Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 28 பிப்ரவரி, 2013

இந்தியாவின் 82வது பொது நிதிநிலை அறிக்கை: சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த ரூ.3,511 கோடி ஒதுக்கீடு, பழங்குடினியினர் நலனுக்கு ரூ.24,598 கோடி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோர் நல திட்டங்களுக்கு ரூ.41,561 கோடி ஒதுக்கீடு


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்தியாவின் 82வது பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய சிதம்பரம், சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிவு நிலையில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியில் கொண்டு வருவதே மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைவது தற்போது கடினமான பணியாக உள்ளது என்று கூறினார்.

பட்ஜட் விவரங்கள் :
• மத்திய விற்பனை வரி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வழஙகப்படும்.

• எலக்ட்ரானிக்ஸ் சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு சுங்க வரி விலக்கு.

• 2025ஆம் ஆண்டு இந்தியா ரூ.250 கோடி பொருளாதார நாடாக உருவாகும்.

• 2017ஆம் ஆண்டு இந்தியா உலகளவில் 7வது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்.

வேளாண் விவசாய நிலங்கள் விற்பனையில் வரி விலக்கு.

பயணிகள் எடுத்துச் செல்லும் தங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிச் சலுகை ஆண்களுக்கு ரூ.50 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ரூ.18,000 கோடிக்கு புதிய வரிகள்
• 800 சிசி திறனுக்கு மேல் உள்ள வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரி அதிகரிப்பு

• வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரி விதிப்பு 75%ல் இருந்து 100% ஆக உயர்வு.

• திரைப்படத் துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு

• குளிர் சாதன வசதியுடன் கூடிய உணவகங்களுக்கு சேவை வரி

• நேரடி வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.13,300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• மறைமுக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.4,700 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• இதன் மூலம் ரூ.18,000 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

செல்போன் வரி உயர்வு
• ஆடம்பர வாகன இறக்குமதி வரி உயர்வு

• சிகரெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி உயர்வு

• கப்பல் கட்டும் தொழிலுக்கு உற்பத்தி வரி விலக்கு

• எஸ்யுவி வகை கார்களுக்கு உற்பத்தி வரி அதிகரிப்பு

• வெள்ளி உற்பத்திக்கு 4% உற்பத்தி வரி

• செல்போன்களுக்கான உற்பத்தி வரியில் மாற்றமில்லை.

• ரூ.2000க்கு கீழ் உள்ள செல்போன்களுக்கு வரியில் மாற்றமில்லை.

• ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள மொபைல்போன்களுக்கு 6% வரி

 • வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாகவே நீடிக்கிறது.

• ரூ.1 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரியும் விதிக்கப்படும்.

• வரி ஏய்வு தடுப்புச் சட்டம் ஏப்ரல் 2016 முதல் அமலுக்கு வரும்.

• விவசாயப் பொருட்களுக்கு பண்டக சாலையில் வைப்பதற்கான வரி விலக்கு

• இறக்குமதி செய்யப்பட்ட செட்-டாப் பாக்ஸ்களுக்கு வரி 5% முதல் 10% ஆக உயர்வு

• 50 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள் விற்பனையில் 1% வரி பிடித்தம்

• கலால், சுங்க வரிகளில் மாற்றமில்லை.

• தோல் தொழில் நிறுவன இயந்திரங்களுக்கு வரி குறைப்பு.

ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு
• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான 10% கூடுதல் வரி வசூல் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.

• பணக்காரர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம்

• ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெருவோரின் வரியில் ரூ.2000 வரை விலக்கு அளிக்கப்படும்.

• காப்பீட்டுக்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
• குழந்தைகளுக்கான தேசிய நல நிதி உருவாக்கப்படும்.

• உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

• வரிக் கொள்கையை மறு ஆய்வு செய்ய புதிய ஆணையம்.

• தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி

• வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 3.4-3.8 சதவீதம்.

• நேரடி வரிகளிலும் மாற்றமில்லை.

•  கல்விக்கான கூடுதல் வரி விதிப்பு தொடரும்.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அணுமின் சக்தி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு கூடுதல் நிதி.

• இயற்கை எரிவாயு விலை நிர்ணயிப்பில் புதிய கொள்கை.

• எப்எம் ரேடியோ சேவைக்கு 839 உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படும்.

