Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 21 டிசம்பர், 2012

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் : எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை


டெல்லியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவா லியாவைச் சந்தித்த  கூட் டத்தில் வேலூர் நாடாளு மன்ற உறுப்பினரும், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளருமான எம். அப்துல் ரஹ்மான் பேசுகையில், 12-வது ஐந்தாண்டுத் திட்டத் தில் சிறுபான்மை சமூகத்த வருக்கான மேம்பாட்டு நிதியை உயர்த்தி, திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 18-12-2012 அன்று முஸ்லிம் எம்.பி.க்களின் குழு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவா லியாவைச் சந்தித்து கலந்துரை யாடினர். இந்தக்கூட்டம் புதுடெல்லி யோஜனா பவனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பேசினார்.

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சிறுபான்மை சமுதா யத்தவருக்கான மேம்பாட்டு நிதியென ரூபாய் 17,323 கோடியை மாத்திரமே அரசு அறிவித்திருக்கிறது. திட்ட மதிப்பீடாகக் கணிக்கப்பட்ட ரூ.44,020 கோடி வெகுவாகக் குறைக்கப்பட்டு மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயமாக போதாது. கல்வி உதவித் தொகை, கல்விக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதிகள், தொழிற் பயிற்சி, பொருளாதார உதவி கள் என பலவகையிலான திட்டங்கள் முழுமையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த வேண்டுமானால் தொடக்கத் தில் வரையரை செய்யப்பட்ட தொகையான 44,030 கோடி ரூபாயை ஒதுக்கித் தர வேண் டும். சிறுபான்மையினர் நலனில் அக்கரை கொண்ட அரசு என்று சொல்வதில் அர்த்தம் இருக்க வேண்டுமானால் இந்த நிதி ஒதுக்கீடு அவசியம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக