Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 26 டிசம்பர், 2012

சமூகத்தை ஒருங்கிணைப்பதே நம் தலையாயப்பணி, ஒன்றுபட்டு பணியாற்றி தமிழக முஸ்லிம் சமூகத்தை தலைநிமிரச் செய்வோம் : காயல் மஹபூப்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செய லாளரும், மணிச்சுடர் நாளேடு செய்தி ஆசிரியருமான காயல் மகபூபுக்கு ஹாங்காங் காயிதெ மில்லத் பேரவை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹாங்காங் ஷிம்ஷாஷி பூங்காவில் 22-12-2012 இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மூத்த பிரமுகர் அப்துல் வதூத் தலைமை தாங்கினார். இர்ஷாத் அலி இறைமறை ஓதினார்.

ஹாங்காங் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் வரவேற்புரை யாற்றினார். காயல் மகபூபை வரவேற்று இந்திய முஸ்லிம் சங்க முன்னாள் தலைவர் பாக்கர் உரையாற்றினார்.

மணிச்சுடர் நாளிதழ் வெள்ளிவிழா சிறப்பு மலரை கீழக்கரை ஹஸன் பாக்கர் வழங்க காயல்பட்டினம் ஹசன் மரைக்கார் பெற்றுக் கொண் டார். மணிச்சுடர் நாளிதழை நீடூர் அப்துல் ரஹ்மான் வழங்க காயல்பட்டினம் இன்ஜினியர் முஸ்தபாவும், பிறைமேடை இதழை உவைஸ் வழங்க வி.எம்.எம். தம்பியும், டைம்ஸ் ஆப் லீக் இதழை கதீபும் மொகு தூம் வெளியிட புகாரி அப்துல் ரவூப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் காயல் மகபூப் பேசியதாவது-

இந்த கடுமையான குளிரில் திறந்த வெளியில் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு கொண்டுள்ளது மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இந்த வரவேற்பு என்னைப் போன்றோ ரின் பொது நலப் பணிகளுக்கு நீங்கள் தரும் அங்கீகாரம்.

கடல் கடந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தாயகத்தை மறக்க மாட்டோம்; சமூகத்திற்கு பணி செய்வோம்; சொந்த ஊர் வளர்ச்சிக்கு துணை புரிவோம் என்ற உறுதியுடன் பணியாற்று வது பெருமைக்குரியது.

இன்று மூத்தவர்கள் மட்டு மல்ல, இளைய தலைமுறையி னர் பொதுநல சேவையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அவர்களிடத்தில் அறிவும், ஆற்றலும் நிரம்ப உள்ளது. இணைய தளத்தின் மூலம் நட்பு வட்டாரத்தையும், தங்கள் பணிகளையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்க முடிகிறது.

ஒன்றில் மட்டும் நீங்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். ஆன்மீகம், அறிவியல் என நீங்கள் எந்த கொள்கையில் இருந்தாலும் ஊர், சமுதாயம் என்று வரு கின்ற போது ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அந்த ஒற்றுமையில் தான் நம் சமூகத்தின் மரி யாதை, கண்ணியம் அனைத் தும் இருக்கிறது. எந்தச் சூழ் நிலையிலும் அதை விட்டுக் கொடுக்கக்கூடாது.

வாழும் நம்மவருக்கிடையில் பிளவுகளும், பிரச்சினைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கு மானால் அது சமூகத்தின் முன்னேற்றத்தை தடைபடுத் தும்.

இன்று வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் நல்ல வேலைவாய்ப்புகளில் இருக்கின்றனர். அவர்களின் அறிவு கூர் தீட்டப்பட்டு, சமூகப் பணிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

ஹாங்காங் நாட்டில் தமிழக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கிறார்கள். குறிப்பாக காயல்பட்டினம், கீழக்கரை, நீடூர், கூத்தாநல்லூர் போன்ற ஊர்க் காரர்கள் இவர்கள்.

தமிழகத்தின் பிரபலமான இந்த ஊர்களில் கூட அவசியம் கவனத்துடன் செய்ய வேண்டிய வைகளை கோட்டை விட்டு விடுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அதில் நாம் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் நமது எண் ணிக்கை குறைகிறது. பிறகு இடஒதுக்கீட்டிற்காக சதவீதம் எப்படி உயர்த்திக் கேட்க முடி யும்?

தேசிய அடையாள அட்டை இன்று மிக மிக அவசியமாகும். வருங்காலத்தில் அனைத்திற் குமே இதுதான் ஆதாரமாக இருக்கப் போகிறது. நம்மில் எத்தனை பேர் விண்ணப்பித் துள்ளோம்? எண்ணிப் பாருங் கள்.

சச்சார் குழு பரிந்துரை அடிப்படையில் எவ்வளவோ மானிய உதவிகள், குறிப்பாக கல்விக்காக மத்திய அரசு தருகிறது. நம் பிள்ளைகளில் எத்தனை சதவீதம் இதனை பயன்படுத்துகின்றனர். மதர ஸாக்களின் கல்வியை மேம் படுத்த பல நூறு கோடி ரூபாய் களை ஒதுக்கினால் நம்மவர்கள் விண்ணப்பிப்பதற்கு கூட முன் வருவதில்லை.

குடும்ப அட்டைகளில் நமது பெயரை சரியான உச்சரிப்பில் பதிவு செய்யக்கூட நாம் அக்கறை காட்டுவதில்லை. பெயரில் என்ன இருக்கிறது என அலட்சியமாக இருந்து விடு கிறார்கள். தேவைப்படும் போது அங்கலாய்க்கிறார்கள். அப்படி சங்கடப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதுபோன்ற விஷயங்களில் எல்லா ஊர்கள்தோறும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது சமூகத்திற்கு பயனளிக் கும். இன்று கேரள முஸ்லிம் கள் இந்திய அளவில் பொருளாதார, கல்வி - வேலைவாய்ப்பில் முதலிடம் வகிக்கிறார்கள். ஆனால் அவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள மேற்கு வங்க முஸ்லிம்கள் தாழ்ந்த நிலையில் உள்ளனர். அஸ்ஸாம் அதைவிட பரிதா பம். ஏன் இந்த நிலை? என்று பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள கேரள முஸ்லிம் கள் சாதனைபடைக்கிறார்கள். தமிழ்நாட்டில் 6 சதவீதம் மட்டுமே உள்ள முஸ்லிம்கள் 60 பிரிவாக சிதைந்து கிடக்கிறார்கள். எனவே, சமூகத்தை ஒருங் கிணைப்பதே இன்றைய தலையாய பணி. அந்தப் பணி யில் அக்கறை காட்டுங்கள்.

இவ்வாறு காயல் மகபூப் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக