Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 10 அக்டோபர், 2012

2 ஆண்டுகளில் 52 பொறியியல் கல்லூரிகள் மூடல்


தொழில் முறை கல்விக்கு ‌ஒரு பொற்காலம் என்பதை குறிப்பிடுகையில் புதிதாக நூறு கல்வி நிறுவனங்கள் உருவாகின்றன. அதே வேளையில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் 2011லிருந்து 225 பி-கிரேடு பள்ளிகளும் 52 பொறியல் கல்லூரிகளும் மூ‌டிவிட்டன என தெரியவந்துள்ளது.

பல கல்லூரிகளில் பொறியியல் மற்றும் மேலாண்மைப் பாடப் பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, அதிக மாணவர்களை ஈர்த்த எம்.பி.ஏ. படிப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மவுசு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2011-12ல் மட்டும் நாடு முழுவதும் 146 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (பி-ஸ்கூல்) தொடங்கப்பட்டன. எனினும், அதே கால கட்டத்தில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த 124 பி-ஸ்கூல் மூடப்பட்டன. அதேபோல் 84 கல்லூரிகளில் எம்.சி.ஏ. படிப்பு நிறுத்தப்பட்டு விட்டன.

இந்த ஆண்டு நிலைமை மேலும் மோசமடைந்து விட்டதாக ஏ.ஐ.சி.டி.இ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் 101 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், புதிதாக 82 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக