Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து

மதுரை விமான நிலையத்தில் ரூ.130 கோடியில் சர்வதேச தரத்துடன் புதிய டெர்மினல் கட்டப்பட்டது. விமான நிலைய ஓடுதளமும் விமானங்கள் வந்து செல்லும் வகையில் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை,கொழும்பு இடையே விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இமிகிரேஷன் சோதனை மையம் செயல்படவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கிடையே மலேசியாவிலிருந்து 23 சுற்றுலா பயணிகளுடன் இரண்டு சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதியம் மதுரை விமான நிலையத்தில் இறங்கியது. இமிகிரேஷன் சோதனையை எம்பி மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். விரைவில் பன்னாட்டு பயணிகள் விமானங்கள் மதுரைக்கு இயக்கப்பட உள்ளன. இலங்கைக்கு செப்.8ம் தேதி முதல் மிகின் லங்கா நிறுவனம் விமானம் இயக்கப்பட இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானம் செப்டம்பர் 20ம் தேதி முதல் இலங்கைக்கு விமான சேவையை துவக்குகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக