Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 10 ஏப்ரல், 2013

இந்தியாவில் உயர் கல்வி தரம்: குடியரசுத் தலைவர் கவலை


உயர் கல்வி நிறுவனங்களில் தரம் என்பது பெரும் சவாலாக உள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

குருஷேத்ராவில் தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரணாப், "தரம், அணுகுமுறை ஆகியன உயர் கல்விக்கு அவசியமான ஒன்று எனவும், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி கழகங்கள் மாணவர்கள் கொந்தளிப்பு அதிகம் நிறைந்த இடமாக உள்ளது எனவும், உலகில் உள்ள முதல் சிறந்த 200 பல்கலைகழகங்கள் பட்டியலில் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை" எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக