Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 15 ஜூலை, 2013

அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவருக்கு பல்வேறு உதவிகள்

  "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும், பி.சி., எம்.பி.சி., சீர்மரபின மாணவ, மாணவியருக்கு, அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்படி படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படும் உதவித்தொகையை பெற, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வழங்க வேண்டும்.
மேலும் விபரம் அறிய, தஞ்சை கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக