Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 12 செப்டம்பர், 2012

மனித உருவில் மிருகங்களின் அட்டகாசம் !

ஊத்துக்கோட்டை கூனிபாளையத்தை சேர்ந்தவர் எழிலரசன் (எ) நாகலிங்கம். இவருக்கும், கடம்பத்தூர் அருகே பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் மண்டபம் களை கட்டியிருந்தது.

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூனிபாளையத்தை சேர்ந்த வினோத், பிரதாப், பாபுராஜ், பிரேம் ஆகியோர், ‘திருமணத்தில் பிரியாணி போடாதது ஏன்' என கேட்டு போதையில் தகராறு செய்தனர். அதோடு, மணமேடைக்கு சென்றனர். அங்கு, மணமக்களுக்காக கேக் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து, மணமகளுக்கும் மணமகனுக்கும் ஊட்டினர். பின்னர், கேக்கை எடுத்து மணமக்களின் முகத்திலும் பூசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதை பார்த்து ஆத்திரம் அடைந்த மணமகளின் உறவினர், பிளஸ் 2 படிக்கும் கவுதம் தாசா (17) என்ற மாணவன், 4 பேரையும் தட்டி கேட்டான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த 4 பேரும், அங்கு கிடந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து கவுதம் தாசாவை தாக்கினர். அதில், கவுதம் தாசாவின் வயிறு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் அலறி துடிப்பதை பார்த்து உறவினர்கள் ஒன்று திரண்டனர். அதற்குள் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கவுதம் தாசாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் நேற்றிரவு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்ஐ சக்கரை வழக்கு பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக