Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 20 நவம்பர், 2012

7வது நாளாக காசா மீது இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல் : அமெரிக்கா தவிர உலக நாடுகள் கண்டனம்


 7வது நாளாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ராக்கெட் குண்டுகள், வான்வழி துப்பாக்கி சூடு மூலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 111 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். சமீபத்தில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் ஓரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள், பெற்றோருடன் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் ஏவுகனை தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் பள்ளிக் கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளை தவிர உலக நாடுகள் இஸ்ரேலின் அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.நா.சபையில் கண்காணிப்பு உறுப்பினராக பாலஸ்தீன அரசு முயற்சித்து வருகிறது. நவம்பர் 29ல் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்படி ஐ.நாவில் கண்காணிப்பு உறுப்பினராக ஆகும் பட்சத்தில், தனது தரப்பு நியாயங்களை பாலஸ்தீன அரசு அறிவிக்க ஒரு வாய்ப்பு அமையும். இது இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாலஸ்தீனம் இஸ்ரேலை எச்சரித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக