Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 23 மே, 2013

நெல்லையில் சட்டக்கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் மந்தம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தின் மூலம் நெல்லை, மதுரை, சேலம், திருச்சி உள்பட பல இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. இந்த சட்டக்கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

மருத்துவம், என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். ஆனால் சட்டக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வாங்குவதற்கு மாணவ–மாணவிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. நெல்லை சட்டக்கல்லூரியில் விண்ணப்பங்கள் விற்பனை மந்தமாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக