Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 24 ஆகஸ்ட், 2013

முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று , இஸ்லாத்தின் கோட்பாட்டிற்காக போட்ட உத்தரவை வாபஸ் பெற்றார் எம்ஜிஆர் --- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

திருவள்ளூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி மற்றும் மாவட்ட உலமா பெருமக்கள் இணைந்து நடத்திய இஸ்லா மிய திருமண சட்ட விளக்க கருத்தரங்கம் ஆகஸ்டு 23ம் தேதி வெள்ளி மாலை பொன்னேரி மரியம் மதீனா பள்ளிவாசலில் நடை பெற்றது.

பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஹாஸ் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழச்சியில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரையாற்றி னார்.

அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது,

இந்தியாவிலுள்ள முஸ்லிம் களாகிய நமக்கு இந்திய அரசியல் சாசனத்தின் குறிப் பிடப்பட்டுள்ளபடி நமக்குள்ள தனியார் சட்டமாகிய ஷரீயத் சட்டப்படி நடப்பதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.

ஆனால் எல்லோருக்கும் ஒரே வகையான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சாரத் தால் தம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்கள் கூட குழப்பம் அடைந்து வருகிறார்கள்.

"இஷ்டத்திற்கு தலாக் சொல்கிறார்கள், பெண்கள் அடிமை படுத்தப்பட்டு கிள்ளு கீரைகளாக நடத்தப்படு கிறார்கள். முஸ்லிம்களிடையே ஆனாதிக்கம் மேலோங்கி நிற்கிறது" என ஊடகங்கள் வாயிலாக எழுதியும் பேசியும் வருவதால் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு இந்த குழப்பம் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம்களாகத்தான் இருக்க வேண்டுமானால் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றித்தான் வாழ வேண்டும். நமக்கென்று உள்ள தனித்தன்மையை பாது காத்தால்ஒழிய நாம் முஸ்லிம் களாக வாழ முடியாது.

பள்ளிவாசல், கபரஸ்தான், தர்கா, வஃக்பு சொத்துக்கள் திருமண முறை, தலாக் விவகாரங்கள், சொத்து பாகப்பிரிவினை போன்ற விஷயங்களில் நம்முடைய தனித்தன்மைகளை நாம் புரிந்து வாழ வேண்டும். அப்படி வாழ வில்லை என்பதற்காகத்தான் ஷரீஅத்தை சீர்குலைத்துவிட லாம் என சிலர் கனவு காண்கிறார்கள்.

கபரஸ்தானில் ஏன் அடக்கம் செய்ய வேண்டும் இறந்தவர் களை எரியூட்ட வேண்டியது தானே என அன்றைக்கு கேட்டார்கள். இன்று பொது சிவில் சட்டத்தை கேட்கிறார் கள்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கி யில் பாங்கு சொல்ல தடை விதித் தார்கள்; இது எங்கள் உரிமை தடை கூடாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியது திரும்பப் பெற்றார்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த போது பள்ளிவாசல் வழியே மேள தாளம் அடிப்பதற்கு அனுமதித்து உத்தரவு போட்ட போது தொழுகை நடத்தும் நேரங்களை கேட்டார்கள். எல்லா நேரமும் தொழுகை நேரம்தான் சூரிய உதயம், உச்சம்,அஸ்தமனம் ஆகியவற்றில் சில நிமிடங்களை தவிர என விளக்கம் சொன்னோம் உத்தரவை திரும்பப் பெற்றார்கள்.

பதர் சயீத் வழக்கு
இப்போது முன்னாள் எம்.எல்.ஏ. பதர் சயீத் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கிறார். அவர் நீதிமன்றத்திற்கு சென்றதின் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் நன்மை என்ன வென்றால், இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டியாக அமைந் திருக்கிறது.

இஸ்லாமிய திருமண சட்டம் என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதை சமுதாயம் விளங்கி கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய திருண சட்டம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டிருக்கிறது . ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும்போது வக்கீல், வலி,இரண்டு சாட்சிகள் வேண் டும் இல்லையேல் திருணம் செல்லாது. எனவே இஸ்லாமிய திருமணங்களின் சிறப்பை நாமும் தெரிந்து கொண்டு குழப்பம் செய்பவர்களுக்கும் சொல்ல வேண்டும்.

தலாக்கிற்கு சட்டம் உள்ள ஒரே மதம் இஸ்லாம்
அதே போன்று தலாக் விஷயமும் இன்று விவகார மாக்கப்படுகிறது. உலகிலேயே தாலக்கிற்கு சட்டம் கொடுத் திருக்கின்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றுதான். முஸ்லிம்கள் இடத்தில் தலாக் விஷயத்தில் தவறான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. தலாக் சொன்னால் இறைவனின் சன்னிதானமே ஆடும்.

தலாக் பற்றிய விளக்கங்கள் முத்தலாக் என்றால் என்ன?தாலக் வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி? இவைகள் எல்லாம் சமுதாயம் விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். இந்த விளக்கங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், இமாம்கள் வகுத்தளித்த சட்டங்கள், ஃபிக்ஹு, மஸாயில்கள் ஆகிய வற்றின் மூலம் பெறலாம். அதை விளக்கி சொல்வது உலமாக் களால் மட்டும்தான் முடியும்.

ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நாம் இஸ்லாத்தை பாதுகாக்க வில்லை. இஸ்லாம் நம்மை பாதுகாக்கிறது. அந்த மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

திருமண கட்டாய பதிவு
இன்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. திருமணங்களை காலம் காலமாக நாம் ஜமாஅத்தில் பதிவு செய்கிறோம்.

திருமணம் கட்டாய பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்த பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்கள் செய்து, சென்ற ஆட்சியின் போது இஸ்லாமிய ஷரீஅத்தும் விட்டு போகாமல் அரசின் சட்டத்திற்கும் பாதகம் வராமல் இரண்டையும் ஒன்றாக இணைக்கும் வகையில் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்ய தனிப்படிவம் உருவாக்கினோம்.

அந்த படிவத்தில் நம் தப்தரில் என்ன உள்ளதோ அது அத்தனையும் சொல்லப்பட்டிருக் கிறது. அந்த படிவத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுத்தால் உரிய கட்டணத்தை பெற்றுக் கொண்டு சார்பதிவாளர் பதிவு செய்வதற்கு கடமை பட்டவர்.

ஆனால் இன்று பல இடங்களில் இப்படி நடப்பது இல்லை என்ற புகார்கள் வருகின்றன. நாம் இன்றைய அரசில் வாதாடி பெற்ற உரிமையை இந்த அரசியலும் நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நாடு தழுவிய இந்த கருத்தரங்குகள். மஹல்லா ஜமாஅத் இந்த கருத்தரங்கின் முக்கிய அம்சம் என்ன வென்றால் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத்துதான் முஸ்லிம் சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு. மஹல்லாஜமாஅத் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பள்ளிவாசல் இஸ் லாமிய மார்க்க ஒழுங்குகளின் படி செயல்பட வேண்டும் இதற்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது.

மார்க்க விஷயம் என்று வருகிற போது சங்கைக்குரிய உலமாக்களின் பேச்சை ஏன்,எதற்கு என்று கேட்காமல் பின்பற்ற வேண்டும். உலமாக் கள் இல்லை என்றால் இஸ்லாம் இல்லை. அதனால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெளி வாக சொல்கிறது மார்க்க விஷ யத்தில் உலமாக்களின் பேச்சை கேட்டு செயல்படுங்கள் என்று.

இன்று போட்டி மஹல்லாஹ், போட்டி ஜமாஅத், போட்டி பள்ளிவாசல், தனி கபரஸ்தான், அமைப்பின் பெயரால் தனி தப்தர் என்று செய்துகொண்டே போய் மூன்று பெருநாள், நான்கு பெருநாள் என்று குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக் கிறது. இதை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் சமு தாயத்திற்கு உண்டு. அதை வலியுறுத்துவதுதான் இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.

காஜி,ஙாயிப் காஜி
காஜி சட்டப்படி ஒவ்வொரு பள்ளிவாசல் இமாமும் அந்த மஹல்லாவின் காஜிதான். அதற்கு பெயர் ஙாயிப் காஜி. தலைமை காஜி, மாவட்ட காஜி செய்யும் காரியத்தைத்தான் ஙாயிப் காஜி செய்வார்.

தமிழ்நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துக்கள் இருக்கின்றன. அந்த பள்ளிவாசல்களின் திருமண தப்தர் பாதுகாக்கப்படுகிறது.

திருமண கட்டாய பதிவு சட்டத்தின் படி இஸ்லாமிய திருமணங்களுக்காக வடி வமைக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தின் அடிப்படையில் பள்ளிவாசல் திருமண பதிவேடுகள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு திரு மணத்திற்கு 4 படிவங்கள் ஒன்று மணமகன் வீட்டிற்கும், மற் றொன்று மணமகள் வீட்டிற்கும், இன் னொன்று சார்பதிவாளர் அலுவ லகத்தில் பதிவு செய்வதற்கும் கொடுக்க வேண்டும். மற்றொன்று அந்த மஹல்லாவில் பத்திரமாக இருக்கும். இந்த ஒழுங்குமுறைப்படி ஒவ்வொரு மஹல்லாவும் செய்யுமேயானால் திருமண பதிவில் பிரச்சனையே இருக் காது.

ஷரீஅத் பஞ்சாயத்து
ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் பைத்துல்மால் இருக்க வேண்டும், ஷரீஅத் பஞ்சாயத் இருக்க வேண்டும். ஷரீஅத் கோர்ட் என்ற சொல்லை பயன்படுத்தாமல் ஷரீஅத் பஞ்சாயத் என்றே சொல்ல வேண்டும்.

பள்ளியின் இமாம், தலைவர், செயலாளர், விவகாரம் பேசி தீர்வு காணும் ஆற்றலுடைய மேலும் இருவர் உள்ளிட்ட ஐவருக்கு குறையாமல் அந்த பஞ்சாயத்து செயல்படலாம்.

குடும்ப பிரச்சினைகளில் இந்த பஞ்சாயத்தே முறைப்படி பேசி தீர்த்து வைக்கலாம் அல்லது மனமுறிவு வழங்கலாம். இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்களில் கூட ஏற்றுக்கொள்ளப்படும். இதற்காக கடந்த ஆட்சிக்காலத்தில் காஜி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி மேற் கொண்டோம் ஆனால் சிலர் காஜி நியமனமே தேவையில்லை எனக் கூறியதால் எங்கள் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காஜி என்றால் என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாத தின் விளைவே இது. பள்ளிவாசல் இமாம் அல்லது கதீப்தான் அந்த மஹல்லாஹ் வின் காஜி. மாவட்டத்திற்கு ஒரு காஜி. பெருநாள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிவிக்க ஒரு தலைமை காஜி. இதை புரிந்து கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.

இதுபோன்ற விஷயங்களில் நாம் இத்தகைய கருத்தரங்குகளை நடத்தி மக்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தி நல்ல முடிவு காண்போம். எந்த சூழ்நிலையிலும் மஹல்லாஹ் ஜமாஅத் சீர்குலைய சமுதாயம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. சுண்டைக்காய் கட்சி, புடலங் காய் அமைப்பு,வெண்டைக்காய் இயக்கம், என்றெல்லாம் தலையெடுத்து மஹல்லாஹ் ஜமாஅத் ஒற்றுமையை சீர் குலைக்க வருவார்களேயானால் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி சமூக ஒற்றுமையைக் காப்பது நம் கடமை.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி கோரிக்கை

சிறுபான்மையின சமுகத் தின் கல்வி மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு சிறுபான்மை யினருக்கென பிரத்யேகமாக நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஐந்து பல்கலைக் கழங்களை ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.

இந்த முன்னோடி திட்டத் தின் பயன்பாட்டை ஆய்ந்து, பெருமளவிலாக பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே. ரஹ்மான்கான் வெளியிட்ட அரசு பூர்வாங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வேலூர் தொகுதியில் அமைக்க எம். அப்துல் ரஹ்மான்கோரிக்கை:

இன்று (24.08.2013) நாடாளுமன்ற கூட்டத்தின் போது பகல் 12 மணிக்கு 377வது விதியின் கீழ் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் இது தொடர்பாக கோரிக்கை வைத் தார்.

மத்திய அரசு சிறுபான்மை யினருக்காக ஐந்து பல்கலைக் கழகங்கள் உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறு பான்மை சமூக மக்கள் அதி களவில் வாழும் தொகுதி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு பான்மையினர் இங்கு சமூக பொருளாதார கல்வித் துறை யில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் காரணத் தால் இந்த பல்கலைக்கழகம் வேலூர் தொகுதியில் நிறுவப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வேலூர் தொகுதியில் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் காட்சிகள், பீடி மற்றும் தோல் பதனிடம் தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். தொடக்கப்பள்ளி நிலையில் இருந்து உயர் கல்வி நிலைக்கு செல்வதற்கு அவர்களின் பொருளாதார இயலாமையே ஒட்டு மொத்த சிறுபான்மை சமுதாயத்தையும் பின்னுக்கு கொண்டு செல்கின்ற காரணத்தால் பள்ளி படிப்பை நிறைய பேர் பாதியிலிலேயே நிறுத்தி விடும் அவல நிலை இருந்து வருகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16 விதிகளின்படி சமூக பொருளாதார பின்னடை வில் இருக்கும் சிறுபான்மை சமூகம் நிறைந்திருக்கும் தொகுதி யாக வேலூர் தொகுதி யை மத்திய அரசு கணக்கில் எடுத்து பல்கலைக்கழகத்தை அங்கே நிறுவுவதற்குரிய பூர்வாங்க பணியை தொடங்க நான் வலியுறுத்துகிறேன்.

இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படும் விதிமுறை அனைத்திற்கும் வேலூர் தொகுதி தகுதி உடையதாக இருக்கின்ற காரணத்தால் என் வேண்டுகோளை ஏற்று மிக விரைவாக மத்திய சிறுபான்மை நலத்துறை பல்கலைக்கழக அறிவிப்பை வெளியிட வேண் டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் பேசினார்.