Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 21 ஜூலை, 2012

நீதிபதி ராஜேந்திர சிங் சச்சார் அவர்களுடன் சமுதாயப் போர்வாள் சந்திப்பு





இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச்செயலாளரும் ,தமிழகத் தலைவருமான பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரகுமான் அவர்கள் நீதிபதி ராஜேந்திர சிங் சச்சார் அவர்களை சந்தித்து முஸ்லிம் சமுதாய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் 

கல்வி விழிப்புணர்வு மாநாடு



தமிழகத்தில் இஸ்லாமிய கல்லூரிகளை உருவாக்கித் தந்த 


    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 
            கல்வி விழிப்புணர்வு மாநாடு 

           செப்டம்பர் 8 -2012 ,கும்பகோணம் ,
                                    அல்-அமீன் மெட்ரிகுலேசன் பள்ளி மைதானம் 

காங்கிரஸ் கட்சியின் சுயநலமும் பிடிவாதமும் :நாட்டில் குழப்பம்

மத்திய அமைச்சரவையில் 2வது இடம் அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த சரத்பவார் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருந்த பிரணாப் முகர்ஜி, ராஜினாமா செய்ததால் 2வது இடம் ராணுவ அமைச்சர் அந்தோணிக்கு அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சரத்பவாரும் அமைச்சர் பிரபுல் படேலும் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று சந்தித்தார்.  சரத்பவார் தனது அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், பிரபுல் படேல் அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் செயல்படும் விதம் குறித்து எங்களுக்கு சில அதிருப்திகள் உள்ளன. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சோனியா காந்தியிடமும் தெரிவித்துள்ளோம். எங்கள் கட்சி தலைவர்கள் ஆலோசித்து கட்சியின் முடிவு என்ன என்பதை திங்கட்கிழமை தெரியப்படுத்துவோம். அமைச்சரவையில் 2வது இடம் கிடைக்காததால் சரத்பவார் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுவது அபத்தமானது’’ என்றார். 

காங்கிரசுடன் மோதல் அதிகரித்துள்ளதால், அமைச்சரவையில் இருந்து விலக சரத்பவார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மன்மோகனுக்கும் சோனியா வுக்கு எழுதியுள்ள கடிதத் தில், ‘‘நாங்கள் சிறிய கட்சி என்பதால் உரிய மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தவும் அதற்காக கவனம் செலுத்த வும் அதிக நேரம் தேவைப்படுகிறது’’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டம் சோனியா தலைமை யில் நேற்று ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், பேட்டியளித்த கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் திவேதி, சரத்பவார் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தார்.

பிரதமர் சமாதானம்

இதனிடையே, சரத்பவாரை சமாதானப்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சரத்பவார் மதிப்பு மிக்க கூட்டணி கட்சி தலைவர். அவரது அறிவும் ஆற்றலும் அனுபவமும் மத்திய அரசுக்கு மிகப் பெரிய சொத்து’’ என்று கூறியுள்ளார்.