Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 பிப்ரவரி, 2013

மாடுகளை சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை : திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;
நெல்லை மாநகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தொழுவத்தில் கட்டி வளர்க்க வேண்டும். மாறாக தெருக்கள் மற்றும் ரோடுகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து கோசாலைகளைகளில் ஒப்படைக்கவுள்ளனர்.

கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் மாடுகளை உரிமையாளர்கள் மீட்க முடியாது. மேலும் மாட்டின் உரிமையாளர்கள் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக