Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

யுனானி மருத்துவ உதவியாளர் தேர்வுக்கு ஐகோர்ட் தடை


சென்னையை சேர்ந்த வக்கீல் பழனிமுத்து ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

 அதில் அவர் கூறி இருந்தாவது:-
 சென்னை அரும்பாக்கத்தில் யுனானி மருத்துவ மையம் உள்ளது. அங்கு தமிழ் வழி கல்வி நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் 27 யுனானி உதவி மருத்துவ அலுவலர்களுக்கான தேர்வை கடந்த 6-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதில் யுனானி மருத்துவத்தை தமிழ் வழியில் கற்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

பணி தேர்வில் உருது மொழி தெரியாதவர்கள் இல்லாத பட்சத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவரை கொண்டு பணி இடத்தை நிரப்பலாம் என்று அந்த துறை உத்தரவிட்டுள்ளது. இதை முன் மாதிரியாகக் கொண்டு சுகாதார துறையும் அதே மாதிரி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது. எனவே யுனானி உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. தற்காலிக தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. யுனானி உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு தடைவிதித்து அவர்கள் உத்தரவிட்டனர்.

வரி ஏய்ப்பு : பிஜேபி தலைவர் கட்காரிக்கு வருமானவரித்துறை சம்மன்

வரி ஏய்ப்பு செய்ததாக பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரிக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரி, இவருக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் கிடைத்த வருமானம் தொடர்பாக வருமானவரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பல்வேறு அரசியல் பணி காரணமாக வரமுடியவில்லை என கட்காரி தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி வருமானவரித்துற‌ை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக  ‌கட்காரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

மாணவர்கள் அறிவை தேடித்தேடி பெற வேண்டும்: டாக்டர் அப்துல் கலாம்


சேலம், பெரியார் பல்கலையில், ஆற்றல்சார் தனிச்சிறப்பு இயற்பியல் மையம் மற்றும் உயர்நுட்ப ஆய்வகம், அதிநுண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், புவித் தகவலமைப்பு மற்றும் கோளியல் மையம், பாடத்திட்ட மேம்பாட்டுப்பிரிவு, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சிப் பிரிவு ஆகியவற்றின் துவக்க விழா, சிறந்த விஞ்ஞானிகள், நல்லாசிரியர் மற்றும் பல்கலை பணியாளர் குழந்தைகளில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றோர் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா, துணைவேந்தர் முத்துச்செழியன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மையங்களை திறந்து வைத்து, விருது வழங்கி பேசியதாவது:

மாணவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகவே கருதப்படும். அடுத்து அதற்கான அறிவைத் தேடித்தேடி பெற வேண்டும். லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். விடாமுயற்சியும் இருக்க வேண்டும்.

அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும். இந்த நான்கும் மாணவர்களின் வாழ்க்கையில் வெற்றி பெற அடிப்படையானவை. நேற்று இயற்கை வளங்கள் முக்கியமாக கருதிய நிலை மாறி, இன்று அறிவு முக்கிய சொத்தாக கருதும் நிலை உள்ளது.

தலைமையிடத்தில் உள்ளவர்கள் கட்டளையிடும் நிலை மாறி, கற்றுக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. முன்னுரிமை கொடுத்த நிலை மாறி, இன்று தகுதிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த சூழலில் தற்போது அறிவு சார் சமூகத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதில் ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதில் பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எகாலஜி ஆகிய நான்கு துறைகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றில் புதுப்புது ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் உருவாக்க வேண்டும். குறிப்பாக சோலார் சிஸ்டம், நியூக்ளியர் மின் உற்பத்தி, ஸ்டெம் செல் ஆய்வு, நோய்களுக்கான தடுப்பு மருந்து உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.