Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!


இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!
பண்ணை முதலாளிகளுக்குத்தான் 
பட்டு மெத்தையின் அவசியம்!
பாமரர்களின் ஊழியர் இவர்.
பாயே இவருக்குப் போதுமானது!

இதில் அதிசயம் எதுவுமில்லை!
தலைக்கனம் இருந்தால்தானே 
இறக்கிவைக்க தலையணை தேவை?

நீண்ட துயில் கொள்ள நேரமுமில்லை!
தூங்கும் சமுதாயத்தை 
தட்டியெழுப்பும் கடமை 
இவருக்கு இருப்பதால் !

சட்டை கசங்குமே எனும் சங்கடமில்லை!
சமூகம் கசங்காமல் இருந்தால் சரிதானே!

பாதுகாப்பு குறித்த கவலையில்லை!
படைத்தவன் கிருபையை 
பற்றி நடப்பதால்!

இவரைப்போல் எவருமில்லை!
இதயம் முழுதும் ஈரம் இருப்பதால்!

அன்புடன் 
கவிமகன் காதர் 
காயிதே மில்லத் பேரவை 
கத்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக