Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தி ஹிந்துவின் பார்வையில்...தமிழ்நாடு முஸ்லிம் அரசியலின் மாறிவரும் முகம் ----காயல் மகபூப்.

பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் பதிலுக்குப் பதில் :
முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்வு காணும் இயக்கமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இல்லாத காரணத்தால்தான் த.மு.மு.க தோன்றியதாககூறுகிறார்.

த.மு.மு.க தோன்றிய பின்சமூகத்தில் தீர்த்துக் வைக்கப்பட்டபிரச்சனை தான் என்ன?அந்த அமைப்புஉருவானதற்குபின் தமிழ்நாட்டில் 50அமைப்புகள் உருவாயின.

பள்ளிவாசல் விவாகரங்கள்காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

தொழுகையும், நோன்பும் விவகாரமாக்கப்பட்டன,
மூன்று, நான்கு நாட்கள் பெருநாள்களாக கொண்டாடப்பட்டன.

அப்பாவி இளைஞர்கள் சிறைவாசம்அனுபவித்தார்கள்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு அடித்தளம்அமைத்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.1999 ல் இதற்காக ஒற்றை கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டதும், அதில் கலந்துகொண்ட அன்றைய முதல்வர் கலைஞர் வாக்குறுதி வழங்கியதும் வரலாற்றுப்பதிவுகள்.

‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அடுத்தக் கட்சியின் சின்னத்தில் தான்போட்டியிடுகிறது. த.மு.மு.க வின்அரசியல் அங்கமான ம.ம.க தன் சொந்த சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுள்ளது. மற்ற சமுதாய மக்களும் எங்களை தான் ஆதரிக்கிறார்கள்’’என பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிடுவது வரலாற்றை இருட்டடிப்புசெய்யும் முயற்சி.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நான்குதொகுதிகளில் போட்டியிட்ட ம.ம.கபெற்ற ஒட்டுக்கள் 68 ஆயிரத்து 346 இதில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா 19 ஆயிரத்தி814 ஒட்டுக்கள் மட்டுமே பெற்றார்.மத்திய சென்னையில் ஹைதர் அலி13 ஆயிரத்து 160 ம், இராமநாதபுரத்தில் சலீமுல்லாகான் 21 ஆயிரத்து 430ஒட்டுகளும் பெற்றனர்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 1991லேயே 5 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்றதொகுதிகளிலும் ‘‘ஏணி சின்னத்தில்’’தனித்து போட்டியிட்டது மக்களவை தொகுதிகளில் மட்டும் 1 லட்சத்து 29ஆயிரத்து 048 வாக்குளை பெற்றது.

அதே மயிலாடுதுறையில் ஏ.கே.எ.அப்துஸ்ஸமது 37 ஆயிரத்து 677வாக்குகளும், இராமநாதபுரத்தில்எ.எ.அப்துல் ரசாக் 49 ஆயிரத்து442 வாக்குகளும், வேலூரில்முஹம்மதுஇஸ்ஹாக் 31 ஆயிரத்து381 வாக்குகளும் பெற்றது வரலாற்றுச்சாதனை.

ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்பட்டு அனுதாப அலை வீசியஅந்த நேரத்தில் எந்த பெரிய கட்சியின் துணையுமில்லாமல் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இந்த சாதனையைபடைத்தது. வன்னியர் சங்கம் அப்போதுதான் பட்டாளி மக்கள் கட்சியாகஅரசியலில் பிரசவித்தது. முஸ்லிம்லீக் போட்டியிட்ட இடங்களில் அதற்குபலமும் இல்லை அதற்கு களமும் இல்லை.

அந்த காலகட்டங்களில் ‘அரசியல்ஹாரம், ஒட்டுப்போடுவதும், ஜனநாயகமும் இஸ்லாத்திற்கு விரோதமானது’ எனபரப்புரை செய்தவர்களுக்கு இந்தவரலாற்று பதிவுகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது;சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது; முஸ்லிம்களின் காலச்சாரதனித்தன்மைகளை காப்பாற்றபோராடுகிறது; தீவிரவாதமும் &வன்முறையும் கூடாது என போதிக்கிறது.அதனால் முஸ்லிம் சமுதாயம் இந்த இயக்கத்தை நேசிக்கிறது.

‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்பழைய நல்ல நாட்கள் அரசியலில்மீண்டும் வராதா’ என்ற சமுதாயஎதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.

தமிழகத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக கிளை மற்றும் "காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் " - முஸ்லிம் மாணவர் பேரவை

திருச்சிக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ,முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட நான்கு அமைப்புகளில் ஒன்றாகும். மற்ற மூன்றும் முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி ஆகியவைகளாகும்.

முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு ஏற்கனவே நெல்லை மாவட்டம் குற்றா லத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது எதிர்வரும் அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

பல்லாயிரக்கணக்கான சீருடையணிந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், கல்விக்கடன் துரிதமாக கிடைக்கவும் -அதற்கான வட்டியை ரத்து செய்யவும் மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொண்டும், சிறு பான்மை மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதிகள் அமைக்க கோரியும்,

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளையை தமிழ் நாட்டில் அமைக்க கோரியும், சிறுபான்மையினருக்கென மத்திய அரசு அமைக்கும் 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வலியுறுத்தியும், காயிதெ மில்லத் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாணவச் சமுதாயம் சாதி, மத, கல்லூரி அடிப்படையிலும் மோதிக் கொள்ளாமலும், ஒழுக்க மாண்புகளுக்கு உட் பட்டு தலைசிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்கப்படும் முயற்சியாக செயல் திட்டங் கள்அறிவிக்கப்பட உள்ளன. வன்முறை, தீவிரவாதம், போதை மற்றும் குற்றப் பழக்க வழக்கங்கள் பக்கம் தலை காட்டாமல் மாணவச் சமுதாயம் தற்காத்து கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இம் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசி யப் பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.