Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழகத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக கிளை மற்றும் "காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் " - முஸ்லிம் மாணவர் பேரவை

திருச்சிக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ,முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட நான்கு அமைப்புகளில் ஒன்றாகும். மற்ற மூன்றும் முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி ஆகியவைகளாகும்.

முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு ஏற்கனவே நெல்லை மாவட்டம் குற்றா லத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது எதிர்வரும் அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

பல்லாயிரக்கணக்கான சீருடையணிந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், கல்விக்கடன் துரிதமாக கிடைக்கவும் -அதற்கான வட்டியை ரத்து செய்யவும் மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொண்டும், சிறு பான்மை மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதிகள் அமைக்க கோரியும்,

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளையை தமிழ் நாட்டில் அமைக்க கோரியும், சிறுபான்மையினருக்கென மத்திய அரசு அமைக்கும் 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வலியுறுத்தியும், காயிதெ மில்லத் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாணவச் சமுதாயம் சாதி, மத, கல்லூரி அடிப்படையிலும் மோதிக் கொள்ளாமலும், ஒழுக்க மாண்புகளுக்கு உட் பட்டு தலைசிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்கப்படும் முயற்சியாக செயல் திட்டங் கள்அறிவிக்கப்பட உள்ளன. வன்முறை, தீவிரவாதம், போதை மற்றும் குற்றப் பழக்க வழக்கங்கள் பக்கம் தலை காட்டாமல் மாணவச் சமுதாயம் தற்காத்து கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இம் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசி யப் பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக