Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 ஜூன், 2013

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்பு

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்புகளுக்கு வரும் ஜூன் 5 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2013-14-ஆம் கல்வியாண்டிற்கு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு   பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு (முன்னாள் படைவீரர், சிறந்த விளையாட்டு வீரர் மற்றம் மாற்றுத்திறனாளிகள்) மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தப் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 5.06.2013 முதல் 21.6.2013 வரை வழங்கப்படும்.   தொழிற் படிப்பு இடையே புகுத்தப்பட்ட sandwich course பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அத்தகைய படிப்பு நடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படும்.

பட்டயப் படிப்புச் சேர்க்கைக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பில் (SSLC/Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பலவகை  தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள்:    21.6.2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக