Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 7 நவம்பர், 2012

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.

1950-ம் ஆண்டு தலிப்சிங் சவுண்ட் என்ற இந்தியர் முதன் முறையாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அதன் பிறகு 2008-ம் ஆண்டு, ஜிண்டால் இரும்பு ஆலை அதிபரும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சா வழியினருமான பாபி ஜிண்டால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது லூசியானா கவர்னராக அவர் பதவி வகிக்கின்றார்.

தற்போது நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 6 இந்தியர்கள் போட்டியிட்டனர். இதில் 5 பேர் குடியரசு கட்சி சார்பிலும், ஒருவர் ஜனநாயக கட்சி சார்பிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இவர்களில் 3 பேர் அமெரிக்காவில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது மாவட்டத்தில் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டாக்டர் அமிபேரா வெற்றி பெற்றுள்ளார்.

அமிபேரா, 88,406 ஓட்டுகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டேன்லுங்ரன் 88,222 ஓட்டுகளையும் பெற்றனர். 184 ஓட்டு வித்தியாசத்தில் இவர் வெற்றிக் கனியை பறித்தார்.

ரிக்கி கில், டாக்டர் சையத் தாஜ், டாக்டர் மனன் திரிவேதி, உபேந்திரா சிவுக்குலா, ஜேக், உப்பால் ஆகிய 5 இந்திய வம்சாவழி வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக