Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 21 மே, 2013

அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் மோடி அரசு : சரத் பவார்

அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் அரசு. அந்தத் தவறை, தன் போலீஸ் துறையின் திறமையாக மெச்சிக் கொண்டவர், முதல்வர், நரேந்திர மோடி,'' என, மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான, சரத் பவார் கூறினார்.


 தானே நகரின், மும்பாரா என்ற இடத்தில், அமைச்சர் சரத் பவார் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

கூட்டத்தில், சரத் பவார் கூறியதாவது:மும்பாரா பகுதி, ஒரு காலத்தில், அனைத்து சட்ட விரோத செயல்களுக்கும் தாயகமாக விளங்கியது. இப்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மாநிலத்தை ஆளும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. அடுத்த முறையும், இந்தப் பகுதி மக்கள், எங்கள் கூட்டணி வேட்பாளர்களையே ஆதரிப்பர்.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் போலீஸ் துறையை மெச்சிக் கொள்பவர். 2004ம் ஆண்டு, அப்பாவி முஸ்லிம் பெண் இஷ்ரத் ஜஹானையும், அவருடன் இருந்த இருவரையும், பயங்கரவாதிகள் என கருதி, குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்தவர்கள் என, கூறிய மோடி, மும்பை போலீஸ் செய்ய முடியாத காரியத்தை, குஜராத் போலீசார் செய்ததாக, பெருமை அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில், இஷ்ரத் ஜஹான் அப்பாவி பெண்; அவருக்கும், பயங்கரவாதத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு, சரத் பவார் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக