Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 18 பிப்ரவரி, 2013

சென்னை மணலியில் அமோனியா வாயு கசிவு மூச்சு திணறலால் மக்கள் தவிப்பு


மணலி உரத் தொழிற்சாலையில் இருந்து, நேற்று காலை வெளியேறிய அமோனியா வாயுவால், அப்பகுதி மக்கள், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

சென்னை அடுத்த மணலியில், மத்திய அரசின் உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு, வாரத்திற்கு இருமுறை, இரவு நேரத்தில், அமோனியா வாயு வெளியேற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மணலி, அரிகிருஷ்ணபுரம், எடப்பாளையம், தில்லைபுரம், கலைஞர்நகர், லம்பைமேடு மற்றும் மாத்தூர் எம்.எம்.டி.ஏ., உள்ளிட்ட, பல இடங்களில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அமோனியா வாயு அதிகளவில் பரவியது. அப்பகுதியில் பரவிய அமோனியா வாயுவால், கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
பல மணி நேரம் அமோனியா கசிவு நிலவியதால். அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து சென்ற பலரும் துணிகளால் முகத்தை மூடியபடியே சென்றனர்.

ஆர்.டி.ஓ., சண்முகம் கூறுகையில், ""உரத் தொழிற்சாலையில், நேற்று காலை, 9:15 மணிக்கு, மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்னாக்கியை இயக்காததால், அமோனியா வாயு கசிவு வெளியேறியது. சில மணி நேரத்திற்கு பின் இயல்பு நிலை திரும்பியது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக