Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 16 ஜூலை, 2013

கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய அரசு திட்டம்

"கர்ப்பிணி பெண்களுக்கு, இலவச மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றை மத்திய அரசு வழங்கும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

ஜெய்ப்பூரில், நிருபர்களுக்கு பேட்டியளித்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறியதாவது: ஜனனி சுரக்ஷா திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு, பிரசவத்தின் போது, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு பின் தாய் மற்றும் சேய் நலனை பேணி காக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

 பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, ஓராண்டு காலத்திற்கு தேவையான இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படும். 16 வயது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்கள், கிராமப்புறங்களில் பணியாற்ற மறுக்கின்றனர். இதை தடுக்க, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான களப்பயிற்சியை, கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் வகையில், நடைமுறை கொண்டு வரப்படும். தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் சம்பளம், சலுகையாக வழங்கப்படும். இவ்வாறு, குலாம் நபி ஆசாத் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக