Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

55 சதவீதம் இந்தியர்களுக்குஅமெரிக்காவில் சொந்த வீடு

அமெரிக்காவில், 55 சதவீத இந்தியர்கள், சொந்த வீட்டில் வசிக்கின்றனர் என, சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையான, "சென்சஸ் பீரோ' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில், 55 சதவீதம் பேர், சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.

அதே சமயம், அமெரிக்காவில் நல்ல வருவாய் உள்ள இந்தியர்களை விடவும், ஐரோப்பியர்களே அதிக அளவில் சொந்த வீடு வைத்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்தவர்களில், 72 சதவீதம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 73 சதவீதம் பேரும், அமெரிக்காவில் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.இவ்வாறு, "சென்சஸ் பீரோ' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருவூலங்க்கள் கணினிமயம்: ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்


 கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது. இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

கருவூலகங்களில் உள்ள சம்பள பில்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் , சம்பளம் வழங்குவதற்கான அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

கடந்த 1980க்கு முன் உள்ள பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக ஆசிரியர் நியமித்தும், சம்பளம் வழங்க அனுமதியளித்தும், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, பள்ளிகளிலே சம்பள பில் தயாரித்து, கருவூலகங்களுக்கு அனுப்பப்படும்.

இதை அதிகாரிகள் ஆய்வு செய்து, இ.சி.எஸ்., முறையில் நிதி விடுவித்து, அந்தந்த ஆசிரியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆசிரியர்களும் வங்கி கணக்கில் இருந்து, ஏ.டி.எம்., கார்டு மூலமாக சம்பளம் பெற்று வந்தனர்.

இந்நிலையில், கருவூலகங்கள் யாவும் கம்ப்யூட்டர் மயமாவதால், சம்பள அனுமதி வழங்கிய ஒரிஜினல் அரசு உத்தரவு வழங்கும் படி, ஆசிரியர்களிடம் கேட்டு வருகின்றனர். ஆசிரியர்களோ, நிலையாக ஒரே பள்ளியில் இல்லாமல், ஆண்டுக்காண்டு இட மாறுதல் பெற்று, பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த உத்தரவோ பள்ளிகளில் முறையாக பாதுகாக்கப்படாமல், உத்தரவு கடிதங்கள் அனைத்தும் நைந்து, சிதைந்து விட்டன. பழைய உத்தரவு இல்லாததால், சம்பள பில் வழங்க முடியாது என, கருவூலகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது, பழைய உத்தரவு நகல்கள் இல்லாததால், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிளிக்கு சிகிச்சையளிப்பது எப்படி? மருத்துவர்களுக்கு பயிற்சி


வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில், காயமடைந்த கிளிக்கு சிகிச்சையளிப்பது குறித்து, மருத்துவர்களுக்கு,வகுப்புகள் எடுக்கப்பட்டன.வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில், வன மற்றும் செல்ல பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள், சிகிச்சை முறைகள் குறித்து, உயிரியல் பூங்கா மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த ஆலோசனை முகாமில், காயமடைந்த கிளிக்கு சிகிச்சையளிப்பது குறித்து, மருத்துவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன.
காயம் அடைந்த கிளியின் காலில், "எக்ஸ் - ரே' எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கால் பகுதிக்கு, தகுந்த சிகிச்சைஅளிக்கப்பட்டது.

தொற்று நோய்களால், பறவைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்டறிய, ரத்தம், எச்சம் மூலம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி, நோய் குறியியல் துறை தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், ""வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளின் காலில் அடிபட்டால், அவற்றை நடக்க விடக்கூடாது. மருத்துவரிடம் காண்பித்து
சிகிச்சையளிக்க வேண்டும்,'' என்றார்.

அமெரிக்காவில் நடக்கும் அவலம் : 3 நாட்களாக பதுங்கு குழியில் பணயக்கைதியாக பரிதவிக்கும் சிறுவன்


அமரிக்காவின் அலபாமா மாநிலத்தின் மிட்லண்ட் என்கிற சிறு நகரத்தில் 5 வயது சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம நபரால் கடத்தப்பட்டான்.

பள்ளிப் பேருந்தில் ஏறிய மர்மநபர் 66 வயதான ஓட்டுனரை மிரட்டியுள்ளான். அதற்கு பணியாததால் அந்த மர்மநபர் ஓட்டுனரை சுட்டுக் கொன்றுள்ளான். பிறகு அந்த பேருந்தில் இருந்த 5 வயது சிறுவனை பணயக் கைதியாக பிடித்துச் சென்றான். அந்த நபர் சிறுவனை தனது நிலத்தில் உள்ள பதுங்கு குழிக்கு தூக்கிச்சென்று மறைந்து கொண்டான்.

தகவல் அறிந்ததும் முக்கிய அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். கடத்தப்பட்ட சிறுவன் மற்றும் மர்மநபர் குறித்த தகவல்களை வெளியிட மறுத்து விட்டனர். மர்ம நபரின் நோக்கம் என்ன என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அந்த மர்ம நபரின் பெயர் ஜிம்மி லீ டைக்ஸ் (65). அவன் இந்த பதுங்கு குழியை பல ஆண்டுகளாக கட்டி வந்தான். மின்சார வசதி, தொலைக்காட்சி மற்றும் 2 வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கொண்டதாக அந்த பதுங்கு குழி வடிவமைக்கப்பட்டது என்று அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.