுத்த அதிரடியை காட்டியுள்ளது சுப்ரீம் கோர்ட்.

கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்த போது, சிறையில் இருக்கும் நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்படி, பாட்னா ஐகோர்ட், தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், தேர்தல் பணிகள் துவங்கி விட்டதால், போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்து விட்டது. இதையடுத்து, சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்தது. பாட்னா ஐகோர்ட்டின் இந்த உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் அப்போது இடைக்கால தடை விதித்தது. பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவு சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், ஒரு நபர் ஓட்டளிப்பது என்பது அந்த நபருக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமை. அந்த நபர் குற்ற வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்தாலோ அல்லது போலீஸ் கஸ்டடியில் இருந்தாலோ அவர், தேர்தலின் போது ஓட்டளிக்க இயலாமல் போகிறது. அவ்வாறு ஓட்டளிக்க இயலாதவர், தேர்தலில் போட்டியிடவும் தகுதியில்லாத நபராகிறார். அத்தகைய நபர்களை சட்டம், தற்காலிகமாக தேர்தல் நடைமுறைகளில் இருந்து நீக்கி விடுகிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், தேர்தலின் போது ஒரு நபர் சிறையிலோ அல்லது போலீஸ் கஸ்டடியில் இருந்தாலோ அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு காரணமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி, கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளருக்கு அமீரகத்தில் வரவேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அமைப்பாளர் பேராசிரியர் .தஸ்ரிப் ஜஹான் அமீரகம் வந்துள்ளார் . அவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ,துபாய் முதீனா பார்க்கில் உள்ள கராச்சி தர்பார் கூட்ட அரங்கில் அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமையில் ,பொதுசெயலாளர் முஹம்மது தாஹா , பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .

துபாய் மண்டல  செயலாளர் முதுவை ஹிதாயத் , கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா , விழாக்குழு செயலாளர் பரகத் அலி , மக்கள் தொடர்பு செயலாளர் ஹமீது யாசீன் ,தேரா பகுதி செயலாளர் சிந்தா , ஈமான் சங்க நிர்வாகி முகைதீன் அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர் .