Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 15 ஜூலை, 2013

மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டுக்குள் நேரடி விமான சேவை

"மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை அடுத்த ஆண்டுக்குள் துவக்கப்படும்,''என, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் அவர் கூறுகையில்,"" மதுரை ஏர்போர்ட்டை விரிவுபடுத்தி, 12 ஆயிரம் அடிக்கு புதிய "ரன் வே' அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு தேவைப்படும் 615 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தி கொடுத்தால், உடனடியாக "ரன் வே' அமைக்கும் பணி துவக்கப்படும். இதற்காக, ஏர்போர்ட் அருகே உள்ள மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டிற்கு, மாற்று வழி அமைக்க வேண்டும்.


 மதுரை - சிங்கப்பூர், துபாய் நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை துவங்க, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது. பைலட் உட்பட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அடுத்த ஆண்டிற்குள் இந்த விமான சேவை துவக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக