Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 4 ஜூலை, 2012

டெங்குவை தொடர்ந்து பீதி கிளப்பும் பேதி .............


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம், ரகுமானியபுரம், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. இதனால் பலர் தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  70க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கடையநல்லுலூர் மக்களிடையே மேலும் பீதீயை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி பேதி காரணமாக கடையநல்லூர் பகுதியில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.