•அஞ்சல் துறை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

• அஞ்சல் துறை திட்டத்துக்கு கூடுதலாக ரூ.530 கோடி ஒதுக்கீடு.

• கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

• இடிஎப் திட்டங்களில் ஓய்வூதியை நிதியை முதலீடு செய்ய அனுமதி

• 10 லட்சம் மக்கள் வசதிக்கும் நகரங்களில் எல்ஐசி அலுவலகம்.

• வங்கிகள் தரும் விண்ணப்பங்களே எல்ஐசிக்கும் பொருந்தும்.

• செபிக்கு கூடுதல் அதிகாரம்.

• அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏடிஎம் வசதி. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும்.

• நுண் கடன் திட்டங்களை விநியோகிக்க வங்கி தொடர்பாளர்களுக்கு அனுமதி

• பாறை எரிவாயு அகழ்வாய்வுக்கு புதிய கொள்கை.

• கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் வரும் நிதியாண்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

•. கல்வித் துறை மேம்பாட்டுக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

பெண்களுக்கு என  தனி வங்கி
• பெண்களுக்கென முதல் தனி வங்கி. அந்த வங்கியில் முதற் கட்டமாக ரூ.1000 கோடி முதலீடு

வரும் அக்டோபர் மாதத்துக்குள் பெண்களுக்கான தனி வங்கி துவக்கப்படும்.

• ஊரக தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

• உணவுப் பாதுகாப்புத் திட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

• குடிநீரை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு
நிலக்கரி இறக்குமதி செய்வது இந்தியாவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

• நிலக்கரி இறக்குமரி கவலை அளித்து வருகிறது.

• ஜவுளித் துறைக்கு ரூ.2400 கோடி ஒதுக்கீடு.

• ஜவுளி மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு

• ராஞ்சியில் இந்திய உயிரி தொழில்நுட்ப மையம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.

• பொது வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்
தூத்துக்குடியில் புதிய துறைமுகம் உருவாக்கப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• குஜராத், மகாராஷ்டிராவில் இரு தொழில் நகரங்கள் அமைக்கப்படும்.

• ரூ.1650 கோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும்.

• பயோடெக்னாலஜி கூடங்கள் சட்டீஸ்கரில் அமைக்கப்படும்.

• 6 மருத்துவக் கல்லூரிகள் துவங்க ரூ.1650 கோடி ஒதுக்கீடு

• ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு ஒரு லட்சம் வரிச் சலுகை

• தூத்துக்குடியில் புதிய துறைமுகம். துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.7500 கோடி ஒதுக்கீடு

• விலைவாசி உயர்வுக்கு ஏற்ப லாபம் தரும் கடன் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவில் கல்வித் துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

• வரும் ஆண்டில் கல்விக்காக ரூ.65,867 கோடி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 17% அதிகமாகும்.

• பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.13,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அனைவருக்கும் கல்வி திட்டத்தை திறம்பட செயல்படுத்த ரூ.27,258 கோடி ஒதுக்கீடு.

சித்தா, ஆயுர்வேதத்துக்கு ரூ.1,069 கோடி ஒதுக்கீடு

தேசிய சுகாதார இயக்கத்தில் ஆயுர்வேதம், சித்தாவை செயல்படுத்த ரூ.1,069 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• சுகாதாரத் துறைக்கு ரூ.37,330 கோடி ஒதுக்கீடு.

• ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு ரூ.80,200 கோடி ஒதுக்கீடு.

• குறுகிய கால பயிர் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடரும்.

•  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பது முக்கிய குறிக்கோளாக எடுத்து செயல்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், குழந்தைகள் நலனுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• மனித வள மேம்பாடுக்காக ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த ரூ.3,511 கோடி ஒதுக்கீடு

•. பழங்குடினியினர் நலனுக்கு ரூ.24,598 கோடி ஒதுக்கீடு.

• தாழ்த்தப்பட்டோர் நல திட்டங்களுக்கு ரூ.41,561 கோடி ஒதுக்கீடு

•. குழந்தைகள் நலனை மேம்படுத்த ரூ.97,134 கோடி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

• இந்தியாவின் உணவு பொருள் பணவீக்கம் கவலை அளிப்பதாக உள்ளது.

•வெளிநாட்டில் இருந்து வரும் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிப்பால், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது.

•பொருளாதாரம் தொடர்ந்து சவாலானப் பணியாகவே உள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்.

•இந்தியாவை விட சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகள் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன.

• 2012-13ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக