Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 27 மே, 2013

பொறியியல் கல்லூரிகளின் விவரம்

தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.

இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாவட்ட வாரியாக அமைந்துள்ள கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள வசதிகள், படிப்புகள் குறித்து அனைத்துத் தகவல்களும் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பொறியியல் கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கல்லூரிகளின் விவரங்களைக் காண http://www.annauniv.edu/vac2013/collsel.html  என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லை முதல் சென்னை வரை தண்ணீர் இன்றி பயணம் பயணிகள் கடும் அவதி

திருச்செந்தூரில் இருந்து தமிழகத்தின் தலைநகரமாம் சென்னைக்கு தினமும் இரவு 7.45 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16736) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 7.45 மணிக்கு வழக்கம் போல் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டது.

அப்போது ரெயிலில் ஏ.சி. பெட்டியை தவிர மற்ற அனைத்து பெட்டிகளிலும் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர் காலியாகி விட்டது. பயணிகளின் உற்சாகம் பறிபோனது.

ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் கழிவறைகளுக்கு சென்று இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் திண்டாடினார்கள். இது குறித்து பயணிகள் ரெயில் என்ஜின் டிரைவரிடம் முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் இல்லை.

பயணிகள் மிகுந்த சிரமம்
மதுரை, திருச்சி போன்ற முக்கிய ரெயில் நிலையங்களிலாவது தண்ணீர் நிரப்பப்படும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அங்கும் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் இரவு முடிந்து அதிகாலை நேரத்தில் பயணிகள் காலைக் கடன்களை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஆனால் கழிவறைகளில் தண்ணீர் இல்லை. இதனால் பயணிகள் தண்ணீர் இன்றி காலைக் கடன்களை கழித்தனர். இதனால் கழிவறைகளில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் பயணிகள் ரெயிலில் உட்கார முடியாமல் மிகுந்த சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

நிம்மதி பெருமூச்சு
பின்னர்  காலை 8.35 மணியளவில் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அடைந்த போது, ரெயிலில் ஒன்றிரண்டு பெட்டிகளுக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பினர். பெரும்பான்மையான பெட்டிகளில் தண்ணீர் சிறிதும் இன்றி பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் காலை 11.50 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தனர்.

இதுகுறித்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்–7 பெட்டியில் பயணம் செய்த திருவேற்காட்டை சேர்ந்த கற்பகம் கூறும்போது:–

நெல்லை வரை ரெயிலில் தண்ணீர் இருந்தது. அதன்பிறகு தண்ணீர் வரவில்லை. ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் ரெயில் நிற்கும்போது, தண்ணீர் நிரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.

அதோடு அல்லாமல் நானும் என் சகோதரிக்கும் ஆர்.ஏ.சி. டிக்கெட் தான் கிடைத்திருந்தது. டிக்கெட் பரிசோதகர் வராததால் படுக்கை வசதி இன்றி மிகுந்த சிரமத்துடன் வந்து சேர்ந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பு

பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் இன்ஜினியரிங்கின் கோட்பாடுகளையும் விதிகளையும் பாலிமர் இன்ஜினியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பிளான்ட் டிசைன், பிராசஸ் டிசைன், தெர்மோடைனமிக்ஸ், போக்குவரத்து அம்சங்கள் ஆகிய தத்துவங்களை பாலிமர் இன்ஜினியர்கள் ஆராய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றம் பாலிமர் உற்பத்தியை இவர்கள் கண்காணிக்கிறார்கள். உற்பத்தித் தளத்தில் பிளாஸ்டிக் மோல்டர்களையும் டெக்னீஷியன்களையும் கண்காணிப்பவர்களும் இவர்களே.

இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை என இரு பிரிவுகளிலுமே பல்வேறு படிப்புகள் உள்ளன. இளநிலையில் பி.இ., பி.டெக். மற்றும் முதுநிலையில் எம்.டெக். என்றும் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் பி.இ., பி.டெக். படிப்பில் சேரலாம். பாலிமர் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் என இந்தப் படிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன. இதைப் படித்தவர்கள் பாலிமர் உற்பத்தித் தளங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் நேரடியாகப் பணி புரியலாம். இந்தப் படிப்புகளில் சேர மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுதி அவற்றில் வெற்றி பெற வேண்டும்.

எம்.டெக்கில் பாலிமர் இன்ஜினியரிங்/பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்பதற்கு பாலிமர் இன்ஜினியரிங் அல்லது பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது ரப்பர் டெக்னாலஜி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ. பி.டெக். படித்திருக்க வேண்டும். இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத் துறையில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வில் தகுதி பெற்றவருக்கு கல்வி வாய்ப்பைத் தருகின்றன.

இத் துறையில் படிப்பை முடிப்பவருக்கு பாலிமர் உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் புரடக்ஷன் சூப்பர்வைசர், குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டர், புரடக்ஷன் பிளானர், மோல்டு டிசைனர் என்னும் பல பணிகள் கிடைக்கின்றன. பொதுத் துறை மற்றும் தனியார் பிளாஸ்டிக் நிறுவனங்களிலும் நல்ல வேலைகள் கிடைக்கின்றன. உற்பத்தித் தொழில் நிறுவனங்களான பிளாஸ்டிக், ஆட்டோமோடிவ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களிலும் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பாலிமர் இன்ஜினியர்கள், பாலிமர் டெக்னாலஜிஸ்டுகள், பாலிமர் சயின்டிஸ்டுகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆய்வகம், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பிளான்டுகள், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள், பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா, பெட்ரோ பைல்ஸ் கோவாபரேடிவ் லிமிடெட் போன்ற அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

இயற்கை வளங்கள் குறைவாகிக் கொண்டே வரும் இந்த நாட்களில் மாற்று உபயோகப் பொருளான பாலிமரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் பாலிமர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த் துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்த இன்கிரிமென்ட், படிகள், பயன்கள் என பல வகைகளிலும் பாலிமர் இன்ஜினியர்களின் ஊதியம் சிறப்பாக அமைகிறது. பி.இ., பி.டெக். முடித்து பணியில் சேரும் பாலிமர் இன்ஜினியர்கள் துவக்கத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.

அனுபவம், தகுதி, திறன்கள் ஆகியவையே இத் துறையில் நல்ல சம்பளம் பெறுவதற்கான அடிப்படைத் தேவைகளாக உள்ளன. பொதுவாக பொதுத் துறையில் பணி புரிபவர்களை விட தனியார் துறையில் பணி புரிபவருக்கே நல்ல சம்பளம் இத் துறையில் கிடைக்கிறது. இத் துறையில் 5 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பணி புரியும் சீனியர் பாலிமர் இன்ஜினியர் மற்றும் சயின்டிஸ்டுகள் மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பானது கடந்த சில ஆண்டுகளாக புதிது புதிதாக பல கல்வி நிறுவனங்களில் துவங்கப்பட்டுள்ளது. B.S.ABDUR RAHMAN UNIVERSITY- Chennai, Hidustan University - chennai , Kamaraj College of Engineering And Technology- Viluppuram ,   ஐ.ஐ.டிக்கள், என்.ஐ.டிக்கள், மெஸ்ராவிலுள்ள பிட்ஸ், கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப் பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே, லங்கோவால் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப், ஸ்ரீஜெயச்சாமராஜேந்திர காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மைசூரு, யுனிவர்சிடி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், தொடுபுழா போன்றவற்றில் இத் துறைப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமீப காலமாக ஒரு சில கல்லூரிகளில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.