Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 15 ஜூலை, 2013

அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவருக்கு பல்வேறு உதவிகள்

  "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும், பி.சி., எம்.பி.சி., சீர்மரபின மாணவ, மாணவியருக்கு, அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்படி படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படும் உதவித்தொகையை பெற, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வழங்க வேண்டும்.
மேலும் விபரம் அறிய, தஞ்சை கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.

மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டுக்குள் நேரடி விமான சேவை

"மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை அடுத்த ஆண்டுக்குள் துவக்கப்படும்,''என, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் அவர் கூறுகையில்,"" மதுரை ஏர்போர்ட்டை விரிவுபடுத்தி, 12 ஆயிரம் அடிக்கு புதிய "ரன் வே' அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு தேவைப்படும் 615 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தி கொடுத்தால், உடனடியாக "ரன் வே' அமைக்கும் பணி துவக்கப்படும். இதற்காக, ஏர்போர்ட் அருகே உள்ள மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டிற்கு, மாற்று வழி அமைக்க வேண்டும்.


 மதுரை - சிங்கப்பூர், துபாய் நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை துவங்க, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது. பைலட் உட்பட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அடுத்த ஆண்டிற்குள் இந்த விமான சேவை துவக்கப்படும்,'' என்றார்.