Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 16 நவம்பர், 2012

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில்மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்பு விண்ணப்பங்கள் விநியோகம்


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த 10  பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இது தொடர்பாக இம்மருத்துவக் கல்லூரி முதல்வர் எம். மனோகரன் கூறியதாவது:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வகத் தொழில்நுட்பவியலர், ரேடியோ டையக்னாசிஸ் தொழில்நுட்பவியலர் ஆகிய 2 ஆண்டு பட்டய படிப்புகள்  மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலர், மயக்கவியல்  தொழில்நுட்பவியலர், ஆர்த்தோ தொழில்நுட்பவியலர், இ.சி.ஜி. தொழில்நுட்பவியலர், ஆபரேஷன் தியேட்டர் தொழில்நுட்பவியலர், ரத்த சுத்திகரிப்பு  தொழில்நுட்பவியலர், மூச்சுப் பயிற்சியாளர் மற்றும் உதவி செவிலியர் ஆகிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு 2012- 2013-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.  விண்ணப்பங்கள் வரும் 24-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.200 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதிச் சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுச் செல்லலாம்.

உதவி செவிலியர் படிப்பைத் தவிர மற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் பிளஸ் 2  தேர்வில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவி செவிலியர் படிப்புக்கு மட்டும் எஸ்.எஸ்.எல்.சி., கல்வித் தகுதியாகும்.

மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். அரசு விதிமுறைப்படி ஒதுக்கீடு உண்டு.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள்  நல்ல முறையில் கற்றுத் தரப்படுகின்றன. இதற்குத் தேவையான ஆய்வகங்கள்,  அதிநவீன கருவிகள் உள்ளன. திறமையான பேராசிரியர்கள் உள்ளனர். இக்கல்லூரியில் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்பை முடித்த 365 பேர் நல்ல வேலைவாய்ப்பை  பெற்றுள்ளனர்.

இந்தப் படிப்புகளை படித்தால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. எனவே, தகுதியும்,  ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள், செயலர், தேர்வுக் குழு,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை- 10 என்ற முகவரிக்கு சென்று சேர வேண்டும் என்றார் அவர்.

மகாஜென்கோ(MAHAGENCO) நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்கள்


மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட்(MAHAGENCO) என்ற மகாஜென்கோ நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தின் மின்சார உற்பத்தியில் பிரசித்தி பெற்றது. எம்.எஸ்.இ.பி., என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம் தற்போது இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வது, பங்கிடுவது போன்ற மின்சாரம் தொடர்பான தலையாய பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னீசியன்  கிரேடு 3 பிரிவில் உள்ள 360 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:
மகாஜென்கோ(MAHAGENCO) நிறுவனத்தின் மேற்கண்ட டெக்னீ சியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.10.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும் 33 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரீசியன், வயர்மேன், மெக்கானிகல், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம், வெல்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் ஆகிய ஏதாவது பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மற்றவை
மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெடின்(MAHAGENCO) டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு வரும் 08.12.2012 அன்று ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள்: 20.12.2012. இணையதள முகவரி: www.mahagenco.in/AdvTechIIIFinal1nov2012001.shtm\

அஸ்ஸாமில் தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை

முஸ்லிம்களுக்கு எதிராக, அசாமில், பழங்குடியினர் நடத்தும் தாக்குதலின் தொடர்ச்சியாக, நேற்றும் ஒருவர் கொல்லப்பட்டார்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த கலவரத்தில், 90 பேர் இறந்த நிலையில், கடந்த வாரம் முதல், மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில், இதுவரை, ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கோக்ராஜ்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், முஸ்லிம்  பெண் ஒருவர், பழங்குடியின தீவிரவாத அமைப்பினரால், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், நேற்று ஒருவர், கத்தியால் குத்தப்பட்டார். அருகில் உள்ள, கோசைகான் மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர் உடல், நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த, இரு மாவட்டங்களிலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் 5,000 ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம்


தமிழக அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 1980ல், 400 ஆய்வுக்கூட உதவியாளர் பணியிடங்களும், 81ல், 500 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின், இப்பணியிடங்களில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பின், தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடமும், காலியாக உள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப, இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனங்கள் நடந்தன. தற்போது, அனைத்து வகை பணி நியமனங்களும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே நடந்து வருகின்றன. இதனால், ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா என, கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரம் கூறியதாவது: அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே, தேர்வாணைய வரம்பிற்குள் வருவர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம், பொது சார்புப் பணிகளின் கீழ் வரும். எனவே, இந்த வகை பணி நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில்தான் நடக்கும். கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில், கல்வித்தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில், ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.

மீதமுள்ள பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முதல்வரின் அறிவிப்பை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட உதவியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

நவம்பர் 16 முதல் மருத்துவ பட்டயப் படிப்புகள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது


மருத்துவம் சார் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், இன்று முதல்(நவம்பர் 16) வழங்கப்படுகிறது.

மருத்துவ பதிவேடு அறிவியல், பல்வேறு மருத்துவம் சார் சான்றிதழ் படிப்புகள், செவிலியர் உதவியாளர் பட்டய படிப்பு மற்றும் கண் மருத்துவ பட்டய படிப்பு ஆகியவற்றில் சேர, இன்று முதல், இம்மாதம், 24ம் தேதி வரை, சென்னை மருத்துவக் கல்லூரியில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்ப கட்டணம், 200 ரூபாயை, ஏதேனும் ஒரு தேசியமய வங்கியில், சென்னையில் மாற்றத்தக்க வகையில், "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai 10" என்ற பெயரில், டி.டி.,யாக எடுக்க வேண்டும்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி கபில்சிபல்


தங்க முட்டையிடும் வாத்தை, பரபரப்பிற்காக சிதைத்து விட்டார்கள் என மத்திய அமைச்சர் கபில் சிபல் வருத்தத்துடன் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு மத்திய அரசுக்கு வருவாய் வந்தது. சுமார் ரூ. 40 ஆயிரம்கோடி வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் 4ல் ஒரு பங்கு மட்டுமே வருமானம் வந்துள்ளதால் தற்போது மத்திய அரசு தற்போது சி.ஏ.ஜி., மற்றும் சுப்ரீம் கோர்ட்டை குற்றம் சாட்டத்துவங்கியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி., தெரிவித்திருந்தது. அதே போல், 122 லைசன்ஸ்களை ரத்து செய்து விட்டு, புதிதாக ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில் சிபல் மற்றும் மனீஷ் திவாரி ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், நீண்ட காலத்திற்கு தொலைத்தொடர்பு துறை குறித்த கதையை கூறிக்கொண்டிருக்க முடியாது. கொள்கைகளை அரசிடம் விட்டு விடுவதே நல்லது. தங்க முட்டையிடும் வாத்து போன்றிருந்த தொலைத்தொடர்புத்துறையை பரபரப்பிற்காக சிதைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

சிதம்பரம் கூறுகையில், ‘2ஜி முறைகேட்டால் ரூ.1.76 லேட்சம் கோடி இழப்பு என்று கூறுவது தவறான கருத்து. 2ஜி ஏலம் தோல்வியை நாங்கள் கொண்டாடவில்லை. சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் சரிசெய்வோம். நடப்பு ஆண்டில் பொருளாதார சூழ்நிலை மேம்படும். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டம் சரியாக நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேணடும். அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விதியின் கீழ் விவாதிப்பது என தெரியவில்லை’ என்றார்