Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஊரணிகளை காணவில்லை:கலெக்டரிடம் புகார்

"ராமநாதபுரம் நகராட்சியில் ஊரணிகளை காணவில்லை' என, மக்கள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் வெண்குளம் ராஜூ, கலெக்டர் நந்தகுமாரிடம் அளித்த மனு:ராமநாதபுரம் நகராட்சியில் நீர்நிலைகள் குறித்து, தகவல் உரிமை சட்ட தகவலின்படி, 31 ஊரணிகள் மற்றும் பொது கிணறு பயன்பாட்டில் இருந்தது. தற்போது, ஆக்கிரமிப்பால், மழைநீர் வெளியேற வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.ஐகோர்ட் உத்தரவுபடி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதன்படி, கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, காணாமல் போன ஊரணிகளை கண்டுபிடித்து, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசாரித்து நடவடிக்கை எடுக்க, நகராட்சிக்கு கலெக்டர் நந்தகுமார் பரிந்துரைத்தார். நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், "நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக