Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 26 செப்டம்பர், 2012

திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை பள்ளிகளுக்கு நிதி: விண்ணப்பிக்க வலியுறுத்தல்

சிறுபான்மை பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி நிதி உதவி பெற தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.சிறுபான்மை கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.இத்திட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், கம்ப்யூட்டர் அறைகள், ஆய்வகம், நூலகம், கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.


மத்திய அரசு திட்டத்தின் கீழ் முஸ்லிம், கிறிஸ்தர், சீக்கியர், பவுத்தர் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் சார்பாக நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர் நடத்தப்படுகின்ற பள்ளிகளின் முழு அஞ்சல் முகவரி, அலுவலக டெலிபோன் எண், பள்ளி தாளாளர் செல்போன் என 3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்க், சங்கம், டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் நிபந்தனைகளை நிறைவு செய்ததை உறுதி செய்து கருத்துருக்களை அனுப்ப வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பள்ளிகள் தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் விதிகள் 1977 விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல்பட கூடாது.
அரசால் மானியம் பெறும் பள்ளிகள் மானியம் சார்பான விபரங்களை ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்து சான்று பெறப்பட வேண்டும். செலவின மதிப்பீடு ஆடிட்டரால் தயார் செய்யப்பட்டு பொதுப்பணித் துறை நிர்வாக இன்ஜினியரால் மேலோப்பம் செய்யப்பட வேண்டும்.
பதிவு துறையின் கீழ் உள்ள சங்கம் பதிவு சட்டத்தின் கீழ் தன்னார்வ முகமைகள் 6 மற்றும் 7 சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மை நிறுவனங்கள் சிறுபான்மை அந்தஸ்து உறுதி செய்யப்பட்ட அரசாணை இணைத்து அனுப்ப வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை கல்வி நிலையங்கள், பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கருத்துருக்களை 4 பிரதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக சமர்ப்பிக்க சிறுபான்மை பள்ளி தாளாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக