Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 27 பிப்ரவரி, 2013

உத்தர பிரதேசத்தில் இறைச்சி ஏற்றுமதி ஆலையில் தீ விபத்து:ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் இறைச்சியை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அலானா குரூப் ஆலையில் நேற்று இரவு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ, இறைச்சி பதனிடும் அறைகள் மற்றும் குளிர்சாதன அறைகள் என முக்கியமான பகுதிகளுக்குப் பரவியது. பின்னர் பதப்படுத்துவதற்கான ரசாயனப் பொருட்கள் மற்றும் எரிபொருள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கும் பரவியது. இதனால் யாரும் நெருங்க முடியாத படி தீ கொளுந்துவிட்டு எரிந்தது.இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

பேரழிவை ஏற்படுத்திய இந்த தீ விபத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக